தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி:14‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ்(Homo erectus), ஹேமோ ஹபிலிஸ்(Homo habilis)  ஆகியவையில்  இருந்து  பரிமாணவளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ்(Homo sapiens/வாழும் மனிதஇனம்)என்ற இப்போதைய மனித இனம் உருவானதுபரிணாம வளர்ச்சியில் ஒரு செல்உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வினின்கொள்கை.மாணிக்கவாசகரும் இதே போன்ற கருத்தை பாடியிருக்கிறார் . "புல்லாகிப்பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய்மனிதராய்என்று  அவ்வாறாக 0.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்போதையமனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் உருவானது என்கிறது பரிணாமவிதி எனப்படும் பரிணாம கொள்கை  [evolution theory].இடையிடையே பல மனிதஇனப் பிரிவுகள் காலமாற்றத்திற்கு உட்பட்டு அழிந்துவிட்டனஉதாரணமாகநியான்டர்தால்’[Neanderthal] மற்றும் ‘ஆஸ்த்ராலோபித்திக்கஸ் ’ [australopithecus]மனிதப்பிரிவுகள்

பல நூலாசிரியர்கள் சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையே உள்ள இனம்,மொழி,பண்பாட்டு ஒற்றுமையை[உறவைஅடிப்படையாக கொண்டு இருஇனமும் ஒரே இன குழுவை[குடும்பத்தைசார்ந்ததாக முடிவுசெய்துள்ளார்கள்.அதாவது  ஈலம்[Elam], சுமேரியா மக்கள் திராவிட இனத்தைசேர்ந்தவர்கள் என்பது அவர்களின் முடிவு

டாக்டர் எச்.ஆர்ஹால் (Dr. H.R. Hall) என்ற வரலாற்று அறிஞர்மேசொபோடமியாவிற்கு திராவிடர்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தார்கள்என்கிறார்.அதே நேரம் வேறு அறிஞர்கள் திராவிடர்கள்   தமது முன்னையகுடியிருப்பான   மத்தியத்தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா புலம் பெயர்ந்தார்கள்என்கிறார்கள்.KP பத்மநாபா  மேனன் திராவிடர்-சுமேரியர்களின் நெருங்கியதொடர்புகளைப் பற்றி எழுதியுள்ளார் இவர் ஒரு சிறந்தவழக்கறிஞர்,நீதிபதி,வரலாற்றாசிரியரும் ஆவார்.பல கீழ்த்திசை மொழிப்புலமையாளர்கள்[Orientalists] சுமேரியர்கள் தொடக்க கால திரா விடர்கள் என்பதைஒத்துக்கொள்கிறார்கள் .அங்கு இருந்து திராவிடர்கள் இந்தியாவின் வட மேற்குபகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.எனினும் அங்கு அவர்கள் பல காலம் வாழமுடியவில்லை . அவர்களை அங்கு வந்த ஆரியன் குழு தாக்கி அவர்களை நிரந்தரமாகதென் இந்தியாவில் தங்க வைத்து விட்டது.இதைஇந்த கருது கோளை ,நம்பகமானஅறிஞர்கள் வலிமையாக  ஆதரித்து வாதாடுகிறார்கள்

சுமேரியர்களின் நூலின் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உட்பொருளை சரிவரவெளிப்படுத்தி யுள்ளார்கள்.சுமேரியனுக்கும் தமிழனுக்கும் இடையே உள்ளமொழி,பண்பாட்டு இனவொற்று மைகள் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலஇடை வெளி என்பது இங்கு  சுட்டிக்காட்டப் பட்டுள்ளதுபன்மொழிப்  புலவரும்பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம்,மலேசியாவைசேர்ந்த முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம்பினாங்கு.போன்றோர்இதில் பல ஆய்வுகள்/முயற்சிகள் செய்துள்ளார்கள்பேராசிரியர் சதாசிவம் மற்றும்முனைவர் கி.லோகநாதன் போன்றோர்கள்  சுமேரிய மொழியையும்திராவிடமொழியையும்ஒப்பியல் முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிடமொழி என நிறுவினார்கள்இந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவரானகல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி அவர்கள் கோயில் வழிபாட்டில் உள்ளஒத்த தன்மையை சுட்டிக்காட்டியுள்ளார்திராவிடர்களின் மூதாதையர்களை மத்தியத்தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் இந்த கருது கோளை ,நம்பகமான அறிஞர்கள்இன்னும் ஆதரித்து வாதாடுகிறார்கள்.

பேராசிரியர் .சதாசிவம் சமஸ்கிருதம்மலையாளம்பாளிதெலுங்குகன்னடம்,ஜேர்மன் முதலிய மொழிகளிற் புலமை சான்றவராக விளங்கினார்.ஞானப்பிரகாசஅடிகளாரின் பின்பன் மொழிப்புலமையில் தலையாயவராகவிளங்கியவர் இவரேசுமேரிய மொழியையும்திராவிட மொழியையும்ஒப்பியல்முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிட மொழி என நிறுவினார்.

ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரைஇன்று ஈராக்எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுதுஉலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர்பிறகுஇவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனியநாகரிகத்தை வளர்த்தனர்சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்துமறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர்ஆனால் உண்மையில் அதுஅழிந்துவிடவில்லைபல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில்பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும்குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்றுமுனைவர் கி.லோகநாதன் கூறுகிறார்.மேலும் சுமேரு மொழி பழந் தமிழேஎன்றுசுமேருத் தமிழைப் பற்றி எளிமையான பல கட்டுரைகளை படைத்தும் உள்ளார்.அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா[En-hedu-ana] எனப்படும் ஓர் அம்மையார்எழுதிய The Exalatations of In-Anna. இதை  சுமேருத் தமிழில் "ஈனன்னை சீர்பியம்"ஆக   மிகவும் எளிமையாகத் தந்துள்ளார்.ஏண் உடு அண்ணா எனும் இந்த அம்மையார்தான் கி.மு மூன்றாம் மில்லென்னியத் தின் தலை சிறந்த மெய்ஞானியாகபோற்றப்படுகிறார்.இவர் தான் சிறைப்பட்டு கிடந்த போது ஈனன்னையின் அருளைவேண்டிப் பாடிய பாடலே இது.அதன் மூலம் சுமேரிய மொழிதொல் தமிழ் என்றுமட்டும் அல்ல சுமேருத் தமிழ் பண்பாட்டிற்கும் இன்றைய தமிழர்களின்பண்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியும் அறியமுடிகிறது.இத்தொடரில் ஆழமான மெய்யறிவுச் சிந்தனைகள் மிளிரும் வரிகளையே தேர்ந்துஅவற்றின் பொருளை விளக்கி எவ்வாறு திராவிட மெய்யறிவு சிந்தனைகளோடு அதுஇன்றும் தொடர்பு கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் கண்டு மகிழும்வகையில் விளக்கி உள்ளார்.

அதே போல சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்என்ற ஒரு கேள்வியுடன்இங்கிலாந்து நாட்டில் வாழும் திருமதி நிவேதா உதயராஜன்[வரலாற்று ஆய்வாளர்]தனது கருத்துகளை அலசுகிறார்.எனினும் 10 October 2012 இல் யாழ் இணையத்தில் "சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்?"என்ற கேள்வியுடன் ஆரம்பமானமெசொபொத்தேமியா சுமேரியர் பற்றிய இந்த தமிழ் கட்டுரை  14 December 2012  உடன் ஏனோ நின்றுவிட்டது.அதன் பிறகு யாழ் இணையத்தில் வெளி வந்த இந்தகட்டுரை,மீண்டும் ஒரு புதிய   தொடராக இப் போது October 1, 2013 இல் இருந்துவணக்கம் லண்டன் இணையத்தில் தொடராக வெளிவருகிறது.உதாரணமாக வரலாறுஎன்றால்[பகுதி -1] , மெசொப்பொத்தேமியா வருகை [ பகுதி -2], விவசாயம்கண்டுபிடிப்பு [ பகுதி-3],பண்டமாற்று [பகுதி-4],கட்டடக்கலை[பகுதி-5],சீகுராட் [பகுதி–6]/February 3,2014,என்று தொடர்கிறது.சுமேரியனையும் சுமேரியநாகரிகத்தையும் பற்றிய இந்த தமிழ் தொடர்  ஒரு நல்லதொரு முயற்சி.இது முடியும்வரை தொடரும் எனவும் ,மேலும் தமிழனுக்கும் சுமேரியனுக்கும் உள்ள நெருங்கியதொடர்புகளை பலர்  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களுடன் அலசுவார் எனவும்நம்புகிறோம்மேலும்  சில தகவல்களை ,தமது கருத்துகளை இவர் இங்கிலாந்துநாட்டில் வாழும் N. சிவ கணேசன் அவர்களுடைய தலைமையில்ஓர் இருதொலைக்காட்சி நிகழ்வு மூலமாகவும் பொதுவாக  தந்துள்ளார்கள்.அதில்முக்கியமானது "ஆதித் தமிழரின் அதி உன்னத வழர்ச்சிக்கு காரணமாக இருந்தது பொறிமுறையாக்கப்பட்ட நீர்ப்பாசன முறைஎன்பதே ,அந்த முறையை  தான் நாம்தமிழர்களின் நாகரிகமான இங்கும்[சுமேரியாவிலும்] ,சிந்து சமவெளியிலும்,மூவேந்தர்கள் ஆண்ட பண்டைய தமிழகத்திலும் காண்கிறோம்.மேலேகூறிய இரண்டு இனங்ககளின் மொழிகளுக்கிடையே உள்ள ஒத்த தன்மைக்குஅப்பால்,மேலும்  வாற்கோதுமை [பார்லி], கோதுமை பயிர் செய்கை[வேளாண்மை],மெசொப்பொத்தேமியாவில் ( இன்றைய தென் ஈராக்இருந்து சிந்து சம வெளிக்குபரவியது என்பதை பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.அது மட்டும்அல்ல "ethno-botanical data tracking" கும் அதை உறுதிபடுத்துகிறது.மேலும் இந்தவேளாண்மை மெசொப்பொத்தேமியாவில்,இயூபிரட்டீசு[Euphrates] ஆறு பகுதியில்,கி மு 8500 அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின் அது சிந்து சம வெளிக்கும் இந்தியதுணை கண்டத்திற்கும் கி மு 6500 அளவில் அடைந்தது எனவும் நம்புகிறார்கள்.  


[ நம்மு[Nammu] (கி. மு 2100) எனும் மன்னனால் ஊர் பட்டணத்தில் சந்திரக் கடவுளுக்கு   கட்டப்பட்ட.  சிகுரத் எனப்படும்  பெரிய கோவிலின் பெரிய படிகட்டுகள்/The original "Stairway to Heaven". The grand staircase of the great ziggurat at Ur. The temple was dedicated to Nanna, the moon god]

0 comments:

Post a Comment