உண்மையும் பொய்யும்




மனமே  உண்மையை நேசி
உன்   வாழ்க்கை உயா்வாக
வளம் பெரும்
பொய்யை நேசம் கொண்டால்
வாழ்வும்   காயம் கொள்ளும்

பொய் அழகு போன்று
தோன்றலாம்
அதுவே மகிழ்சி  என்றும்
எண்ணம் வரலாம்
வாழ்வின்  முடிவில் பொய்
நெஞ்சில்   நஞ்சாக யாசிக்கும்
உண்மை வேண்டத்தகாததாக
இருக்கலாம்
அது துன்பம்  என்ற
எண்ணம்மும்  தோன்றலாம்
வாழ்வின்  முடிவில்
உண்மையே
உன் நெஞ்சில்
சந்தோசம்மாக  யாசிக்கும்!

காலையடி:அகிலன் 

0 comments:

Post a Comment