சிரிக்க...சிரிக்க....


     சிரிப்பு வருது

சார்ஆறு வருஷத்துலநீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு                சொன்னீங்களேஎன்ன ஆச்சு?

இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!

…………………………………………………………….

டொக்ரர்:உப்பு, உரப்பு, காரமெல்லாம் கூடாது. அரைவேக்காடாவே சாப்பிடணும்...!

நோயாளி:"கல்யாணமானதுலேருந்து அப்படித்தானே டாக்டர் சாப்பிட்டு வாரேன்...!

…………………………………………………….

நர்சு:ஏன் டாக்டர்... போஸ்ட் மார்ட்டமாவது ஒழுங்கா பண்ணக்கூடாதா...?

டொக்ரர்:ஏன் என்னாச்சு...?

நர்சு:சரியா உயிர் போகல போலேருக்கு. பாருங்க...  நீங்க போஸ்ட் மார்ட்டம் பண்ணின பேஷண்ட் எழுந்து நடந்து போறதை...?

……………………………………………………………………..

மனைவி:என்னங்க!நாங்க செத்துட்டா husband&wife தனியாத் தான் இருக்கவேனுமாமே!!!

கணவன்:அதனாலதாண்டி அது சொர்க்கம் எண்டு சொல்லுறாங்கள் .

மனைவி:....???????    

………………………………………………………………………

நோயாளி: டாக்டர்.வாய் நாறுது.

டாக்டர்:எப்போதிலிருந்து?

நோயாளி:நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து

………………………………………………………………….

.மாணவன்:ஒன்றும் தெரியாத எனக்கு எக்ஸாம் நேரம் கேள்விப்    பேப்பரைத்தாறங்கள்.எல்லாமே தெரிஞ்ச வாத்தியாரிட்டை answer பேப்பரைக் குடுக்கிறாங்கள்.என்ன கொடுமை சார் இது?

……………………………………………………………………….

மகள்:மம்மி,எனக்குத் தம்பிப் பாப்பா வேணும்.

அம்மா: உங்க டாடி துபாய் போயிருக்கிறார்.வந்த உடனே யோசிப்போம்.

மகள்:நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் குடுப்போம் மம்மி.

அம்மா:….!!!!!

……………………………………………………………………….

நோயாளி: டாக்டர்.நீங்கள் எனக்கு ஒரு காரியம் பண்ணவேணும்.

டாக்டர்:சொறி,ஒப்பிரேசன் மட்டும் தான் நான் பண்ணுவன்.காரியம் நீங்க ஐயரை வைச்சுத் தான் செய்யவேணும்.

……………………………………………….

மனைவி:என்னங்க..திடீரென்று பூகம்பம் வந்துதுங்கஅப்பிடியே நிலத்திலை விழுந்திட்டேன்.

கணவன்:நல்லா யோசிச்சுப் பாரு..பூகம்பம் வந்த பிறகு நீ நிலத்தில விழுந்தியா?இல்லை,நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துதா?

……………………………………

டாக்டர்:உங்களுக்கு எப்போதிலிருந்து கை,கால் நடுக்கம் இருக்கிறது?

நோயாளி:என்ரை கலியாண நாளை மறந்திட்டன் டாக்டர்.

……………………………………………………………….

நோயாளி:ஒப்பிரேசன் பண்ணினா பிழைப்பேனா டாக்டர்?

டாக்டர்:நான் பிழைக்கிறதே ஒப்பிரேசன் பண்ணித்தானே!

………………………………………………………………………….

நோயாளி:வயித்துவலி தாங்க முடியலை டாக்டர். தற்கொலை பண்ணவேணும் போலை இருக்கு.

டாக்டர்:அதுக்குத்தான் ஒப்பறேசனுக்கு தேதி குறிச்சாச்சே.அதுக்குள்ளே ஏன் அவசரப்படுறீங்க.

1 comments: