வர்ணத்திரையில் இவ்வாரம் ....

 


உலகம்மை’

காதல் எப்.எம்., குச்சி ஐஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்த விஜய் பிரகாஷ், ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘உலகம்மை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி கெளரி .இளையராஜா இசையமைக்கிறார் என்று படக் குழுவினர் கூறுகிறார்கள். சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவிய கதை இது.

 

'அனபெல் சுப்பிரமணியம்'

விஜய்சேதுபதி 'அனபெல் சுப்பிரமணியம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக டாப்சி வருகிறார். இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.ராதிகா, தேவதர்ஷினி, யோகிபாபு, சுப்பு பஞ்சு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். திகில் கதையம்சம் உள்ள இப்  படத்தில் சரித்திர காலத்தையும், இப்போதைய காலத்தையும் காட்சிப்படுத்தி இருப்பதாகவும், சரித்திர கால கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி மன்னராகவும், டாப்சி ராணியாகவும் நடிப்பதாக தகவல்.அதோடு படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

5 படங்களில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ஹீரோ படம் வெளியான பிறகு டாக்டர் மற்றும் அயலான் படங்களில் நடித்தார்.படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடப்பதாக தகவல். அடுத்து புதிதாக 5 படங்களில் நடிக்க உள்ளார்.அதில் ஒரு படம் டான் என்ற பெயரில் தயாராகிறது. இதில் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன், காளிவெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னொரு படத்தை அனுதீப் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல்.இதையடுத்து அறிமுக இயக்குனர் அசோக் இயக்கும் படத்திலும், அதோடு மேலும் 2 புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

 

 

விக்ரம்

கமல்ஹாசன், இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க தொடங்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய இருவரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ,நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக உறுதியற்ற தகவல்.

 

படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜுக்கு விபத்து

தற்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் நடிக்கும்போது  திடீரென்று கால் சறுக்கி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது இடது கை தோள்பட்டையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றார்.

 

நடிகை சரண்யா சசி மரணம்

தமிழில் 'பச்சை என்கிற காத்து' படத்தில் நடித்தவர் சரண்யா சசி. மலையாளத்தில்  பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சரண்யா சசிக்கு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக கடந்த 10 வருடங்களாக  அவருக்கு 11 தடவை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு  சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். பின் வேறு சில உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சரண்யா சசி மரணம் அடைந்தார்.

 

பிரபுதேவா பேய்

பிரபுதேவா பேய் படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். ஏற்கனவே திகில் கதையம்சத்தில் தயாரான 'தேவி' படத்திலும் பிரபுதேவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 'தேள்', 'யங் மங் சங்' படங்களிலும் நடித்து இருக்கிறார். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவாவுடன்  வரலட்சுமி, ரைசா வில்சன் ஹீரோயின்களாக இணைகின்றனர்

 

மகனுடன் விக்ரம் நடிக்க..

விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் தந்தை மகனாகவே இணைந்து நடிக்கின்றனர். இது விக்ரமுக்கு 60-வது படம். சிம்ரன், வாணிபோஜன் கதாநாயகிகளாக வருகிறார்கள்.படப்பிடிப்பு முடிந்ததும் பெயரை அறிவிக்க உள்ளனர்.

📂-தொகுப்பு செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment