ஒளிர்வு:65- - தமிழ் இணைய சஞ்சிகை [பங்குனி,2016]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் பங்குனி இதழினூடாக உங்கள் மனங்களில் வலம் வருவதில் மகிழ்வடைகிறோம்.
தீபத்தின் வெளியீடுகளில்பல தலைப்புக்கள் பிரபல்யங்களை நோக்கி படையெடுப்பது கண்டு பிரமிப்பதோடு அதன் எழுத்தாளர்களுக்கு உங்கள் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகில் ''மனிதப்பிறவி மகத்தானது'' என சான்றோர் கூறுவதும். மாணிக்க வாசகர் வாசகத்தில் ''புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாமனிதரா'' என புவி வாழ்வதனுள் மனிதனை உயர்வாகக் காட்டுவதையும்  
என் நண்பன் என்றைக்கும் இக்கருத்தினை ஏற்றுக்கொண்டதில்லை. ஏனெனில் பறவைகள் விலங்குகள் முதலான அனைத்து உயிரினங்களிலும் ஏதாவது சில கெட்டகுணங்கள்  இருப்பது வழக்கம் எனினும் அது தன இனத்தினை அழிக்கவோ காட்டிக்கொடுக்கவோ முனைவதில்லை. மத,சாதி பேதங்களை,மோதல்களை அவைஉருவாக்கவில்லை. பேராசை க்கடலில் மூழ்கவில்லை. புவியின் அழிவுக்கு வித்திட்டதில்லை.அவை செய்யாத கெட்ட செயல்கள் எல்லாம் மனிதன் செய்கின்றான். அவை தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியது கிடையாது.ஆனால் மனிதன் காணும் அனைத்தையும்  விழுங்கத் தயாராகிவிட்டான். அதனால் பல புதிய நோய்களையும் சம்பாதித்து விட்டான்.விழுங்கும் ஆவலில், அவசரத்தில்  [பறவைகள் விலங்குகள்] அவைக்கும் தம் இரசாயன பதார்த்தங்களை திணித்து அவைகளையும் நோயாளிகளாக்கி தானும் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறான். ஆமாம் இவ்வுலகம் எங்கே போய் முடியப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்பதற்கு எம்மையும் இந்த விண்ணாணம் விட்டால்தானே!

              

சித்திரை மகளே விரைந்து வருக ! [ஆக்கம்:அகிலன் தமிழன்]

சித்திரை தமிழ் வருடமே 
  புது தென்றலாக வருக!
 நிம்மதி இழந்து இருக்கும்
    உறவுகளின் கனவுகள் 
            நிறைவேறி 
  அவர்கள் வாழ்விலும்
   ஆனந்த அலை வீச 
   புத்தாண்டே வருக!


இனங்களுகிடையில்
ஒற்றுமைக்குத் தடையாக 
இருக்கும் இனவாதம் ஒழிந்து
சமத்துவம் ஏற்பட்டு எங்கும்
அமைதி பரவி 
நாடு செழிமை பெற
புத்தாண்டே வருக!

எழைகளின் வறுமை நீங்கி
 நிறைந்த வாழ்வு பெற்று 
     ஏற்ற தாழ்வு நீங்கி 
வலு இழந்தோர் மனதில்
நல்ல சிந்தனைகளைத் தூவி 
   அவர்களின் வாழ்விலும்
     மகிழ்வை கொடுக்க 
      புத்தாண்டே வருக!
          
ஊருக்கே 
 உணவளிக்கும்  விவசாயிக்கு
 நல்ல விளைச்சலை கொடுத்து 
 அவன் மனம் குளிர்ந்து 
 வாழ்வில் சிறந்து வாழ 
  விரைந்து வருக புத்தாண்டே
 விரைந்து வருக!

                                                     ஆக்கம்:அகிலன்  தமிழன்        

FOOD HABITS OF TAMILS/PART:26[conclusion]

                                                                         ((Compiled by: Kandiah Thillaivinayagalingam))

When you think about traditional foods,do you think about hunter-gatherers of long ago? They did everything by hand and from scratch. Or do you think about the pioneers living out on the prairie or edge of the forest who began to cultivate and produce their own food after finding a homestead and settling in one place?These are indeed some examples of the ways traditional foods were produced,harvested,prepared and eaten.In fact,Traditional foods are those eaten by people over the longer course of civilization and which have supported health – cultivated, produced, and harvested from the earth and out of nature – foods which are wholly unaltered and organic, and contain the highest levels of nutrition or are nutrient-dense and
have been eaten for millennia & in many cases traditional foods are also those found in your local community.By contrast,the way we eat today is vastly different.We have grown so accustomed to food being produced the way it is, we often don’t think beyond the package or the can. Since the advent of mechanization and processing techniques developed during the time around the Industrial Revolution,our food has become increasingly removed and modified from its natural state.The effect these processes have had on our health has been profound.To the average person,the notion of eating healthy or nutritious food has
been been translated into something which powerful companies are now able to employ effective marketing strategies by which to sell products.Notice how you will rarely see an ad on television or in a magazine for a whole,organic food.Ads are persuasive and successful tools that sell products – but they rarely sell health. The good news is, you do have a choice.With a little information, you can become empowered to take charge of your own health instead of letting an advertisement tell you what’s healthy. One of the best ways to take control of your own health is to eliminate processed foods from your diet and start eating traditional foods.

Further more,Food, cooking, and eating habits play a central role in every
culture.Eating is never a purely biological activity since the consumption of food, whether it is simply or elaborately prepared, is always imbued with meaning, which is understood and communicated in various symbolic ways.Preparing food for consumption, and eating socially, are activities that are conducted for purposes other than mere nutrition.The symbolic meaning of food sometimes has little to do with the food itself, as in the use of rice to shower newly-weds in Tamil and other certain cultures,and eating socially has less to do with nutrition than with communication and relationships.Food has also played an important part in religion, helping to define the separateness of one creed from another by means of dietary taboos. 

PART :27 WILL FOLLOW .....                                                                                           

தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:26 [முடிவுரை]

                                                                 ((தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்))
பாரம்பரிய உணவுகள் பற்றி நாம் சிந்திக்கும் போது எம் நினைவுக்கு வருவது பல ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்,எல்லாவற்றையும் கையால் செய்து,எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பித்த.வேட்டையாடி சேகரித்தவர்களையா?அல்லது காட்டின் விளிம்பில் முதல் முதல் பயிரிட தொடங்கி,தமது உணவு தேவையை பூர்த்தியாக்கி,இடம் விட்டு இடம் அலையாமல்,பண்ணை வீடாக,ஓர் இடத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களையா?இப்படி எமது மனதில் பல கேள்விகள் எழலாம்.பொதுவாக உலகத் தொல்மாந்தரின் உணவுமுறைகள் இயற்கையோடு இயைந்தே இருந்தன.தொல்தமிழரின் உணவு முறை என்பதும் அப்படியேஇயற்கையோடு இயைந்த ஒன்றாக இருந்திருக்கிறது.இயற்கை வளம் நிறைந்த சூழலில் வாழ்ந்த பழந்தமிழர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த உணவு வகைகளையே உண்டு வாழ்ந்துள்ளனர்.எனவே பாரம்பரிய உணவுகள் என்பது அவர்களின் நீண்ட கால நாகரிகத்தில்,அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப,அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பொதுவாக உதவியவையே.இவை பயிரிடப்பட்டு,வளர்க்கப்பட்டு பூமியில் இருந்தும் இயற்கையில் இருந்தும் அறுவடை செய்யப்பட்டவையே- அதாவது இயற்கை வேளாண்மை மூலம்,எந்தவித மரபணு மாற்றங்களுக்கும் உட்படாமல்,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளே.இவை பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களால் உட்கொள்ளப்பட்டவையே.தமிழர் உணவுப் பண்பாடு,பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா,இலங்கை தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில்
ஒன்றாகும்.இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது.வரலாற்றை நாம் நோக்குவோமாயின் எமது சமூகத்தால் அன்றுதொட்டு இன்று வரை இப்படியான பழமையான உணவுப்பழக்கங்கள் காணப்படுகின்றன.பல சந்தப்பங்களில்,உங்கள் உள்ளூர் சமூகத்தில் காணப்படும் உணவுகளும் பாரம்பரிய உணவாகின்றன.எனினும்,இன்று எமது உணவு  பழக்கங்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன.இன்று நாம் எப்படி உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவோ,அப்படியே அவைகளை பார்த்து பழகிவிட்டோம்.எம்மால் இப்ப உணவு பொட்டலத்திற்கு அல்லது தகரக் குவளைக்கு மேல்[ package or the can] பொதுவாக எண்ணத் தோன்றவில்லை.தொழில் புரட்சி காலத்தில்,இயந்திரமயமாக்கல் வருகையுடனும் பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சியாலும் எமது பாரம்பரிய இயற்கை உணவுகள் அகற்றப்பட்டு,அவை  இயற்கை நிலையில்அல்லது வடிவில் இருந்து மாற்றப்பட்டன.இது எமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.சாதாரண மனிதன்,தனக்கு தேவையான ஆரோக்கிய அல்லது சத்து உணவுகளை தேர்ந்து எடுப்பது இன்றைய கால கட்டத்தில்,சக்தி வாய்ந்த நிறுவனங்கள்,தமது உணவுப் பொருட்களை விற்பதற்கு கையாளும் சந்தைப்படுத்தும் உத்திகளால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.இந்த தொழில் நுட்ப சாத்தியமும் வியாபாரக் கண்னோட்டமுமே நமது தற்போதைய உணவுப் பழக்கத்தை
தீர்மானிக்கிறது.ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கு அல்லது விற்பதற்கு விளம்பரம் பொதுவாக ஒரு வசப்படுத்தும் மற்றும் வெற்றிகரமான ஒரு கருவி.எனினும் இவை அருமையாகவே ஆரோக்கியமான உணவுகளை சந்தப்படுத்துகின்றன.எது எப்படியாயினும் தேர்வு உங்களுடையது.சில தரவுகளை அல்லது செய்திகளை அறிவு பூர்வமாக அறிவது மூலம்,நீங்கள் உங்களை திடமாக்கி,உங்கள் ஆரோக்கியத்தை,விளம்பரம் தீர்மானிக்காமல், நீங்களே பொறுப்பு எடுக்கலாம்.உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே கட்டுப்படுத்த இலகுவான முறை,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து,இயற்கையான பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதாகும். 

அது மட்டும் அல்ல,ஒவ்வொரு பண்பாட்டிலும் உணவு,சமையல்,உண்ணும் பழக்கங்கள்
போன்றவை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.உண்ணுதல் ஒரு உடல் தேவை மட்டும் அல்ல.இது வெறும் ஊட்டச்சத்துக்கு மட்டும் இன்றி,சமுகமாக ஒன்று கூடி உண்ணுதல் வேறு தேவைக்காகவும் கையாளப்படுகிறது.அங்கு நிகழும் கலந்துரையாடல்,தகவல் பரிமாறலுக்கும் மற்றும் உறவுகளுக்கும் கூட வழிவகுக்கின்றன.அதே போல தமிழர்களின் திருமணத்தில்,புதிதாக மணம் புரிந்த தம்பதியரை,முனை முறியாத முழு அரிசி தூவி வாழ்த்துவது,எந்த விதத்திலும் உணவோடு சம்பந்தப்பட்டது அல்ல.பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில் தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழவேண்டும் என்பதே அதன் பொருள்.உணவு சமயத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு சமயத்தின் தனித்துவத்தை எடுத்து காட்டுகிறது. விலக்கப்பட்ட உணவுகள் அந்த அந்த சமயத்தை அடையாளம் காட்டுகின்றன.

மனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான்.இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் அன்று பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கும்.எனினும் மனித வரலாற்றில் சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான்,விவசாயம் கண்டுபிடித்து,மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.இந்த மாறிய உணவுப் பழக்கத்திற்கேற்ப நம் உடலியல் அல்லது அதை நிர்ணயிக்கும் மரபணுக்களோ பெரும்மளவு இன்னும் மாறவில்லை.தற்கால உணவுப் பழக்கத்தால் உடலில் அதிகப்படியாக சேரும் மாவு சத்தை எப்படிக் கையாள்வது என்பதை அது இன்னும் சரியாக அறியவில்லை.நம் முன்னோர்கள் இயற்கையாக விளைந்த சத்தான உணவுகளை மண்ணிலிருந்து நேரடியாக உண்டார்கள்.ஆனால் இன்று நாம் உண்பது 90% உணவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பதப்படுத்தியது.அரிசி கூட அதன் நல்ல சத்துகள் நிறைந்த தோல் தீட்டப்பட்டே கிடைக்கிறது.எது உடலுக்கு தேவையான உணவு என்பதை விடுத்து எது சுவையானது என்று பார்த்து அதை மட்டுமே பெருமளவு உற்பத்தி செய்தும் உண்டு வருகிறோம்.சுவையான எல்லாப் பொருட்களிலும் கொழுப்பு முக்கிய அம்சமாக இருக்கிறது.இன்று சூப்பர் மார்கட்டில்[பெருஞ் சந்தை/Super Market] கிடைக்கும் எந்த பொருளுமே அதிக கலோரி தரும் மாவு,கொழுப்பு, இனிப்பு பொருட்களாகவே நிறைந்து கிடக்கிறது.அது மட்டும் அல்ல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவர உணவுகள் பெருமளவு சந்தைபடுத்தப்படுகின்றன.இந்த உணவுகளை உண்பதால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்பதை உடனே அறிய முடியாது இருக்கிறது.எனினும்  பிற்காலங்களில் அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டி வரலாம்?உதாரணமாக, மரத்திலிருந்து பறித்து உண்ணும் மாம்பழத்தை விட ரசாயனங்களால் செய்த மாம்பழச்சாறு போன்ற திரவத்தை சிறந்ததாக மக்களிடம் பரிந்துரைக்கிறார்கள்.பரிணாமத்தின் பல்வேறு கால கட்டங்களில் திடீரென உண்டாகும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல்வேறு உயிரினங்கள் பழங்கதைகளாகிப்போயின. இன்றைய காலங்களில் ஏற்படும் வேகமான மாற்றங்கள்,இயற்கையை விட்டு நீங்கிய உணவுப்பழக்கம் மனித வரலாற்றை அழித்து விடக்கூடாது.

பகுதி :27 தொடரும்................                                                                                                  

அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது? சோம்பல்! ஆர்வமின்மைதான் முதல் காரணம்.

     அலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம்! ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம்! ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம்! அதாவது அலட்சியமாக விட்டு விடுகிறோம். மறுபடியும் அதே ஊழல் வாதிகளை கொண்டாடி நாட்டை அவர்களிடம் கொடுக்கிறோம்.
இதில் ஒரு நொண்டி சாக்கு வேறு! தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா? என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்து மாலை உறங்கும் வரை தினம் தினம் நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம். காலையில் ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்ப வேண்டும் என்றால் 5மணிக்கு எழுந்தால் நன்றாக இருக்கும். அலாரம் வைத்து எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். படுத்து விடுவோம். எழுந்து மீண்டும் அலைபேசியில் அலாரம் வைக்க சோம்பேறித்தனம். இருக்கட்டும் பார்த்துக்கலாம்! ஒரு நாள் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சி போயிடாது என்று அலட்சியப்படுத்துகிறோம்.

    பள்ளிப் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையை அலட்சியப்படுத்தியதால்தான் பாவம் ஒரு அப்பாவி சிறுமி பலியானாள். நம்முடைய அலட்சியம் வாக்களிப்பதில் கூட இருக்கிறது. ஒரு நாள் லீவு ஜாலியா இருக்காம எவன் போய் ஓட்டு போட்டுகிட்டு கியுவில காத்து கால் கடுக்க நின்னு நாம போடுற ஒரு ஓட்டுல உலகமே மாறிப்போயிட போவுதா என்று எண்ணி போகாமல் இருந்து விடுகிறோம்! இது எவ்வளவு பெரிய அலட்சியம்! ஜனநாயகத்தில் ஓட்டளிப்பது நமது கடமை! இதை கூட அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

   இதைப்போலத்தான் பல அலட்சியங்கள் கண்கூடாக பார்க்கிறோம்! மின் தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் பகலில் கூட விளக்குகள் ஒளிர்கின்றது. குழாயில் தண்ணீர் வீணாகிறது. சாலையில் வாழைப்பழத்தோலை அலட்சியமாக வீசுவது. பூசணிக்காய்களை உடைத்து சாலையில் போடுவது. இதெல்லாம் இருக்கட்டும் தலைக்கவசம் அணியாமல் அலட்சிமாக இருப்பதால்தானே எண்ணற்ற விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.

    கட்டணங்கள் கட்ட வேண்டிய தேதிவரை கட்டாமல் கடைசிநாள் பாத்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது. வண்டியில் சிறிது காற்று குறைவாக இருக்கும் போதே கவனிக்காமல் விட்டு சுத்தமாக பஞ்சர் ஆகி நிற்கும் போது எரிச்சல் அடைவது. என்று நாம் அலட்சியப்படுத்தும் விசயங்கள் ஏராளம்.

 சின்ன வயதில் படித்த ஒரு பாட்டு! அதன் அர்த்தம் மட்டும் சொல்கிறேன்! பாடல் மறந்து விட்டது. குதிரை வீரன் ஒருவன்  அண்டை நாட்டுக்காரன் படையெடுத்து வருகிறான் என்று தன் நாட்டிற்கு செய்தி சொல்ல குதிரையில் புறப்படுவான். வழியில் குதிரையின் லாடத்தில்  ஒரு ஆணி கழன்று விடும்ஒரு ஆணி தானே! பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தி பயணிப்பான் அவன். ஒரு ஆணி போனதால் லூஸான லாடம் கழன்று கொள்ளும். லாடம் கழன்றதால் குதிரையால் வேகமாக பயணிக்க முடியாமல் போகும். மேலும் கால் புண்ணாகி பயணம் தடைபடும். இதற்குள் அண்டை நாட்டுகாரன் படையெடுத்து வந்து அந்த நாடே அடிமைப் பட்டு போகும். ஒரு ஆணியை அலட்சியப்படுத்தியதால் வந்த வினை  இது!

 நாமும் அப்படித்தான்! வியாபாரத்திற்குத்தானே வந்தார்கள் என்று அலட்சியப் படுத்தியதால் முன்னுறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தோம் அன்னியரிடம்.

  பெரிய பெரிய கோயில்கள் பாழடைந்து கிடக்கும்! அல்லது அந்த கோயில் தளங்களில் பெரும் ஆலமர அரசமரங்கள் முளைத்து இடிந்து கிடக்கும். இதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய கட்டிடத்தையே அந்த மரத்தின் வேர்கள் சாய்த்திருப்பதை கண்டிருப்பீர்கள்! இது அலட்சியத்தால் நேர்ந்தது அன்றோ! சிறு செடியாக இருக்கும் போதே களைந்து இருந்தால் அந்த கட்டிடங்கள் பாழாகி இருக்காது அல்லவா? ஆனால் கவனிக்காமல் விட்டோ! சிறு செடிதானே என்று எண்ணியதால் என்ன ஆயிற்று கட்டிடமே குலைந்து போகின்றது அல்லவா?
             மழை எல்லாம் வராது என்று மழை நாளில் குடை எடுக்காமல் போய் நனைந்தவர்கள் ஏராளம். பெருமழை எல்லாம் இனிமே வராதுப்பா என்று ஆற்றங்கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமத்து வீடு கட்டியதன் பலனை சென்னை பெருவெள்ளத்தில் அனுபவித்தோம்.

     ஒவ்வொரு சம்பவமும் ஒரு படிப்பினையை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த படிப்பினையை மறந்து அலட்சியப்படுத்தி விட்டோமானால் முன்னேற்றம் என்பது கானல் நீரே!

    சிக்னல் விழுந்தும் வாகனம் வரும் முன் கடந்துவிடலாம் என்ற அலட்சியம் நம் உயிரையே இழக்க வைக்கிறது அல்லவா? கடைசி நாள் வரை படிக்காமல் தேர்வெழுதும் அலட்சியம் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடுகிறது அல்லவா? பணம் இருக்கிறது ஓட்டு வங்கி இருக்கிறது அதைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கும் அரசியல் வாதிகளையும் கூட மக்கள் அலட்சியப்படுத்தி விடலாம் ஆனால் யார் ஆண்டால் என்ன என்று ஓட்டுப்போடாமல் அலட்சியப்படுத்தலாமா?

  வெற்றி பெற விரும்புபவர்கள் எதையும் அலட்சியப்படுத்த மாட்டார்கள்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழியே உண்டு. நாமும் வெற்றியாளர்களாக மாற அலட்சியத்தை  அலட்சியப்படுத்துவோம்! வெற்றி பெறுவோம்!

                                                                                                               நன்றி:டிஸ்கி