[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
மனித மரபணு புலம்பெயர்வு பாதை[வழித்தடம்]
M168
ஆஃப்ரிக்கா
இனம்
|
50,000
வருடங்களு
க்கு முன்
|
நீடித்த வரட்சி காரணமாக ஹோமோ சேப்பியன்ஸ் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறல்[புலம்பெயர்தல்]
|
M130(M168-M130)
கடற்கரையோர அடையாளம்
காட்டி
|
50,000
வருடங்களு
க்கு முன்
|
அரேபியாவிற்குள் நுழைதல்,கடற்கரையோர மக்கள் கரையோரம் இடம் பெயர்தல்.அவர்கள் விரைவாக ஆஸ்திரேலியாவை அடைதல்.இதற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள்[ஆதிவாசிகள்] சான்று கூறுகின்றனர்.அந்தமான் பழங்குடிகள் இந்த இட பெயர்ச்சியின் எச்சமிச்சம்களே. இன்று இந்த அடையாளம் காட்டி ஆக இந்தியாவின் குடித்தொகையில் 5% மட்டுமே.அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே.
|
M89
மெசோபொட்
டாமியன் அடையாளம் காட்டி
|
45,000
வருடங்களு
க்கு முன்
|
M89
மக்கள் மெசோபொட்டாமியாவில் ,இரு நதிகள் உள்ள நிலத்தில்,போதுமான தண்ணீர் வசதியுடனும் உண்பதற்கு போதுமான காட்டு கால்நடைகளுடனும் வேட்டையாடி சீவிக்கும் ஒரு நிலைகொண்ட வாழ்வு அமைத்து மகிழ்ந்து இருந்தார்கள்
|
M9
துரேனிய இனக் குழு
|
40,000 வருட
ங்களுக்கு
முன்
|
M9
மக்கள் மெசோபொட்டாமியாவில் இருந்து வெளி வந்து துரேனிய ஆற்றுப்பள்ளத் தாக்கு பகுதியில் இந்த கால கட்டத்தில் குடியேறினார்கள்
|
M20
(M168-M9-M20)
தொடக்க நாட்டுப்புற வாழ்க்கை வாழும்[கால் நடை வளர்ப்பில் வாழும்] திராவிட இனக்குழு
|
30,000
வருடங்களு
க்கு முன்
|
திராவிடர்கள் இந்தியாவிற்குள் நுழைதல்.தொடக்க திராவிடர்கள் வேடுவர்களாகவும் கால்நடை வளர்ப்பவர்களாகவும் இருந்தனர்.தென் இந்தியரில் 50% வீதத்தினர் மாறுதலடைந்து புது உயிரினமாக தோன்றியவர்களே.இந்த மாற்றம்[மாறுபாடு] M9 மக்கள் தொகையில் இருந்து தோன்றியது
|
M17
(M168-M9-M173-M17)
இந்தோ ஐரோப்பியன்
இனக்குழு
|
10,000
வருடங்க
ளுக்கு முன்
|
தென் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் தோன்றிய இந்தோ ஐரோப்பியன் இனக்குழு துருக்கியின் அனடோலியன் மக்களுடன்[Anatolians ]
பண்பாட்டு கலப்பின் மூலமே விவசாயத்தை அறிந்தது.இவர்கள் குதிரையை வீட்டுச் சூழலுக்கு பழக்கி எடுத்தார்கள்.ஆரிய கொள்கையின் கதாநாயகர்கள் இவர்களே.
|
அதாவது இந்தியாவின் குடியேறிய முதலாவது மனிதர்கள் மரபணுக் குறியீடு M130 உடையவர்கள் என
நம்பப்படுகிறது.அவர்கள் கரையோரமாக ஆஃப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார்கள். அவர்களின் மரபினர்[வழித்தோன்றல்] இன்னும் அந்தமான் தீவுகளிலும் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள்.உதாரணமாக இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், இலங்கையில் வாழும் வேடர்களும் ஆவர்.அதே போல M20 உடையவர்களும் திராவிட மொழியும் இன்னும் இந்தியாவில் உள்ளது.இவர்கள் 30,000 வருடங்களுக்கு முன் வந்தவர்கள்.அது போல ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் M17 உடையவர்களும் அங்கு இருக்கிறார்கள்.இவர்கள் 4000 வருடங்கள் அளவில் அல்லது அதற்கு பின் வந்தவர்கள்.
பூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி
நிகழ்ச்சியான[நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின்/National Geographic channel] "மனித இனத்தின் பயணம்" என்ற தொடரில்,அதன் தயாரிப்பாளர் "ஸ்பென்சர் வேல்ஸ்"[Spencer Wells],ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே, முற்காலத்திய மனிதனின் முதலாவது இடப் பெயர்வு 60000 வருடங்களுக்கு முன்பு கிழக்கு கரையோரமாக,குறிப்பாக தமிழ் நாடு வழியாக நடை பெற்றது என்கிறது.உள்ளூர் மக்களின் மரபணு இதற்கு சாட்சியாக உள்ளது. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள்,50000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட "எம்130 டி.என்.ஏ" யையும் 30000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட "எம்20 டி.என்.ஏ" யையும் கள்ளர் சமுதாயம் உட்பட,இன்றைய தமிழ் நாட்டின் உள்ளூர் மக்களிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதை ஒத்த மரபணு ஆஃப்ரிக்கா மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் [Australian aborigines] பாதிக்கு மேற்பட் டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் "எம்130 டி.என்.ஏ" இருப்பதாக டாக்டர்.பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது என ஊகிக்கவும் இடம் உண்டு.
அத்தனை விசயங்கள்,இன்னும் நாம் அறியாமல் இருக்கிறோம்.அறிவஊடடும் உங்கள் பக்கம் பயனுடையது.
ReplyDelete