விளைநிலம்



வியர்வை ஓடும் விளைநிலம்
விலையில்லா
உணவளிக்கும் உறைவிடம்
விவசாயி உள்ளவரை
காத்திருக்கும் விளைநிலம்
விட்டு கொடுக்க முடியாத
கற்பகம்
விழி மூடி மௌனமாய்
விலைகொடுத்து வாங்க வேண்டாமே!

உயிர்கள் உண்டாக
பெண்மைகள் இல்லை என்றால்
உனக்கும் அழகான உயிர்
கிடைத்துவிடுமா?
உணவு உண்டாக
விளைநிலம் இல்லையென்றால்
உன் வாழ்வும் நிலைத்துவிடுமா?

வீணான விதண்டா வாதம் மென
விலகியே போவீர்கள் எனில்
விரைவிலேயே வந்துவிடும் பட்டினி
இருளில்லா வாழ்வுக்காய்
இன்றே செயல்படுவோம்
ஓங்கியே உலகமெங்கும்
வறுமை நீங்கட்டும்!

🖎காலையடி,அகிலன் 






0 comments:

Post a Comment