நலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா?


எப்படி தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா?சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? அப்படியானால், முதலில் கவனியுங்கள்
·         சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க.
·         அதற்காக "டிவி" பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான      இசை கேட்கலாம்.
·         பத்து நிமிடம் வரை புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போகலாம்.
·         படுக்கப்போகும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம், இவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
·         கிளுகிளு, அட்வென்ச்சர் புத்தகங்களை படிக்க வேண்டாம். படித்தால், அட்சுனலின் சுரப்பி எகிறிப்போய், அது தூக்கத்தை கெடுக்கும்.
·         தூங்குவதற்கு முன் வாக்கிங், உடற்பயிற்சி கூடாது. குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்துக்கு முன்பு தான் நல்லது.
·         இரவில் காபி , டீ , சாக்லெட் , கோலா சம்பந்தப்பட்டவை எதுவும் கூடாது.
·         படுக்கப்போகும் முன், சிகரெட் குடிக்கக்கூடாது. அதுபோல மதுவும் கூடாது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பேமுடித்துவிட வேண்டும்.
·         படுக்கையில் படுத்தபடி உங்கள் அன்றாட சம்பவங்களை சிந்தித்தால் தூக்கம் உங்களை நெருங்காது.எல்லாவற்றையும் மறப்பதற்கு உங்களோடு சம்பந்தமில்லாத உதாரணமாக ஒரு கழுதையையோ,குதிரையையோ ஒன்றை மட்டும் மனதில் உறுதியாக நினைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நிமிடம் உங்களை தூக்கம் ஆட்கொண்டு விடும்.
·         குறிப்பிட்ட நேரத்திற்கே படுக்கப்போங்கள். பகல் நேர "குட்டித்" தூக்கம் மிக நல்லது. .
🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 🛌 

3 comments:

  1. vinothiny pathmanathan dkSaturday, June 18, 2011

    அருமையான டிப்ஸ் .நன்றி

    ReplyDelete
  2. நான் குரங்கை நினைத்துக்கொண்டு படுத்தேன்.துக்கம் வரவில்லையே!

    ReplyDelete
  3. கட்டுரையை சரியாகப் படிக்கவில்லையா சார்.உங்களோடு சம்பந்தப்பட்ட உங்கள் மூததையரை நினைத்தால் நித்திரை வருமாயென்ன?

    ReplyDelete