வாழ்வின் மாயை


மனிதா கலங்காதே 
இருளை காணும்  உனக்கு
 அதுவன்றி  வெற்றி ஏது?-அவைகள் 
உன் எதிர் கால  வெற்றிக்காக 
உன்னுடன் வந்தவையே
அதை அறியாமல் திசை மாறாதே!

 மனித வாழ்வின்  விடியலின் மொட்டுகள் 
தேங்கி இருப்பது இரவின் மடியிலே 
அவைகளை சந்திக்கும் போதே  
பிரச்சனை என்ற மாயைமறந்து 
வாழ்வின் விடி வெள்ளியான 
பூக்கள்   மலர்கின்றன -மனிதனே 
அதனாலேயே இருளை தயக்கமின்றி சந்தி
உன் வாழ்வு தெளிவடைந்து செழிப்படையும்! 

எந்த துன்பம் வந்தாலும் 
இருளை நீந்தி கடப்பவன் ஒளியை காணுகின்றான்
பகல்லொளியை கண்டவன் யாரும்
 இரவிருளை சந்திக்காமல் வருவதேயில்லை!  
-அகிலன் தமிழன் 

0 comments:

Post a Comment