tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6199726493738413032..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: தமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04"B} superstitious beliefs of tamilsAdminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-23500325014015548882013-10-14T17:20:40.154-04:002013-10-14T17:20:40.154-04:00நீங்கள் கூறியது மாதிரி தமிழ் சமுதாயம் தாய் வழி சமு...நீங்கள் கூறியது மாதிரி தமிழ் சமுதாயம் தாய் வழி சமுதாயத்தில் இருந்து தந்தை வழி சமுதாயத்திற்கு மாறிக்கொண்டு இருந்த காலம்/மாறிய காலம் சங்க காலம் என நினைக்கிறேன்.உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வம் கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள்.காலப்போக்கில் இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம் என நினைக்கிறேன்.குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், விலங்குகளைப்போல பெண்களே தம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்கி வளர்த்தார்கள்.உதாரணமாக கொசுவை[mosquitoes] எடுத்தால், ஆண் அனோஃபிலீஸ்[Anopheles] கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடிக்கும். மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள்.அதனால் தான் கொற்றவை வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் ஆதி தமிழர் மத்தியில் வாழ்ந்தாள் என நினைக்கிறேன்.ஆகவே அவள் நாணி குகைக்குள்லோ/குடிசைக்குள்லோ இருந்திருக்க வாய்ப்பில்லை,என்னினும் அந்த நிலை பல காரணங்களால் மாறிவிட்டது. கிழே தரப்பட்ட சங்க கால பாடல் அந்த ஒரு சங்க பெண்ணின் நிலையை தெளிவாக அழகாக படம் பிடித்து காட்டுகிறது.வாசித்து சுவைக்கவும். <br /> <br />"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்<br />..............................................................<br />வெயிலென முனியேன்; பனியென மடியேன்;<br />கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை<br />நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்<br />மெல்லியல் குறுமகள் உள்ளிச்<br />செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே"<br />[புறநானூறு, 196]<br /><br />தம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும், <br />............................................................<br />வெளியே மழை கொட்டும்போது அம்மழை வீட்டிலுள்ளும் கொட்டுமாம்;வெயிலையோ,பனியையோ அது தடுக்காதாம் ;<br />காற்றை மட்டிலும் இலேசாக அடைக்குமாம்; கல்லில் ஆன அவ்வீட்டில் கல்லைப்போல் இறுக்கமாய் இருப்பது வறுமை மட்டும்தானாம் !!!அப்படியான என் வீட்டிற்கு செல்கிறேன்.அங்கே, என் இல்லக்கிழத்தி இறுகியவள் அல்லள்.மெல்லிய சாயல் உள்ளவள். நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய என் மனைவியை நாடிச் செல்கிறேன்.உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!" என்கிறது. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-69643135513723223472013-10-12T16:53:46.910-04:002013-10-12T16:53:46.910-04:00பயனுள்ள விடயங்கள் பயனுள்ள விடயங்கள் அருண்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-83582904494771015412013-10-12T16:50:17.752-04:002013-10-12T16:50:17.752-04:00அந்த காலத்தில் நாணமுடன் உள் வசித்த பெண்கள்...........அந்த காலத்தில் நாணமுடன் உள் வசித்த பெண்கள்....................<br />இது ஒரு இடைக்காலத்தில் வந்த வழக்கம் என எண்ணுகிறேன்manu venthannoreply@blogger.com