சிரிக்க...சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ் 


இப்ப கடியுங்க பார்க்கலாம்

 இரவெல்லாம் ஒரே கொசுக்கடியில் அவதித்த சர்தார், விஷத்தை மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு கொசுக்களை பார்த்து…

இப்ப கடிங்க பார்க்கலாம்,-... செத்துடுவீங்க”

❋❋❋❋❋❋❋❋❋

1887இல் என்ன நடந்தது?

ஆசிரியர்:1882ல் என்ன நடந்தது?

சர்தார்:எனக்கு தெரியாது சார்

ஆசிரியர்: மக்கு,மக்கு.அதுதான் சுப்ரமணிய பாரதியார் பிறந்ததிகதி.  சரி...சரி... 1887 ம் ஆண்டு என்ன நடந்தது? சொல்லு பாப்போம்.

சர்தார்: பாரதியாருக்கு ஐந்தாவது பிறந்தநாள் நடந்தது சார்.

ஆசிரியர்: !!!!!

❋❋❋❋❋❋❋❋❋

டியூப் லைட்

சர்தார்ஜி ஒருவர்   டியூப் லைட் ரின் அடியில் திறந்த வாயுடன் நின்று கொண்டிருந்தார்.

 ஏன் தெரியுமா?

 டாக்டர் சொன்னாராம், "இன்றைக்கு சாப்பாடு லைட்டா இருக்க வேண்டும்" என்று.

 ❋❋❋❋❋❋❋❋❋❋

ஜென்மமே வேணாம்

கணவன் ; சாமி கிட்ட என்ன மா வேண்டிகிட்ட?

மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்கநீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்

❋❋❋❋❋❋❋❋❋❋

இல்லாத மின் 

Man1: என்ன சார் சுவிட்ச் போர்டை தண்ணி உத்தி கழுவுரிங்க. ஷாக் அடிசிடும்ல?

Man2: தம்பி நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா?

❋❋❋❋❋❋❋❋❋❋

கொடுமை

நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்.-நான் இருப்பேன்.

ஏனென்னாறால் அந்தக் கொடுமையை என்னால் பார்க்கமுடியாது..!

❋❋❋❋❋❋❋❋❋❋

வேலை இல்லையா?

ஒருவன்: டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

மற்றவன்:நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

❋❋❋❋❋❋❋❋❋❋

மனைவி ரிங்டோன் 

ஒருவன்:""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''

மற்றவன்:""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''

❋❋❋❋❋❋❋❋❋❋

அப்பாவை கூட்டிட்டு 

ஆசிரியர்: ""நேற்று ஸ்கூலுக்கு லேட்டா வந்ததுக்கு உங்க அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னேனே, ஏன் கூட்டிட்டு வரலே?''

மாணவன்:""சாரி சார், எங்கப்பா ஆபீஸýக்கு லேட்டாப் போனதால அவர் அவங்க அப்பாவை கூட்டிட்டு போயிருக்காரு''

❋❋❋❋❋❋❋❋❋❋

எங்கடி போன?

கணவன்: நான் நாயா கத்திட்டு இருக்கேன், எங்கடி போன?

மனைவி: நாய் பிஸ்கெட் வாங்கப் போனேங்க...!

❋❋❋❋❋❋❋❋❋❋

தூங்குறது

ஒருவர்: ""ஆபிஸ் வேலைய வீட்டிலேயும் பார்ப்பியாமே, என்ன அது?''

மற்றவர்:""தூங்குறதுதான்''

❋❋❋❋❋❋❋❋❋❋

முன்னாடி யோசி

நோயாளி ""டாக்டர் 100 வயது வரை வாழறதுக்கு என்ன பண்ணனும்?''

டாக்டர்:""இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்''

❋❋❋❋❋❋❋❋❋❋

நடு ரோட்ல

ஒருவன்:""என்னடா! டிராபிஃக் போலீஸ் ஆயிட்டே போலிருக்கு!''

மற்றவன்:""எங்க வாத்தியார் வாக்கு பலிச்சிடுச்சு! நீ நடு ரோட்ல தான்டா நிப்பே'ன்னாரு''

❋❋❋❋❋❋❋❋❋❋

உயிரை விட்டுடு

ஒருத்தி: ""அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?''

மற்றவள்:""நெய் மைசூர்பான்னா உயிரை விட்டுடுவேன்னு அவங்க தான் சொன்னாங்க!''

❋❋❋❋❋❋❋❋❋❋

யார் பக்கம்?

ஒருவன்: ""உன் மனைவிக்கும் அம்மாவுக்கு சண்டை வந்தா நீ யார் பக்கம்?''

மற்றவன்:""பீரோவுக்கு பின்பக்கம்!''

❋❋❋❋❋❋❋❋❋❋

டாக்டர்  சொல்லி இருக்காரு

ஒருத்தி: ""உன் மாமியார் பாத்ரூம்ல வழுக்கி விழுந்தப்போ நீ தூக்கவேயில்லையாமே''

மற்றவள்:""டாக்டர், நான் வெயிட்டையே தூக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு''


தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment