ஒளிர்வு-(40)- மாசி,2014 எம்மைப்பற்றி....,

வணக்கம்,முதலில்-
சிந்தனைஒளி
“வெற்றிபெற-
காது கொடுத்து கேளுங்கள்;குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்”.
-.வான்பர்ன்
இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி
இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்

நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர் தொகையானது தீபத்தின் வளர்ச்சிக்கு பெரும் உச்சாகத்தினை வழங்குகிறது.  அனைவருக்கும் இப்புதிய ஆண்டில்அனைவரும் நலம் வாழ  மீண்டும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு தொடர்வோம்.

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :08

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
எமது மூதாதையர் 
குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் ,முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது என்றும்,அதாவது குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்கின்றனர்
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே

மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியை தொல்காப்பியர் மேலே கூறியவாறு 3000-2500 ஆண்டுகளுக்கு முன் சொல்லி சென்றார்[தொல்காப்பியம்/பொருளதிகாரம்/மரபியல்:27-33].அதாவது உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப் பகுத்து "மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே" என மேலும் உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளை அப்போதே கூறியுள்ளார் அவர் கூற்றில் சில சில பிழைகள் உண்டு.உதாரணமாக தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று கூறியது,[தேனீக்கு மூக்கு இல்லை/Bees, Like All Insects, Do Not Have Noses With Nasal Passages]   மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக கூறியது[இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை.]. போன்றவை ஆகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அறிவியலின் கருத்துப் படி மனிதர் படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து 5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பல மனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர் என்கிறது.
அங்கு தமிழே 12000 வருடங்களுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்ட மொழியாக இருந்துள்ளது எனவும்  நம்புகிறார்கள்.அத்துடன் அங்கு தலைமை தெய்வமாக சிவா இருந்ததாகவும் மேலும் அது  வேத சமுகம்  எனவும் சிலர்
கூறுகிறார்கள். இந்திய சமுத்திரத்தின் திடீர் வெள்ளத்தால் தள்ளப்பட்ட இவர்கள்,இரண்டு  பிராந்தியத்திற்கு [நிலப்பரப்பிற்கு ] போயிருக்கலாம்.ஒரு தொகுதி சரஸ்வதி ஆறு வழியாக வட இந்தியாவிற்கும்[சிந்து சமவெளி நாகரீகம்] மற்ற தொகுதி பெர்சியன் கடல் வழியாக மேசொபோடோமியா [இன்றைய ஈராக், துருக்கி,சீரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதி] விற்கும் போயிருக்கலாம் அல்லது வட இந்திய ஊடாக போயிருக்கலாம்[சுமேரிய நாகரீகம்] .அவர்கள் இந்த கோட்பாட்டிற்கு பாகிஸ்தானில் உள்ள இடங்களின் பெயர்களை சான்றாக
கூறுகிறார்கள்.உதாரணமாக: கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) & கோளி (Koli) ஆகும் அதே போல ஆப்கானிஸ்தானில் :கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar)-அவைகள் சங்க கால நகரத்துடன் [ஊருடன்]  ஒத்து போவதை கவனிக்க:கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் என்பனவற்றுடன். மொழியறிஞர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

ஈனும் -மா - எல் - இசு(Enuma-Elish) - எனப்படும் சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட  சுமேரிய இலக்கியமும்...வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கில்கமெஷ்  (GILGAMESH) - எனப்படும் மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியமும் உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள். மேலும் அதிசயம் என்னவென்றால் இவ்விரண்டு நூல்களுமே வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப் பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மனிதனைப் பற்றியும் கூறுகின்றன. மேசொபோடமியா இருக்கும் இடத்தில் இது வரை உலகமே அழிந்து போகும் வண்ணம் வெள்ளம் வந்து இருப்பதற்கு சாத்தியக் கூறுகளே கிடையாது.பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றிப் பேசுகின்றார்கள்.இது தான் நாம் கவனிக்க வேண்டியது.மேலும் அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை அறிய அந்த மேசொபோடமிய வெள்ள கதையில் இருந்து ஒரு பந்தி கிழே தரப்பட்டுள்ளது
"All the windstorms, exceedingly powerful attacked as one. 

The deluge raged over the surface of the earth. 
After, for seven days and seven nights. 
The deluge had raged in the land. 
And the huge boat had been tossed about on great waters. 
Utu came forth, who sheds light on heaven and earth. 
Ziusudra opened a window of the huge boat. 
Ziusudra, the king. 
Before Utu prostrated himself."
[One passage from Mesopotamian Flood Story]
இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற கேள்வி எழுகிறது? குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/ முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா?  2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி[Tsunami] அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின் கொடூரத்தை உலகம் கண்டது.சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள்.கடலின் அடியில் உள்ள டெக்கான் தட்டுகளின்[tectonic plate] விலகல்[அல்லது நகர்தல்] மூலம் இந்த ஆழிப் பேரலை உண்டானது.8.6 ரிக்டர் அளவுகள்[richter scale]  பூகம்பம் ஏற்பட்டது.ஆகவே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த அந்த ஆழிப் பேரலை, நாம் 9/10 வருடங்களுக்கு முன்பு  கண்ட சுனாமியை விட பல மடங்கு பெரிதாக இருக்குமோ? என்று எண்ணத்  தோன்றுகிறது
பகுதி:09 தொடரும்