வினாடிக் கதை: அவனும் ஒரு நண்பனே!

ஏனோ தெரியவில்லை.அவனை எனக்குப்பிடிக்கவில்லை.தினசரி என் அலுவகத்தில் அவனை நான் சந்தித்தாலும் அவனுடன் பேச எனக்கு ஏனோ விருப்பமில்லை.அவனை அருகில் சந்திக்கும் போதெல்லாம், பாராமுகமாய்சென்றிருக்கிறேன்.

அன்று ஒருநாள் வேலையின்போது வந்த தொலைபேசியில் ,வந்த துயரச் செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. மேசையில் சாய்ந்துவிட்டேன்.

சிலநிமிடங்கள் கழிந்திருக்கும்.இதமான காற்று என்னை வருடஎன்தலையை நிமிர்த்திப்பார்க்கிறேன். என்னால் வெறுக்கப்பட்டவன் விசிறியால் விசுக்கியபடி, எனக்காக கையிலே கோப்பிக்கப்புடன் நிண்டு கொண்டிருந்தான்.

0 comments:

Post a Comment