tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6666595547774248624..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-12501679645176150632012-09-19T20:12:01.297-04:002012-09-19T20:12:01.297-04:00
ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை...<br />ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?<br /><br />...கொன்னுட்டிங்க!பரந்தாமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-66375983056571537172012-09-19T04:51:05.039-04:002012-09-19T04:51:05.039-04:00""எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப...""எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." "-குறள் 423<br /><br />இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "தும்மலை"ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் : <br /><br />"நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்<br />சினைப்பது போன்று கெடும்"- குறள் 1203<br /><br />தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?. <br /><br />விக்கலும் அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே.ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது.<br /><br />"சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது"ம் அப்படியே .அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி,கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும்.இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே.ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான். <br /><br />"மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்நம்பிக்கையாக இருந்திருக்கிறது." <br /><br />பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.<br />சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,<br />அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில்<br />காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும்<br />என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை<br />இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில்<br />புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.<br />பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை<br />நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த<br />வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி<br />மாறனாரும் (புறம் 296) தருகின்றனர்<br /><br />"வேப்பமர உச்சியில் நின்னு<br />பேயொண்ணு ஆடுதுன்னு<br />விளையாடப் போகும் போது<br />சொல்லி வைப்பாங்க - உன்<br />வீரத்தைக் கொழுந்திலேயே<br />கிள்ளி வைப்பாங்க<br />வேலையற்ற வீணர்களின்<br />மூளையற்ற வார்த்தைகளை<br />வேடிக்கையாகக் கூட<br />நம்பி விடாதே - நீ<br />வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து<br />வெம்பி விடாதே - நீ<br />வெம்பி விடாதே"<br /> <br />[பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்<br />படம்: அரசிளங்குமரி, 1957] <br /><br />"ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது"<br /><br /> என்பார்கள்.[ அமீனா என்பவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி. ]இது எனக்கு நெடு நாள் புரியவில்லை.பாவம் அப்பாவி பிராணி வீட்டினுள் நுழைந்தால் என்ன கேடு என்று நினைப்பேன்.பிறகுதான் அறிந்து கொண்டேன்.ஆமை என்று அப்பாவி உயிரினமான ஆமையைக்குறிப்பிடவில்லை என்று.<br /><br />ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?<br /><br />இவை எல்லாத்தையும் விட ,"பன்றியே" சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர் .எப்படி இருக்குது மூட நம்பிக்கை.இதோ அந்த சங்க கால பாடல்:<br /><br /> [புலவர் -உக்கிரப் பெருவழுதி]/( நற்றிணை - 98. (குறிஞ்சி)]:<br />எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்<br />செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி<br />ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி<br />நூழை நுழையும் பொழுதில் தாழாது<br />பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென<br />மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்<br />கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ......<br />[பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி<br />ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது<br />நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி<br />நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி<br />மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.]<br />[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com