சிரிக்க..சில நிமிடம்

நகைச்சுவை=comedy=jokes 

01.கடன்

கந்தசாமி: சார்...என் பெயர் கந்தசாமி....சொந்த ஊரு பழனி.....

முனுசாமி: அதுக்கென்ன இப்போ...?

கந்தசாமி: ஆயிரம் ரூபாய் கடன் வேணும். ஊர் ,பேர் தெரியாதவனுக்கெல்லாம் கடன் கொடுக்க முடியாதேன்னு சொன்னீங்களே...அதான் அறிமுகப்படுத்திவிட்டேன்.

 

02.திருநெல்வேலி அல்வா

ஒருவர்: திருநெல்வேலி வரன் ஒன்று உங்க பொண்ணுக்கு வந்ததே..அப்புறம் என்ன ஆச்சு ?

மற்றவர்:கடைசி நேரத்தில அல்வா கொடுத்திடாங்க.

 

03.சொந்தக்காரர் எங்கே?

ஒருவர்: அந்த டாக்டருக்கு சொந்தக்காரர் என்று சொல்ல யாருமே கிடையாது.

மற்றோருவர்:என்?

ஒருவர்:எல்லாருக்கும் அவர்தான் ஆப்பரேஷன் செய்து அனுப்பினாரு.

 

04.வயது வந்தவர்களுக்கு மட்டும்

ஆசிரியர்:எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையாகச் சொல்லு.

மாணவன்:பி.சி,டி,எப்,......

ஆசிரியர்:டேய்! ஏன்டா முதல் எழுத்து '''' அய் விட்டுச் சொல்லுறாய்?

மாணவன்:அது வயது வந்தவர்களுக்கு மட்டும் சார்!

 

05.காட்டில சிங்கம்

குப்பு:டேய்! நான் இன்னைக்கு காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அது மேல எச்சி துப்பினேன்.அது பயந்து ஓடிப் போயிடுச்சு.

சுப்பு:அட நானும் இன்னைக்கு காட்டில சிங்கத்தைப் பார்த்தேன்.அதோட முதுகில ஏறி சவாரி செயதபோது முதுகு ரொம்ப ஈரமாய் இருந்தது. அது நீ செஞ்ச வேலைதானா?

 

06.ஊசி போட

டொக்டர்:நாய் கடிச்சா தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடணும்.

நோயாளி: முடியாது டொக்டர். நாய் அப்பவே ஓடிப் போயிடுச்சு.

 

07.சாப்பாட்டுக் கடையில்

ராமு: சர்வர்,நீங்க சாப்பிட்டாச்சா?

சர்வர்: ஏன் அக்கறையாய் கேட்கிறீங்க?

ராமு:ஓடர் பண்ணுற எல்லாமே  பாதி பாதியாய் வருது.அதுதான்...

 

08.வாங்குவது யாரு?

நோயாளி: டொக்டர் ,எனக்கு சொந்தமெண்டு சொல்லிக்க யாருமே இல்லை டொக்டர்.

டொக்டர்:அட..கடவுளே..அப்போ ஒப்பரேஷன் முடிஞ்சதும் பொடியை யார் வந்து எடுத்துக்கொள்வாங்கள்.

 

09. நீதிமன்றில்

நீதிபதி: ரெண்டு காலும் நொண்டியாய் இருக்கும்போதே,  இவ்வளவு திருட்டு  வேலை செய்திருக்கிறாயே!  கை, காலெல்லாம் நல்லா இருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பாய்.

திருடன்: இப்படி அனாவசியமா போலீசுகிட்ட மாட்டியிருக்க  மாட்டேனுங்க.

 

10. தொலைச்சுடுவன் தொலைச்சு

வக்கீல்: மை லார்ட்.... என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர். நேர்மையானவர். யாரிடமும் கொடூரமாக நடந்து கொள்வதை அவர் வெறுப்பவர். எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில் என் கட்சிக்காரர் சிறந்தவர்.

கட்சிக்காரர்: (சத்தமாக) யோவ் வக்கீல்... விளையாடுறியா? என்னை பற்றிச்  சொல்லுற என்றுதானே சுளையாய்க்  காசு வாங்கினனி.... இங்க வேற யாரையோ பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே..... தொலைச்சுடுவான்... தொலைச்சு.

 

11. சொத்தை

நீதிபதி: வீட்டுக்கு 'ரெய்ட்' பண்ண வந்தவங்க கிட்ட '''' ன்னு உங்க பல்லைக் காட்டினீங்களாமே?

குற்றவாளி: வந்தவங்க என் சொத்தையெல்லாம் காட்டச் சொன்னாங்க...அதான்.

 

12. சீட்டு

ஒருவர்:உங்களுடன் சீட்டுக்குச் சேரும் பொடியன் அவ்வளவு நல்லவன் இல்லை. இடையில முறிச்சுக்கொண்டு,ஊர் மாறிக்  கால்வாரி விடப்போறான்.கவனம்.

மற்றவர்:நல்ல கதை.நானே முதல் சீட்டை  சேர்த்துக்கொண்டு நாடு மாறுவதற்கு எல்லா ஆயத்தங்களும் செய்துவிட்டேன்.நீங்கள் வேறு அது இது என்று சொல்லிக்கொண்டு...

ஒருவர்:....!!!

 

13. பையனை காணோம்

சிவாஜி : ரெண்டு நாளா என் பையனை காணோம்.

 நம்பியார்: அப்படி எல்லாம் சந்தேகமா என்னை பார்க்காதீர்கள் சார்! என் பொண்ணு வீட்டுல தான் இருக்கா.

 

14. கமிஷன்

தொண்டர்: தலைவா! உங்கள் பெயரில் விசாரணைக்குக்  கமிஷன் வச்சிருக்காங்க..

தலைவர்: ''கமிஷனா'',.... வெரிகுட்! கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?

 

15. கார் குண்டு

கோபு: பையன் பட்டாசு கேட்டா அதுக்கு ஏன் அவனை இப்படிப்  போட்டு அடிக்கிறீங்க?

 பாபு: கார் குண்டு தான் வேணும்னு அடம் பிடிக்கிறான் ராஸ்கல்.

 

16. மேலே படிக்க

மகள்: அப்பா நான் மேலே படிக்க ஆசைப்படுறன்.

 தந்தை: அப்படியா!.... மேஸ்திரி கிட்ட சொல்லி மாடியில ரூம் கட்டி தரச் சொல்லுறன்.

 

17. யோகம் அடிக்கப் போகுது

செந்தில் : நம்ம  ஜோசியர், யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியா போச்சு அண்ணே.

  கவுண்டர்:  ஏண்டா...லாட்டரி ஏதாவது விழுந்ததா?

 செந்தில்: நீங்கள் வேற அண்ணே வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கிட்டு. நேத்து என் பொண்டாட்டி யோகத்திற்கும் எனக்கும் சரியான சண்டை. கடைசியில் என்ர  கன்னம்  வீங்கி போச்சு அண்ணை.

 

18. எடுத்ததை எடுத்த இடத்தில

கோபு: கிணற்றில் விழுந்த குழந்தையை கஷ்டப்பட்டு மேலே தூக்கின நீ எதுக்குடா மறுபடியும் கிணத்திலேயே போட்டே?

பாபு: எடுத்ததை எடுத்த இடத்தில வைக்கணும்னு  எங்க அப்பா சொன்னது நினைவுக்கு வந்துடுச்சே..

 

19. நேரத்தை வீணாக்காதீங்க

பார்த்திபன்:சார், உங்ககிட்ட ஒரு மணிநேரம் தனிப்பட ரீதியில பேசணும்.வீட்டுக்கு வரலாமா?

வடிவேல்: ஐயையோ, வீட்டுக்கு வந்து என் நேரத்தை வீணாக்காதீங்க. ஆபிசுக்கே வந்துடுங்க.ஒரு மணிநேரம் என்ன , இரண்டு மணிநேரம்கூட பேசலாம்.

 

20.maami.com

கோவை சரளா:எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப் போயிடுச்சுதெண்ணு சொன்னீங்க. அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு. 

மனோரமா:இதுக்கு மேல விவரங்கள் வேணும்ணா, கூகிள்ள  போய்  மாமி.காம் ஓபன் பண்ணி பாத்துக்கடியம்மா.

👈👈👈👉👉👉

தொகுப்பு:செ.மனுவேந்தன்/s.manuventhan 


0 comments:

Post a Comment