ஒளிர்வு-(12) ஐப்பசித்திங்கள்...................... ............................ சிந்தனை ஒளி:

Ø  ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.
Ø  மனிதவாழ்க்கை மலருவது ஒரே முறைதான், அந்த ஒரே வாழ்க்கையை, ஒரே உயிருக்கே, கொடுத்து வாழ வேண்டும்..
Ø  பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ஏறு", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.
Ø  காதல் என்பது பூவைப் போன்றது, ஒரு மரத்தில் பூக்கின்ற எல்லாப் பூக்களும் காய்ப்பதில்லை, ஏராளமானவை பூவாகவே உதிர்ந்துவிடும்.
Ø  நினைத்தவுடன் திரும்பக்கூடிய இடமென்றால், யோசிக்காமல் கால் வைக்கலாம் -ஆனால் போனால் திரும்பவே முடியாத இடமென்றால், நன்றாக யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.
Ø  ஒரு பெண், தன் அழுத்தமான பொறுமையினால்,ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், தன் அடங்காபிடாரித் தனத்தாலே அதை அழித்து, வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.
Ø  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும். போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.
Ø  அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.. நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது.
Ø  ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு.
Ø  வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை. தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
Ø  வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். அதற்குமுன்  ………. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்!
Ø  நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால்…… நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.
Ø  குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..
Ø  சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Ø  வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்!



1 comments:

  1. vinothiny pathmanathan dkWednesday, October 19, 2011

    நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். அருமையான வரிகள் .ஒவ்வொரு வரிகளும் அருமை.

    ReplyDelete