tag:blogger.com,1999:blog-3559326856048819077.post2587391762907197744..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 06: Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-87499630097539498502020-06-09T07:37:58.584-04:002020-06-09T07:37:58.584-04:00பண்டைத் தமிழர் அரசையும் இறைவனாக மதித்தனர் என்பதற்க...பண்டைத் தமிழர் அரசையும் இறைவனாக மதித்தனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. கோன் உயர குடி உயரும் என ஔவையார் பாடி உள்ளார். சைவசமயம் வரலாற்று பகுதிகளின் பல இடங்களில் சாதி பற்றிய தகவல்கள் உள்ளன. ஆனால் இது இறைவனால் தோன்றியது? மனிதனால் உருவாக்கப்பட்டதா? இது சர்ச்சைக்குரிய விடயமாகவே உள்ளது. நந்தனார் கதை உண்மை. ஆனால் அவர் பிறப்பின் இரகசியம் வேறு.....கருத்துக்கள் அருமை. பாராட்டுக்கள். உருத்திரசிங்கம் நாகேஸ்வரி.https://www.blogger.com/profile/08932748870870697693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-90992631752875160032013-07-27T10:52:52.420-04:002013-07-27T10:52:52.420-04:00"Theebam/ஆடி-2013:கடவுள் ஒருநாள்....பறுவதம் ப..."Theebam/ஆடி-2013:கடவுள் ஒருநாள்....பறுவதம் பாட்டி [ஆக்கம்:செ. மனுவேந்தன்]".இல் இருந்து:<br /><br />பறுவதம் பாட்டி:“அப்போ,புராணக் கதைகளும் உண்மையில்லை என்கிறீர்களா?"<br />"ஜோடிக்கப்பட்ட சிறு சம்பவங்கள்."<br /><br />பறுவதம் பாட்டி:“அப்பிடியெண்டா?”<br />“சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதினால்,ஆத்திரம் அடைந்திருந்த சமணர்கள் சம்பந்தரின் திருமண வைபவம் நடந்த ஆலயத்தினை தீ வைத்து ஆலயத்தினுள் இருந்த அனைவரையும் தீயிட்டுக் கொன்றனர்.இதே போலவே அனைத்து கதைகளும் மனிதர்களினால் தத்தம் கற்பனைகளுக்கு இரையாக்கப்பட்டுள்ளன.”<br /><br />அப்படித்தான் இந்த கதையும் .உதாரணமாக "பெரிய புராண ஆராய்ச்சி" என்ற நூலினை எழுதிய பேராசிரியர் இராசமாணிக்கனார்,தனது "பல்லவர் வரலாறு" எனும் நூலில் சுந்தரர் வழக்கு குறித்துப் பெரிய புராணம் கூறுவனவற்றை எடுத்துக் கூறியதில் இருந்து,பெரிய புராணமே அப்படி அற்புதங்கள் செய்தார் எனும் கற்பனைச் செய்தி பரவியதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது என முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் கூறுகிறார் .<br /><br />63 நாயன்மார்களில் 8 பேர் தீண்டத்தகாத இனத்தவர்கள், மற்றவர்கள் பிரமணர்கள் ,முடிமன்னர்கள், குறுநிலமன்னர்கள். வணிகர்கள். வேளாளர்கள். ஆயர்கள் ஆவார்!ஆகவே அனைத்து மக்களும் அதில் அடங்குகிறார்கள். அது மட்டும் அல்ல உண்மையில் வடமொழி எதிர்ப்பாளர்களாகவே நாயன்மார்கள் பொதுவாக இருந்திருக்க வேண்டும். தமிழிலும் வழிபாடு செய்யலாம் என உ ணர்த்தவே தேவாரங்களை தமிழில் பாடினார்கள் போலும்.பிற்பாடு நாயன்மார்களின் வரலாறுகளையும் பாடல்களையும் தொகுத்தவர்கள் நம்பியாரூரரான சுந்தரர்[ஆதி சைவர்] தமது திருத்தொண்டத் தொகையில் ஒவ்வோர் அடியவர் பெருமையையும் ஒரு அடியில் கூறுகிறார்[ தொகைநூல்]. இதனைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பி[பூசாரி குடும்பத்தார்] திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றினார்[வகைநூல்].இந்த இரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார்[இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதன் மந்திரி] அடியாரின் சிறப்பை ஒரு புராணத்தால் விளக்கினார் [பெரிய புராணம்/விரிநூல்] இவர்கள்[நம்பியாண்டார் நம்பி & சேக்கிழார்], தெரிந்தோ, தெரியாமலோ வரலாறுகளைத் திரித்திருக்க வேண்டும். அதாவது வைணவத்திற்குக் கற்பனை வழங்கியவன் கம்பன் என்றால் .சைவத்திற்குக் கற்பனை வழங்கியவர் சேக்கிழார் போலும்!<br /><br />லோகசாரங்கா என்ற பிராமண அர்ச்சகர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரைக் கல்லெறிந்து காயப்படுத்தியபோது, திருவரங்கக் கோயிலில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த பெருமாளின் நெற்றியில் குருதி கொட்டியது. அர்ச்சகரின் கனவில் வந்த ஆண்டவன், திருப்பாணரைக் கருவறைக்குக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். மறுநாள் காலை லோகசாரங்கா தாழ்த்தப்பட்ட திருப்பாணரைத் தோள் சுமந்து கோயில் கருவறைக்குள் கொண்டு சேர்த்தார். 1,100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிராமணர் தோள் சுமக்க, ஒரு தாழ்த்தப்பட்ட அடியார் ‘ஆலயப் பிரவேசம்’ செய்தார். இதைக் கற்பனைக் கதை என்று புறந்தள்ளினாலும், ஒரு சமூக சமத்துவத்துக்கான சமிக்ஞை இது என்பது உண்மை இல்லையா?<br /><br />அப்படித்தான் நான் நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரத்தை பார்க்கிறேன். <br /><br />‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கும் சுந்தரர் அடுத்த வரியில், ‘திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்’ என்று சாதி சமத்துவம் கொண்டாடவில்லையா?<br /><br />அன்புடன் <br /><br />கந்தையா தில்லைவிநாயகலிங்கம் கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-60167055058769231702013-07-27T00:13:11.592-04:002013-07-27T00:13:11.592-04:00உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் பிரமாதம்.ஆனால் "சிவப...உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் பிரமாதம்.ஆனால் "சிவபெருமான் நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார்.நந்தி விலகிக் கொண்டார்."<br />என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இப்படியான கருத்துக்கள் வரக்கூடும் என ஒரு நண்பர் என்னுடன் வாதாடியுள்ளார்.தொடரட்டும்....manunoreply@blogger.com