குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை!

கொழுகொழு குழந்தைகள் எப்போதும் கொஞ்சலுக்கு உரியவர்கள். கொழுகொழு குழந்தைகள்தான் ஆரோக்கியமானவர்கள் என்கிற எண்ணம் பலருக்கும் இன்றும் இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அவர்களைக் கொஞ்சி, செல்லப் பெயர்கள் வைத்து ஆராதிக்கிற பெற்றோர், குழந்தைகள் 10 வயதைக் கடக்கும்போது கலங்கிப் போகிறார்கள்.

பள்ளி விட்டு  வீட்டுக்கு சந்தோஷமாக வரவேண்டிய குழந்தை... கண்ணீர் மல்க, கவலையோடு, மனஉளைச்சலுடன் வீடு திரும்புவதையும், தன்னை எல்லோரும்குண்டு கத்தரிக்கா, தர்பூசணி, நீர்யானைஎன பல பட்டப் பெயர்கள் வைத்து கூப்பிடுவதையும் சொல்லி அழும். பள்ளி செல்ல அடம்பிடிக்கும். அது, பெற்றோராகிய நீங்கள் துடிதுடித்துப் போவது நீங்கள் மட்டுமே உணரக்கூடிய மாபெரும் வலி.

சரி! இதை ஆரம்பத்திலேயே பெற்றோர் எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதற்கு என்ன வழிகளை பின்பற்ற வேண்டும்? இதற்காக விஞ்ஞான கூடத்திற்கோ அல்லது டாக்டரிடமோ சென்று BMI (Body Mass Index) பார்த்து, நம்பர்களை கூட்டிக் கழிக்க வேண்டிய அவசியமெல்லாம் தேவையில்லை. குழந்தைகளைக் கூர்ந்து கண்காணிப்பதே முக்கியம்.

உங்கள் குழந்தை...
பம்பரம்  போல சுழன்று, துறுதுறுவெனசுறுசுறுப்பாக இல்லையா?
 சிறிய தூரத்தைக்கூட ஓட முடியாமல் அவதிப்படுகிறதா?
 நடந்து வரும் போது உருண்டு வருவது போல உள்ளதா?
  துள்ளி விளையாடி, குதிக்க முடியவில்லையா?
இதையெல்லாம் தினமும் கவனித்த பிறகாவது முதலில் கூறியபடிசெல்லக்குட்டி, ஆப்பிள், ஜாங்கிரி, பூந்தி, என் கொழுகொழு செல்லமேஎனக் கொஞ்சு வதை நிறுத்துங்கள். உங்கள் குழந்தை குண்டாகிக்கொண்டு  டைப் 2 நீரிழிவை யும் ஒபிசிட்டி எனப்படுகிற பருமன் பிரச்னையையும் ஏற்றுக் கொள்ளும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்தில் உடல் எடையை குறைப்பது சற்று சுலபம். வயதான பிறகு அதிக எடையைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து, தினசரி வாழ்க்கையை ஒரு யுத்த களமாக ஆக்கிக்கொள்ளும் அநேக நண்பர்களை, குடும்பத்தினரை கண்கூடாகக் காண்கிறோம்.

ஆரம்பத்திலேயே (OBESITY) குண்டாவதை தடுத்து நிறுத்த ஒருசில நல்ல யோசனைகள் இதோ...

1. குழந்தைகளின் உடல் உழைப்புக்கு (Physical Activity) முக்கியத்துவம் அளியுங்கள். தினமும் சில மணி நேரமாவது அவர்கள் ஓடி, ஆடி விளையாடுகிறார்களா அல்லது ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதை கவனித்துக்கொண்டே இருங்கள்.

2. குடும்பத்துக்காகச் சமைக்கும்போது, குழந்தைகள் உடல்நலத்தை முதலில் மனதில் வைத்து அவர்களின் உடல் தேவை, சக்தியின் தேவை, வளர்ச்சி யின் தேவை, உழைப்பின் தேவை, வயதின் தேவை என பாகுபடுத்தி, அதன்பின் சமைத்து, குழந்தைகளுக்கு பரிமாற வேண்டியது மிகமிக முக்கிய மானதாகும். மேலே  கூறப்பட்ட தேவைகளுக்கும் அதிகமாக (Over - eating) குழந்தைகள் சாப்பிடும்போது... எவ்வளவு ருசித்து குழந்தை சாப்பிடு கிறது என அன்பாய் பூரித்து, தினமும் அளவுக்கு அதிகமாக உணவு, இனிப்பு மற்றும் தின்பண்ட வகைகளைக் கொடுக்காமல் அளவோடு சாப்பிட கற்றுக் கொடுத்து, அவர்கள் அதை மீறும் சமயங்களில் கண்டிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

3.  நல்ல சுவையான உணவு வகைகளை அதிகம் சமைத்து, அதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேண்டி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சூடாக்கி சாப்பிடுவதை தயவு செய்து அறவே நிறுத்துங்கள். மேலும் தேவைக்கு அதிகமாக தின்பண்டங்கள் அல்லது நொறுக்குத் தீனி வகைகளை வீட்டில் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை சேமித்து வைப்பதை இன்றோடு விட்டுவிடுங்கள்குழந்தைகளுக்கு சரிவிகித உணவின் (Balanced Diet) முக்கியத்துவத்தை அடிக்கடி விளக்கி, உண்மையை உணரச் செய்யுங்கள்.

4. குழந்தைகள் படிக்கும்போதோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ, ஓடியாடி விளையாடி விட்டு அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு களைப்படையும் போதே அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. குழந்தைகளின் நல்ல ஓய்வுக்கு உற்ற நண்பன்நல்ல தூக்கமே’. அப்படி ஓய்வு எடுத்து தூங்காத குழந்தைகள், தங்களின் வயிறை ஒரு குப்பைத் தொட்டியாக்கி பலதரப்பட்ட உணவு வகைகள், இனிப்புகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகி விடுவார்கள்.


5. சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டி.விமற்றும் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் செலவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். அதன் திரையில் இருந்து வரும் நீல ஒளியின் (Blue light) தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு உகந்ததே அல்ல. அதை இந்த இளம் வயதில் அவர்களால் தாங்க முடியாது. இதனால் குழந்தைகளின் உடலுக்கு தீமையே உண்டாகும். இதன் மறுபக்கம் என்னவெனில் அதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பசி (Increase in appetite) எடுத்து, தேவைக்கு அதிகமான உணவு உட்செல்ல ஏதுவாகிறது.

கலப்பு ('க்'காதல்)'த்' திருமணங்கள் அவசியமா ?


எங்கள் கிராமத்தில் , இன்னும் எம்.ஜி.ஆர் , சிவாஜிக்குத்தான் ரசிகர்கள் அதிகம் . இன்னும் பண்டிகைக்காலங்களில் எள்ளிடி ,ஆப்ப கசாயாம் , வெள்ளம்புலி கறிபோன்ற தமிழர் மறந்த பலகாரங்கள் தான் வீட்டில் செய்து சாப்பிட்டு வருகிறார்கள் . சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில் , 1960 – களின் வாழ்க்கை நிலையை மதிக்கும் மக்கள் அதிகம் .எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்களை சுற்றியுள்ள பல சுற்றுவட்டார ஊர்களிலும் , இதே நிலை தான். உறவினர் அல்லாத , ஒரு பெண்ணோ பையனோ இரண்டு நிமிடம் சிரித்து பேசிவிட்டால் அவ்வளவு தான் . என் வயதில் இருக்கும் இளவட்டங்கள் , அவளின் நடத்தையைப்பற்றி “A” சர்டிபிகேட் கொடுக்குமளவிற்கு , கற்பனையில் வாய்கிழிய கிளப்பி விடுவார்கள் . நடுத்தர வயதினரோ , அப்பெண்ணை மிரட்டி , பையனை மரத்தில் கட்டிவைத்து அடித்த நிகழ்வுகளெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன் வரை நடந்து கொண்டிருந்தது . மாற்று சமூகம் என்றால் சொல்லவே வேண்டாம் .
  
ஒருமுறை கவுண்டர் இனத்தைச்சார்ந்நத பையன் ஒருவன் , நாடார் இனப்பெண்ணுடன் ஓடிச்சென்றான் . அவனை பிடிக்க அவனுடைய தந்தை , டாட்டா சுமோக்கள் சகிதம் 40 பேருக்கு மேல் கிளம்பி அவனை விரட்டினார்கள் . அவன் எப்படியோ தப்பி , கலெக்டர் ஆபிஸ்க்கு (பழைய கலெக்டர் ஆபிஸ்) சென்றான் . பையனின் தந்தையோ , தெலுங்கு பட வில்லன் கணக்காய் , கலெக்டர் ஆபிசினுள் காரை விட்டு , ஆபிசினுள்ளேயே வைத்து அப்பையனை பிடித்து அடித்து துவைத்தனர் . போலிசாருக்கும் இதில் செம அடி . இந்நிகழ்ச்சி நடந்து 5 வருடம் ஆகிறது .சன்டீவியின் தலைப்பு செய்திகளில், இப்பிரச்சனை ஒருநாள் அலங்கரித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . இந்த பிரச்சனையில் அல்டிமேட் விஷயம் என்னவெனில் , அந்த பையன் படித்தது 10 வகுப்புஅவனுக்கு , அவன் வீட்டாரால் நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணோ  , ஒரு வக்கில் . அவளும் உள்ளே புகுந்து , வரும் போலிஸ்காரர்களை வார்த்தையால் லெப்ட்ரைட் வாங்கியபடியே , இன்னொரு பக்கம் பையனின் கன்னத்திலும் லெப்ட்ரைட் வாங்கினார் .

சரி, டென்சன் ஆகாதிங்க . இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்றால் , சென்றவாரத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் . மாப்பிள்ளை , எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் . மணப்பெண்ணோ , வேறொரு சமூகத்தைச்சார்ந்தவர் . 6 வருடக்காதல் , திருமணத்தில் இன்பமாககமாபோட்டு கன்டினியூ ஆகிஇருக்கிறது . அதுவும் , அவர்கள் குடும்பத்தின் அங்கிகாரத்தோடு . இதில் என்ன இருக்கு ? நல்ல விஷயம்தானே என்கிறீர்களாஅதுதான் இல்லை .

என்னடா இவன் , கலப்பு திருமணத்தை எதிர்க்கிறான் என்று யோசிக்கிறீர்களா ? திருமணம் முடியும் வரை அவர்கள்  , காதலில் வெற்றியடைந்த ஆச்சரியமான ஜோடிகளாகத்தான் நம் கண்களுக்கு தெரிவார்கள் . வீட்டிற்க்கு வந்ததும் , நமக்கான பிரச்சனைகளை யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்ஆனால் , திருமணத்திற்கு பின் அவர்கள் என்னவானார்கள் என்று யாரேனும் யோசித்திருப்பீர்களா ?

காதலிக்கும்போது உயிரையே விட்டுவிட நம்மால் முடியும் போது , அந்த
காதல் நிறைவேற சொந்தபந்தங்களை , தூரத்தூக்கிவீசுவது பெரிய விஷயமாக இருக்காது . எனவே , அவர்களை உதறி , பெற்றோரை மிரட்டி , இன்றைய காதல் ஜோடிகள் திருமணத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்கிறார்கள் .  ‘நீ போனா , நா குடும்பத்தோட செத்துருவேன்னுமிரட்டுற பெற்றவர்களை , இன்று அசால்டாக  ‘செத்தா சாவுஎன்று கூறும் நிலைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது (ஒருசிலர் விதவிலக்கு) . இதற்காகவே , பெற்றவர்களும் மனது இல்லாமல் ஏற்றுக்கொண்டு , பத்திரிக்கை அடிக்கிறார்கள் .

கல்யாணத்தன்றின்போது  பெற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம் சொல்லிமாளாது . ஒவ்வொரு உறவினரும் வந்து , பொன்னைப்பற்றியோ , பையனைப்பற்றியோ கேட்கும்போது என்ன சொல்வதென்று தெரியாமல் , ஒருவாறு தலையை குனிந்துகொண்டு நழுவி செல்லும் அவமான நிலை , கொலை செய்தவனுக்குக்கூட வராது . எப்படியோ , திருமணத்தை முடித்து , அவர்களை வேறொரு வீட்டில் குடிவைக்கிறார்கள் . அதன்பின் , மணமக்கள் இருவரும் சந்தோஷமாகத்தான்  இல்வாழ்க்கையை தொடங்குவார்கள்சரியாய் , தங்களின் குழந்தையை பள்ளிசேர்த்தும்வரை , எந்த பிரச்சனையும் இருக்காது . பள்ளிச்சேர்க்கையின்போது தான் முதல் பிரச்சனை ஆரம்பிக்கும் . பையனை எந்த ஜாதியில் சேர்த்துவது ?

எப்படியும்  அப்பாவின் ஜாதியின்பெயரில் தான் சேர்த்துவார்கள் என்றாலும் , அது சம்பந்தமாக அந்த  தாயின் மனதில் ஒரு சில வருத்தம் இருக்கும் . காரணம் , காதலுக்கு தான் ஜாதி தேவையில்லை . மனிதனுக்கு , ஜாதி தேவை . குழந்தை வளர வளர , குழப்பமும் அதிகரிக்கும் . எப்படியும் , இந்த இடைப்பட்ட காலத்தில் , பையனின் உறவினர் , பெண்ணின் உறவினர் என்று , பெரும்பாலோனவர் சடங்கு , சம்பிரதாயங்களுக்கு அழைக்கமாட்டனர் . நல்லது , கெட்டது என்று எங்கும் செல்லமுடியாது . அப்படியே நெருங்கிய உறவினர் அழைத்தாலும் , அங்கே சரிசமமான மரியாதை , இருவருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் . பின் , இருவருக்குள்ளும் குழப்பங்களும் சச்சரவுகளும் அதிகரிக்க ஆரம்பிக்கும் . சிலர் , இந்த சண்டைகளை புரிந்துகொண்டு தவிர்த்தாலும் , மனதினுள் ஒருவிதமான வலி உண்டாகும் . அது , எப்போதாயினும் வெளியே வந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம் . கிட்டத்தட்ட , நம் அருகிலே எல்லோரும் இருப்பது போல் இருந்தாலும் , யாருடைய உதவியும்  உண்மையாக , முழுமையாக கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான் .

தங்களின் குழந்தைகள் , மணவயதை அடையும்போதுதான் உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும் . என்னதான் , தாங்கள் காதலித்து மணம் செய்திருந்தாலும் , தங்களின் குழந்தைகளின் காதலை ஏற்கும் மனநிலையில் , இருப்பவர்கள் சிலரே ! மீதிபேர் , தம் குடும்பத்திலோ , சொந்த பந்தத்திலோ தான் வரன் தேடவேண்டி இருக்கும் . கடலில் தொலைத்த சிம்கார்டு போன்றதுதான் , சொந்த பந்தத்தில் வரன் தேடுவதும் .
  எனக்குத்தெரிந்தஉறவினர் ஒருவர் , கலப்பு திருமணம் செய்தவர்தான்அப்போது குஜாலாக இருந்தவர் , இப்போது மணவயதை தாண்டிய அவனது மகனின் ஏச்சுபேச்சுகளை தாங்கமுடியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறார் . அம்மாவின் ஜாதியில் இருக்கும் பெண்ணாக தேடிச்சென்றால் , அப்பாவின் ஜாதியைக்காட்டி நிராகரிப்பு செய்கிறார்கள் . அப்பாவின் ஜாதியில் இருக்கும் பெண்களைத்தேடி சென்றால் , நிராகரிப்புடன் இளக்காரமும் செய்கிறார்கள் . என்னசெய்வதென்று தெரியாமல் , ‘சரி நாளஞ்சு பொட்டபுள்ள இருக்கற வீட்டுக்காச்சும் போலாம்னு சென்றார்கள் . அங்கு வாங்கிய பேச்சுகளால் , மனமுடைந்து மனிதர் பெண் பார்க்கவே செல்வதில்லை . யாரையாவது தன் மகன் காதலித்தாவது இழுத்து வரமாட்டானா என்ற ஆதங்கத்தில்வாழும் அவரது மகனுக்கோ , பெண்களிடன் பேசுவதற்கே பயம் .
  
ஜாதி மாற்றி செய்பவர்களை விட , மதம் மாறி திருமணம் செய்துகொள்பவர்களின் நிலை , அதைவிட மோசம் . ஏதோ , வேறு ஜாதி பெண் என்றால் பேசுவதற்காகவாது ஆள் இருப்பார்கள் . ஆனால்மதம் மாறி திருமணம் செய்பவர்கள்  , நாட்டைவிட்டு தள்ளிவைக்கப்பட்டவர்களின் நிலையில் இருக்கிறார்கள் .

கலப்புத்திருமணம் என்பது  மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் சாதாரணமானதாக இருப்பினும் (மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் இருக்கும் நிலையைப்பற்றி , எனக்கு சரிவரத்தெரியவில்லை .) , எங்களது ஊரைப்போன்ற கிராமங்களில்  , இன்னும் பெரிதளவில் அங்கிகரிக்கப்படவில்லை என்பதே உண்மை . அப்படியொரு பட்சத்தில் அங்கிகரித்தாலும் , அது பிள்ளைகளின் நிர்பந்தத்தின்காரணமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறதுஇதற்கெல்லாம் காரணம் , காதல்தான் .

அப்படியே வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஓடிச்செல்பவர்களில் பலரின் வாழ்க்கை அந்தோகதி தான்எனக்கு தெரிந்து இதே போன்றதொரு சம்பவம் நடந்ததுவீட்டை விட்டு ஓடிய பெண்  , 3 வருடங்களுக்கு பின் ஓசுரிலிருந்து தன்குடும்பத்தினருக்கு போன் செய்திருக்கிறாள் . நாங்கள் அவளை மீட்கச்சென்றோம் . அவள் கூறிய இடத்திற்கு சென்ற எங்களுக்கு பேரதிர்ச்சி . காரணம் , அவள் இருந்தது ஒரு விபச்சார விடுதியில் . இம்மாதிரி , காதல் எனும் பெயரில் சில அயோக்கியர்கள் , பெண்களை கடத்தி இம்மாதிரியான நிலைக்கு உபயோப்படுத்தி வருவது  , அதிகரித்தவண்ணம் உள்ளது .

என்னைப்பொறுத்தவரை , காரைத்துரத்தும் நாயைப்போன்றது தான் காதலும் . சக்சஸ் ஆகும் வரை துரத்த நினைப்போம் . சக்சஸ் ஆனபின் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம் . ஒருவேளை திருமணத்தில் முடியும் காதல் தான் வெற்றி என்று கூறினாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் , இன்றைய நிலையில் , டைவர்ஸ்க்காக விண்ணப்பத்திருக்கும் பெரும்பாலோனர் , காதல் ஜோடிகள் தான் . ‘என்னடா பன்றது , வீட்ட விட்டுட்டு வந்துட்டமேனு நிறைய பேர் , தங்கள் காதல் வாழ்க்கையை சந்தோஷமாக வெளி உலகிற்கு காட்டிக்கொண்டு , உள்ளே புழுங்கி கொண்டிருக்கிறார்கள்ஒருநொடியில் உதிப்பது தான் காதல் என்றால் , இப்போது காதலிக்கும் பெண்ணிற்கு முன் எத்தனையோ பெண்களை நாம் காதலித்திருக்க வேண்டும்இன்றைய காலகட்டத்தில் , காதல் என்பது தன்னுடைய புரபோசலை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன்தான் . ஏற்றுக்கொள்ளவில்லையெனில் , துரத்தி துரத்திக்காதலிக்கும் காதலர்களை பார்ப்பது அரிது . அவ்வாறிருக்கும்பட்சத்தில் , அந்த காதல் எத்தனை நாள் நீடிக்கும் என்பதெல்லாம் ஆண்டவன் கையில்தான் இருக்கிறது . திருமணத்திற்கு முந்தைய காதல் , காலாண்டு பரிட்சை போல் தான்குழந்தை பிறந்தவுடன் இருக்கும் காதல் அரையாண்டுத்தேர்வைப்போல் . காலாண்டில் தேறுபவர்கள் , அரையாண்டில் கோட்டை விட்டுவிடுகிரார்கள் . பின் வாழ்க்கை எனும் முழாண்டுத்தேர்வில் , அவர்களால் நிச்சயமாக வெற்றிபெற முடியுமா என்பது சந்தேகம்தான் .

என்னைப்பொறுத்தவரை , நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்று தான் காதலும் . என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடத்தில் ஒரு வார்த்தை கூறியிருந்தார் .
நம்முடைய செயல்களால் , நமக்கோ அல்லது பிறருக்கோ , நம்மேல் இருக்கும் மரியதை குறைந்தாலோ  அல்லது துன்பம் நேரிட்டாலோ , அந்த செயலை செய்வதற்கு , செய்யாமலிப்பதே உகந்தது .

என்னைப்பொறுத்தவரை , கலப்புத்திருமணங்களை ஆதரிக்கும் சமூகநிலைபாடு மக்களிடையே வளரும் வண்ணம் பார்த்துக்கொண்டாலன்றிஅதனால் கஷ்டங்கள்தான் வரும் . அந்த கஷ்டங்களை தாங்கும் மனநிலையில் இருப்பின் , தாராளமாய் கலப்புத்திருமணம் செய்துகொள்ளலாம் .


மேலே நீங்கள் படித்த , கலெக்டர் ஆபிசில் புகுந்த பையன்  , கடைசியில் எல்லோரின் எதிர்ப்பையும் மீறி அப்பெண்ணை மணந்து கொண்டான் . இல்வாழ்க்கையை வெற்றிகரமாய் துவங்கினான் . கடைசியில் யார் கண் பட்டதோ , தொழிலில் பெருத்த நட்டமாகி தூக்குமாட்டிக்கொண்டான்அந்த பையனுடன் இருந்த சில கயவர்கள் , அவனிடமிருந்து அனைத்தையும் சுருட்டிக்கொண்டுவிட்டார்கள் . கடைசியில் , அப்பெண்ணின் உறவினர்கள் , பையனின் உறவினர்கள் என்று யாருமே வரவில்லை . சடலத்தை தூக்கிச்செல்ல 4 பேர்கூட இல்லாமல் , அப்பெண் கதறிக்கொண்டிருந்தாள்.