அது,இது,எது



எரிச்சலை ஊட்டுகிறது
   எனக்கு மேல்- ஒரு சக்தி
              உண்டு-அதை நம்புகிறேன்
மணக்கும் வாசனையில்-ஒரு கவர்ச்சி
              உண்டு-அதை நம்புகிறேன்
உனக்கு மேல்-ஒரு மோகம் 
              உண்டு -அதை  நம்புகிறேன்
பிணக்கும் பிரச்சனைகளுக்கு-ஒரு தீர்வு
              உண்டு-அதை நம்புகிறேன்

நந்தியை விலத்தி-ஒரு அருள் 
             காட்டியவனை-எனக்குப் புரியவில்லை
மந்தியின் துணைக்காக-ஒரு வாலியை
             கொன்றவனை-எனக்குப் புரியவில்லை 
அந்தியில் வாடும்-ஒரு மலரை
             மாட்டியவளை-எனக்குப் புரியவில்லை
இந்திரலோககத்தில் இருந்து-ஒரு கலகம்
             மூட்டியவனை-எனக்குப் புரியவில்லை

வருணத்தை காப்பாற்ற-ஒரு பக்தனை
             நீ  அழைக்காதது-எரிச்சலை ஊட்டுகிறது
கருணைக்கு அகலிகை-ஒரு சீதைக்கு
             நீ  தீக்குளிப்பு-எரிச்சலை ஊட்டுகிறது
ஒருவனுக்கு ஒருத்தி- பஞ்சபாண்டவருக்கும்
             நீ   ஒருத்தி-எரிச்சலை ஊட்டுகிறது
எருமையில் ஏறி-ஒரு சாவித்திரியை 
             நீ கலக்கியது-எரிச்சலை ஊட்டுகிறது

[ஆக்கம்:கந்தையா  தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment