tag:blogger.com,1999:blog-3559326856048819077.post3401781071154322071..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: இராவணன் நல்லவனா?..கேள்வி(10.....17)Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-22142670816861161412019-10-20T09:28:38.952-04:002019-10-20T09:28:38.952-04:00It's the best time to make a few plans for the...It's the best time to make a few plans for the <br />future and it's time to be happy. I've read this put up and if I may <br />I want to suggest you few attention-grabbing things or <br />tips. Maybe you can write next articles regarding this article.<br />I desire to learn even more things approximately it!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-16845639452937010132019-03-20T13:00:52.106-04:002019-03-20T13:00:52.106-04:00அருமை நண்பரேஅருமை நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/07727501032879790751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-85314078384944581002018-12-10T23:38:42.959-05:002018-12-10T23:38:42.959-05:00சிறப்பான தகவல். நன்றி.சிறப்பான தகவல். நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-28335899626159357522013-08-11T19:46:54.813-04:002013-08-11T19:46:54.813-04:00விரிந்து பரந்த கடலில் முத்து வேண்டுபவனும் மணல் வேண...விரிந்து பரந்த கடலில் முத்து வேண்டுபவனும் மணல் வேண்டுபவனும் தேவையானதை அள்ளுகிறான். ஆழத்தில் அதிசயங்களை ஒளித்துக் கொண்டு இவர்களை எள்ளியபடி சிரித்துக் கொண்டிருக்கிறது சமுத்திரம்.அமாம் இராவணன் நல்லவனா?. என அறிய அவனைப்பற்றி மற்றவர்கள் பக்தி காலத்திலும் சித்தர்கள் காலத்திலும் கூறியதை ஒருக்கா பார்த்தால் என்ன ? <br /><br />கதை கேட்கும் வயதில் மிகவும் கொடியவனாக, காமுகனாக, அரக்கனாக வர்ணிக்கப்பட்டவன் இந்த ராவணன் .ஆனால் சமுத்திரத்தின் அடியில் போய் பார்த்த போது நான் எடுத்ததை உங்களுக்கு தருகிறேன் <br /><br />போகர், சித்தர்களில் ஒருவர்.‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் "இராவணனார்" என பெருமதிப்புடன் குறிப்பிடுகிறார் <br /><br />“ கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு<br />தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில்<br />வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ<br />மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வசதிகள் மெத்தவுண்டே”<br />[போகர் 7000 சப்த காண்டம்]<br /><br />சிறு வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் பல தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார்.<br />,<br />"கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்" <br />[கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை ]<br /> <br />“வானினொடு நீரும் இயங்குவோருக்கு<br />இறைவனாய இராவணன்"<br />[வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன்]<br /><br />“சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்<br />நாமதேய முடையார்” <br />[இராவணன் சாமகீதம்பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது]<br /><br />இதே போல திருநாவுக்கரசரும் தமது தேவாரத்தில் இப்படி பாடியுள்ளார்:<br /><br />"தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு"<br />[தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு,] <br /><br />"தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை"<br />[தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக,]<br /><br />சுந்தரமூர்த்தி நாயனார், ஒருபடி மேலே போய் இராவணனுக்கு இறைவன் அருள்செய்த திறத்தைக் கண்டே தான் இறைவனின் திருவடியை அடைந்ததாகாக் கூறுகிறார்.<br /><br />"எறியு மாகடல் இலங்கையர் கோனைத்<br /> துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்<br />குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்<br /> கோல வாளொடு நாளது கொடுத்த<br />செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்"<br />[அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்] <br /><br /><br />இப்படி சுந்தரமூர்த்தி நாயனார் சொல்வதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? தம் முன்னோனான இராவணன் வழி நடக்கவே சுந்ரமூர்த்தி நாயனார் விரும்பியது என்னத்தை காட்டுகிறது?இன்னும் நல்லவனா கெட்டவனா என்று நாம் ஏன் எமது மண்டையை உடைப்பான்? இவ்வளவு பெருமை எல்லாம் பெற்ற இராவணனை இந்த நூற்றாண்டு புலவன் எப்படி பெருமை படுத்துகிறான் பாருங்கள் .<br /><br />“தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்<br />சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா!<br />அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன்<br />ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்<br />குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்<br />குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்<br />என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!<br />இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்"கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com