திருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்!!!

     

திருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள், புகைப்பிடித்தலுக்கு சமமானவைஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால்உடல் மெதுவாகவும் அமைதியாகவும் பாதிக்கப்படுகிறதோஅதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால்திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறதுதற்போது விவாகரத்தானது எளிதில் ஏற்படுகிறதுஇதற்கு காரணம்  குணங்கள் தான்அத்தகைய குணங்கள் இன்றைய மக்களது மனதில் அதிகம் உள்ளது.

எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால்நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம்நிறையப்பேர்  விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லைமற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர்உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளனஅதுதான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல்பேசும் வார்த்தைகள்கோபம்அகங்காரம் போன்றவை.

இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால்நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும்எனவே திருமண வாழ்வைவிவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்அதைப் படித்து தெரிந்து கொண்டுஅத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கிசந்தோஷமான மணவாழ்க்கையை வாழுங்கள்.


எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாதுஇது தான் மண வாழ்விற்கு முதல் எதிரிமுதலில் அனைவருமே "திருமணம் என்பது ஆர்வமுள்ள ஒரு விளையாட்டுஇத்தகைய விளையாட்டில் இருவருமே நன்கு விளையாடிஇருவருமே வெற்றி பெற வேண்டும்என்று நினைக்க வேண்டும்.


சந்தேகம் என்பது ஒரு நோய்அந்த நோய் ஒருமுறை வந்தால்அதனை குணப்படுத்த முடியாதுஎனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும்அதற்கு முதலில் துணை மீது நம்பிக்கை வேண்டும்.
 

தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும்அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன்அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், கைபேசியினை சுரண்டிக்கொண்டிருந்தால்  அவையும்  இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.


இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால்இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறதுஇவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால்பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்எனவே எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும்துணையுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.


இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால்அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும்அதைவிட்டுஅதனைப் பற்றி அடிக்கடி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தால்அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்திபிரிவை உண்டாக்கும்.


[உதாரணமாக கணவர் கார் செலுத்தும்போது விபத்து நடந்தால் , மனைவி அவருடைய  துக்கத்தில் பங்குகொள்ளாது ,அவரில் குறை பேசிக்கொள்ளல்] துணை ஏதேனும் தவறு செய்து விட்டால்அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போதுஅவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும்அதைவிட்டுஅவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால்பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும்மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும்அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால்பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாதுஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.


இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம்ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால்சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும்பின் அதுவே விவாகரத்து வரை முடியும்ஆகவே எதுவாக இருந்தாலும்தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்.


சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள்அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போதுவேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால்அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும்எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள்திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால்எந்த பிரச்சனையும் இருக்காதுஇது ஒருவரது மனம் மற்றும் புரிதலை பொறுத்ததுஆகவே அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்.


அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும்அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாதுஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள்ஆனால் அதுவே தொடர்ந்தால்பின் பிரிவை சந்திக்க நேரிடும்.

வீட்டுக்கு வீடு வாசற்படிபோன்று ,ஒவ்வொருவர் வாழ்வினிலும் பிரச்சனைகள் இல்லை என்றில்லை. வாழ்க்கையென்பது பிரச்சனைகளைக் கண்டு செல்வதுதான் என உணர்ந்து எதனையும் எதிர்கொள்ள துணிவுடன் வாழ்வதே, வாழ்க்கை எனலாம்.

-படித்ததில் பி[பு]டித்ததது 


0 comments:

Post a Comment