இன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.


செய்தி:தனித்தமிழ் ஈழம் அமைவதற்கும், தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போகிறேன்-ஜெயலலிதா 

சரவணை: தாயே இராசாத்தி,இலங்கைத் தமிழர் மறந்த கதையம்மா அது.இருந்த தமிழரில்பாதி யுத்தத்தால் மாண்டனர்.மீதியில் பாதி அகதியாக புலம் பெயர்ந்தனர்.அங்கு இருக்கும் மீதி படும் அவலம் வேறு.முதலில் தமிழ் நாட்டில் அவலப்படும் சிலோன் அகதிகளை முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் ஒரு வழி செய்யம்மா! நாமல் உங்களை மறக்க மாட்டோம்!

செய்தி:சமஷ்டி நிர்வாக முறை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கெடுத்துவிடும்!-சிங்கள ஊடகம் 

சரவணை:இது வெள்ளைக்காரனின் கண்டுபிடிப்பல்ல!சமஷ்டி நிர்வாக முறை கொண்ட நாடுகளெல்லாம் இன்று வளர்ந்துவிட்ட நாடுகளாகவே விளங்குவது உலகறிந்த உண்மை.இன்னும் நாட்டினை குட்டிச் சுவராக்கவே பேரினவாதம் வாதிடுகிறது.

செய்தி:சண்டியராக மாறிய நாமல்! ஆட்சியை பிடித்து அட்டகாசம் செய்யப் போவதாக மிரட்டல்

சரவணை:எலும்பிலா நா தானே!நான்கூட இப்பிடி சொல்லலாம்.பத்திரிகைக் காரன்கள் போடமாட்டாங்களே!

செய்தி:மலையக மக்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்க உதவுமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை

சரவணை:இந்தியா வாழ் மக்களையே ஆட்சிக்கு வந்தா இந்திய அரசு மறக்கிறது  வழமை. இதில தங்களுக்கு வாக்கு போட சந்தர்ப்பமில்லாத சனங்களைப் பற்றி இந்தியாவுக்கு என்ன கவலை?


செய்தி:கனடா நாட்டில் நடிகர் விஜய் நடித்த ’தெறி’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் மர்ம நபர்கள் மிளகாய் பொடிகளை வீசியதால் படக்காட்சிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

சரவணை:நம்மளப் பற்றி என்ன நினைச்சுக் கொண்டியள்..மீண்டும் மீண்டும் நாங்கள் தமிழரென் நிரூபிப்போம் .


செய்தி:தமிழீழ வைப்பகத்தின் தங்கநகை புதையல் மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சரவணை:கிணறு வெட்டப் பூ தம் வந்த கதையாய் முடி யுமோ?
இதைவிட இராணுவ பக்கம் தோண்டினா நிறையக் கிடைக்குமே!

செய்தி:வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஏன் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சரவணை:திரைப்பட நடிகரில்லையா! உப்பிடி எத்தினை படத்தில எத்தினை கேள்விகளைக் கேட்டிருப்பாரு!
                                                                   




0 comments:

Post a Comment