நாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன?......(01)



ரொரொண்டோ   நகரில் பெருகி நிற்கும் ஆலயங்களில் மத்தியில்  ஒரு காளியம்மன் ஆலயம்.தேர்த்திருவிழாவுக்கு முதன்நாள் இரவு சப்பறத் திருவிழா வுக்கு சென்று வீடு திரும்பிய நான் என்னுடைய முக்கிய அடையாள அட்டையினை  கைப்பையுடன் ஆலயத்தில் தவற விட்டதனை உணர்ந்தேன்.மறுநாள் அதிகாலையில் ஆலயம் சென்று விசாரித்தபோது,தாம் பிஸி,பின்னர் வரும்படி என்னைதிருப்பி அனுப்பினர்.இரண்டு நாட்கள் கழிந்தபின்னர் அங்கு நான் சென்றபோதும்,இதே பதிலை வழங்கினர்.நம்பிக்கையினை இழந்த நான் அவ் அடையாள அட்டைக்குரிய அலுவலகம் சென்று,இலவசமாக விண்ணப்பித்து,தற்காலிக அட்டையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.மூன்று வாரங்களில் மேற்படி ஆலயத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் எனதுகைப்பையையும்,அடையாள அட்டையையும்,கிடைத்துள்ளதாகவும்,வந்து பெற்றுக்கொள்ளும்
படியும் கேட்டு இருந்தார்கள்.மகிழ்ச்சியுடன் சென்ற என்னிடம்,பதிலாக 500 டொலர் காசு கொடுங்கள் அல்லது 1500  டொலர் பெறுமதியான பூசை   ஒன்றை எடுத்துச் செய்யுங்கள் என்று கோரினர்.
திகைத்து நின்ற என்னிடம் தொலைபேசி இலக்கத்தினை வாங்கி என் பொருளைத் தந்து விட்டனர்.
  ""அர்த்தமுள்ள இந்து மதம் என்னசொன்னது?"".....................சிவமணி,சிவப்பிரகாசம்.

0 comments:

Post a Comment