சிரிக்க சில நிமிடம்....



😄01 😄

கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?

மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்

கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

😄02 😄

மன்னன்: மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

அமைச்சர்: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லியிட்டான்.

மன்னன்: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

 அமைச்சர்: அதைத்தான் சொல்லிட்டான்...!

😄03😄

விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, :ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது. 

ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ......

😄04😄

வேலு:'மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு

உண்டா?'' 

பாலு:''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!''

😄05😄

பெண்: "டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"

டொக்ரர்:"ஏன் என்னாச்சு?"

பெண்:"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!"

😄06😄

கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?

மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ சாறி கட்டியதும் , வந்துடுறேன்னு.. இருங்க..

😄07😄

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.

டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?

நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.

😄08😄

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

😄09😄

பயணி:"கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்." 

நடத்துனர்: "அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு."

😄10😄

மனைவி: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"

கணவன்:"நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."

😄11😄

சோமு: எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்

தாமு:அப்புறம்?

 சோமு: நான் தான் தட்டிக் கொடுத்து, ஒருமாதிரித்  தூங்க வச்சேன்…!

😄12😄

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்!

😄13😄

காதலன் : எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு உங்க வீட்ல ஒத்துகிட்டாங்க..

காதலி : பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....

😄14😄

இராசம்மா :"பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும், பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு பைத்தியம்னு பொண்ணு கொடுக்க மாட்டேனுட்டாங்க." "அவன் அப்படி என்ன சொன்னான்?"

செல்லம்மா: "நான் கொஞ்சம் தனியா பேசணும். பரவாயில்லையா?"னு சொன்னான்.

😄15😄

உண்ண வந்தவர்: "என்னப்பா காபியில '' செத்துக்கிடக்குது...?" 

பரிமாறுபவர்: "ஸ்பெஷல் காபியிலதான் சார் '' உயிரோட இருக்கும்"

📂:தொகுப்பு:செ.மனுவேந்தன் 


0 comments:

Post a Comment