இந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.

நான் இந்து விரோதியல்ல .ஆனால் இந்துவை நியாயப்படுத்த எடுக்கப்படும் உங்கள் கருத்துக்கள் ஆதாரமாற்ற், உண்மைக்கு புறம்பான வை என்பதால் அறியத் தருகிறேன் 
இந்துக்களில் கூட்டு வழிபாடு பெரும்பாலும் இல்லை. மாறாக யாரும் எப்பொழுதும் வரலாம். வழிபடலாம்./
⇶இது சைவாகம முறைக்கு எதிரான கருத்து . ஆலயத்தில் தீபம் காட்டும்போது மட்டுமே இறைவனை வணங்கலாம் என்பது வழிபாட்டு முறை. எனவே கூடி நின்றே வழிபடவேண்டி வரும் 
🙏இந்து ஆலயங்களில் வழிபாட்டுக்கு முன்பு சம்பிரதாயபடி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய் பரவும் முதல் வழி தடுக்கப் படுகின்றது./
⇶இது ஏற்றுக்கொள்ளலாம் 
🙏ஆலயத்தில் சுவாமிக்குக் காட்டும் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும், அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதன் உண்மைத் தத்துவம் இதுதான்./
⇶ இது என்ன கையில் மட்டுமா கிருமி உள்ளது.சரி இருந்தாலும் கற்பூரம் ஒரு நஞ்சு என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த நஞ்சினை கண்ணில் வைப்பது கண்ணுக்கு நல்லதா?
🙏கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள். அடிக்கடி கழுவுங்கள் என இப்போது உலகம் ஒப்பாரி வைக்கும் வேளையில்....தீபச் சுடரில் கைகளை காட்டி சூடேற்று. அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்ன மதம் இந்துமதம்./⇶கற்பூரம் ஒரு நஞ்சு என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
🙏கர்ப்பக் கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் நோய்க் கிருமிகள் முகத்தில் அண்டாது. அது கிருமி நாசினி , பசு சாண சாம்பல் இருக்குமிடம் கிருமிகள் வராது./
⇶நெற்றியில் மட்டும் தானா  கிருமிகள் தொற்றும். பசு சாண சாம்பல் கிருமி நாசினி எனில் இந்திய விஞ்ஞானிகள் இதை ஏன் விட்டு வைத்துள்ளார்கள்?
🙏சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுகின்றன. ஆலயமெங்கும் புகை பரப்பும் அதுதான்./
⇶இதை நீங்கள் வைத்தியரிடம் கேட் டால் சிரிப்பார். சாம்பிராணி ஒவ்வாமையினை ஏற்படுத்த வல்லது.
🙏ஆலயமெங்கும் தீபம் ஏற்றப்படும் தத்துவமும் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேஷமானது./
⇶எனன விசேட சக்தி என அனுபவத்தில் யாரும் கூறியதில்லை.
🙏இவை அனைத்தும் வீட்டில் விளக்கேற்றி, சாம்பிராணி போட்டு, கற்பூர தீபம் காட்டி சுவாமியை வழிபடும் போது, வீடும் நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கப் படுகிறது./
⇶மீண்டும் அதுவே சாம்பிராணி,கற்பூரம் நஞ்சு .
🙏ஆலயங்களில் தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதை கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுக்கப்படும்./⇶இதுவரையில் யாரும் எந்த நோய்க்கும் இவற்றினைப் பாவிக்கவில்லையே.
🙏கோயில்களில் பிரச்சாதம் என தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே./
⇶இது மருந்தெனில் ஏன் வீட்டில் நோய் வேளையில் நீங்கள் தயாரிப்பதில்லை .
🙏அது வைஷ்ணவ ஆலயமாக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கபடும் வேப்பிலையும் சிறந்த நோய் தடுப்பு மருந்துகள்./
⇶இது சொல்லில் தாராளம்,செயலில் இல்லை  
🙏ஆலய மணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்? ஆலயமணியின் சில அதிர்வுகள் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள், மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். இசை ஒலிக்கப்படும் தத்துவமும் இதுவே /
⇶சில மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். சில மெல்லிய இசையும் நீங்கள் சொல்வது சரி,ஆனால் காது கிழிய ஆலயங்களில் எழுப்பப்படும் மணி ஒலி ,  ஒலிபெருக்கி ,மேளம்  நீங்கள் கூறியவற்றிற்கு  மாறான விளைவுகளும் , செவிப்பறையை உடைந்துவிடும் என்பது நீங்களும் அறிந்ததே. அமைதியான சூழ்நிலையில் தானே இறைவனை மனதி எண்ணி வணங்கலாம்.
🙏கோவில் எல்லோரும் வரும் இடம். விக்கிரகங்களையும் ஐயரையும் எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருக்கச் சொன்னார்கள். அர்ச்சகர் தள்ளி நிற்பதும் அதிகம் தொட்டுப் பேசாததன் காரணமும் இதுதான்./
⇶இது பச்சைப் பொய் .சாதி வெறி பிடித்த பிராமண சமுதாயம் கொண்ட முறைகளே தள்ளிநிற்றல் ,தொட்டுப் பேசாததன் காரணமும்
🙏மாமிச உணவு உடல் வெப்பத்தை கூட்டும். ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும் அசைவ உணவினை உண்டவர்க்கு ஆலயத்தில் அனுமதி இல்லை என்றார்கள்./
⇶ மாமிச உணவை சைவம் மறுக்கிறது. அது உடலுக்கும்  நல்லதல்ல.உங்களுக்கு ஏற்புடையதாக எழுதுகிறீர்கள் 
🙏அடிக்கடி காலையும் மாலையும் சில விக்ரகங்களை அபிஷேகம் என‌ கழுவுகின்றார்களே அதுவும் மருத்துவம் தான்./
⇶அபிஷேகம் என்ற பெயரில் மக்கள் வயித்தில் பட்டினிபோட்டு ,உணவை வீணாக்குவதில் என்ன மருத்துவம் இருக்கிறது?. வீணானவை புளித்து கிருமிகளை வெளியேற்றி சுத்தம் கெடுமல்லவா! 
🙏அக்காலத்தில் விக்கிரகத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இருந்தது, பலர் தொட்டு செல்லும் நிலையில் நோய் பரவிவிட கூடாது என்பதற்காக அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துகளும் இட்டு கழுவி சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள். கற்பூர தீ கூட கிருமி அழிக்கும் தன்மை கொண்டதே,/
⇶ஐயோ கற்பூரம் நஞ்சையா, நீங்கள் சுத்தம் பேணுபவராக இருந்தால் ஏன் விக்கிரத்தை தொட்டு வணங்குவதை இந்து அனுமதித்தது.தொடுவானேன்? ,பின்னர் கழுவுவானேன்? 
🙏நறுமண பூக்களால் அலங்கரித்தார்கள், நல்ல மணம் கூட சில நல்ல விஷயங்களை கொண்டுவரும்./
⇶என்னநல்ல விஷயங்கள் என்று குறிப்பிடவில்லையே! 
🙏திதி கொடுத்தல் இன்னும் சில விஷயங்களில் அர்ச்சகர் எமது கையில் தர்ப்பை கட்டுகின்றாரே ஏன்? தர்ப்பையில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தது இந்து சமூகம்./
⇶திதிகொடுத்தலு  க்கு என்ன நன்மை உண்டு . ஒன்றுமில்லையா ? கிருமி தடுக்கும் தர்ப்பை எனில் வழமையாக அதை பாவித்திருக்கலாமே?எல்லாவற்றையும் கிருமி ,கிருமி என்று உங்களை நீங்களே ஏமாறுவதேன்?
🙏இந்துக்கள் எதெல்லாம் செய்ய சொன்னார்களோ அதெல்லாம் நோய் தடுப்பென்றும், எதெல்லாம் தீட்டு என்றார்களோ அதெல்லாம் நோய் பரப்பும் விஷயம் என்பதை இப்போது மௌனமாக ஒப்புகொள்கின்றது உலகம்./
⇶எங்கே? யார்? எதை ? ஒப்புக் கொண்டார்கள்.  தீட்டு என்பதைபார்த்து   உலகம் சிரிக்கிறதே? 
🙏தொற்றுநோய் என புத்த விகாரை முதல் மேற்கத்திய தேவாலயம் வரை மூடப்பட்ட நிலையில், இந்து ஆலயங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒழிந்திருக்கும் நோய் தடுப்பு முறையினையும் அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யபட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி வியந்து கொண்டிருக்கின்றது உலகம்./
⇶இது ஆதாரமற்றது.இந்து ஆலயங்களும் மூடப்பட்டது தானே. 
இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல, புரிந்து கொள்ள முடியாத மூடர்களின் கூட்டமே அப்படி சொல்லுமே அன்றி,
அறிவுள்ள உலகம் நெருக்கடியான இந்நேரத்தில் இந்து ஆலயங்களின் பெருமையினை உணர்ந்து செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது./

 ⇶எல்லா மதத்தினரும் இப்படித்தான் தங்களுடையதை பெருமைப்படுத்த பூசி மெழுகிக்கொண்டு அடுத்தவரை மூடர் என்கிறார்கள்.
ஆம், இந்து சமயம் ஓர் மதமல்ல.
மனித வாழ்வியல் நெறி.

➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥➥

0 comments:

Post a Comment