ஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் 
சக மனிதனை நேசிக்கத் தெரியாதவர்,
எத்தனை ஜெபமாலை உருட்டினாலும்---
காலமெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு
காயத்ரி மந்திரம் ஜெபித்தாலும்---
ஐந்து வேளை அல்ல--
ஐம்பது வேளை தொழுது மண்டியிட்டாலும்---
ஒரு பயனும் விளையாது!

இது கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களின் கருத்து.நேசித்தல் அற்ற நிலையானது  இன்று குடும்ப அங்கத்தவர்களிடையே மட்டுமல்ல அது ஆன்மீக வாதிகளாக தம்மை காட்டிக்கொள்வோரினையும் கடந்து அரசியல் வாதிகள் வரை பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மனிதனிடம் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளும் ,பேராசைக்கான முன்னெடுப்புக்களும், அடுத்தவர் மீது இருக்கும் அர்த்தமற்ற அவநம்பிக்கைகளும் காரணங்களாக இருக்கலாம். இதனாலேயே மனிதருக்கிடையில் முட்டல்களும் ,மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மனம் உண்டானால் இடமுண்டு என்பர் பெரியோர். ஆமாம்.மனிதன் மாறவேண்டும்.அவன் மனிதம் உள்ள மனிதனாக வேண்டும். இப்புதிய புத்தாண்டில் புதிய சிந்தனைகளுடன் நல்வாழ்வு வாழ அனைவரையும் நேசத்துடன் வாழ்த்துகிறோம்.

  please click 'like' on theebam magazine-thanks 


உங்கள் வருகைக்கு நன்றி


www.theebam.com

0 comments:

Post a Comment