நீ வருவாய் என....! [ஆக்கம்:அகிலன் தமிழன்]


மனதின் வலியை
கண்கள் சொல்லும் அன்பே 
அது போல நீயும் 
எனக்கு புரிதலாக  வந்து 
என் ஏக்கங்களுக்கு
பதில் தந்தாய்!
என்  உணர்வும் 
என் இதயமும் உன்னிடத்தில்
எதிர்பார்ப்பைக்  கொண்டு
வழி துணையாக நீ வருவாய் என 
ஒரு வழி பாதையில் 
உன்னிடத்தில் மையல்  கொண்டேன்.
முகில்கள் கோபம்  கொண்டு
கலைந்து போனது போல 
நீயும் மனம் மாறி பிரிந்து போனதால் 
மையல்  கொண்ட என் 
 உணர்வுகள்   கரு கொள்ளமால் 

உருக்குலைந்து நிலை மாறி போனதடி


ஆக்கம்:அகிலன் தமிழன் 

0 comments:

Post a Comment