சிரிக்க சில நிமிடம்

 

😁😀😁😃😁😃😁😃

01.

சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே..

02.

அமலா : நேத்து என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.

விமலா : எத வச்சு சொல்ற?

அமலா : பீரோ சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே

03.

அமலா : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

விமலா : யார் சொன்னா?

அமலா : என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

04.

அமலா : ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன ?

விமலா : அலிபாபா

05.

அமலா : என்னடி இது அநியாயம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ?

விமலா : சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?

06.

ஜோன்ஸ் : பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

பீன்ஸ் : துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.

07.

சுரேஷ் : பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்...

ரமேஷ் : "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...'

08.

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

09.

ஆசிரியர் : "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"

ராமு : "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"

10.

இவர் : டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..?

அவர் : ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'(oneway) ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்...

11.

காதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்.

காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

12.

அம்மா : எதுக்குடா, குளிக்கும்போது முதல் செம்புத் தண்ணீரை கீழே ஊத்தறே?

மகன் : முதல் செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்னு, நீங்கதானே அம்மா சொல்வீங்க... அதான் கீழே ஊத்தறேன்...

13.

பாக்கி : நேற்று ஏன் லீவு ?

ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்!

14.

தளபதி : போர் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக் கிடங்கை திறக்கவில்லை?

வீரன் : நமது அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படித் திறப்பது?

15.

நண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?

ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment