இந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [மெசெப்பொத்தோமியாவை] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச்.ஆர். ஹால் முன் வைத்த கொள்கையை மேலும் வலுவூட்டுவது போல ஒரு கண்டுபிடிப்பு இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கரில்[Mehrgarh] 2001 ம் ஆண்டில் நிகழ்ந்தது.அதாவது,இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக் காலக் குடியேற்றப் பகுதியான மெஹெர்கர் நகரில் 2001 ஆண்டு, ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia]
தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்த போது ,இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்திய போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது .
7000 BC யில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity ]பற்களை கூர்மையான ஒரு வித கற்களை கொண்டு,வில்லினால் சுற்றி [bow drills] துளையிட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது .ஆகவே மேலே கூறிய கண்டு பிடிப்பு சிந்து சமவெளி மக்கள்,சுமேரியர் மேசொபோடமியாவில் குடியேற முன்பே,பல் பராமரிப்பு பற்றிய அறிவு கொண்டிருந்தார்கள் என சாட்சி கூறுகிறது.

அண்மையில் நடந்த ஹரப்பா தொல்பொருள் இயல் பற்றிய சர்வதேச மகாநாடு ஒரு எதிர்பாராத ஒரு அறிவிப்பு செய்தது.இந்தியாவை சேர்ந்த இரு தொல்பொருளியல் ஆய்வாளர்கள் BR மணி,KN டிக்ஷிட்[BR Mani and KN Dikshit] ஆகியோர் முன்பு கருதப்பட்ட ஹரப்பா பண்பாட்டு காலத்தை விட அது இன்னும் 2000 ஆண்டு பழமை வாய்ந்தது என்கின்றனர். இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள சண்டிகர்[Chandigarh] நகரத்தில் நடை பெற்ற மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு மூலம் இது வரை ஏற்றுகொள்ளப்பட்ட கி மு 3750 ஆண்டு அளவில் குடியேற்றம் ஆரம்பமாகியது என்ற கொள்கைக்கு சவால் விடுகிறது.இந்த ஆரம்ப கண்டுபிடிப்பு மேலும் உறுதிபடுத்தப்பட்டால் , ஹரப்பா நாகரிகம் சுமேரிய நாகரிகத்துடன் ஒரே காலத்துக்குரிய நாகரிகம் ஆகிறது என்பதை கவனிக்க.
மேலும் கி பி 1920ஆம் ஆண்டு சார்.ஜான் மார்ஷல் என்பவரால் மொஹெஞ்சதரோ (Mohenjo Dora) நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டது என்பதையும், அது சிந்து நதியின் அருகாமையில் இருந்ததால் அதற்கு அவர் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley
Civilization) என்று பெயரிட்டார் என்பதையும். பின்பு தொடர்ச்சியாக ஹரப்பா (Harappa) நகரம் , லோதல்(Lothal) நகரம்,மெஹெர்கர்[Mehrgarh, Balochistan District, Pakistan] நகரம்,என்று பல பகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது என்பதையும். இந்த நாகரிகம் அப்பொழுது 4000-3500 ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர்/திராவிடர் நாகரிகமாகும் என கருதப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்க.
இனி சுமேரிய நூலில் காணப்பட்ட பல் புழு[“tooth worm”] பற்றிய புராணக் கதையை பார்ப்போம்.
"சொர்க்கத்தை அனு[Anu:வான் கடவுள்] படைத்த பின்பு,
சொர்க்கம் பூமியை படைத்தது,
பூமி ஆற்றை படைத்தது,
ஆறு சதுப்பு நிலத்தை படைத்தது,
சதுப்பு நிலம் புழுவை படைத்தது,
புழு அழுதுகொண்டு ஷாமாஷ்[Shamash:சூரிய கடவுள்]] முன் சென்றது,
அதன் கண்ணீர் ஈஅ [Ea:கடல் கடவுள்] முன்னால் ஒழுகிக்கொண்டு இருந்தது
என்னத்தை எனக்கு உணவாய் தருவாய்?
என்னத்தை எனக்கு சப்புவதற்கு[உறிஞ்சுவதற்கு] தருவாய்?
நான் உனக்கு பழுத்த அத்திப்பழமும் சர்க்கரை பாதாமியும்[fig and the apricot] தருவேன்
அத்திப்பழமும் சர்க்கரை பாதாமியும் என்னத்திற்கு நல்லது?
என்னை தூக்கி,பல்லுக்கும் முரசுக்கும்[teeth and the gums] இடையில் எனக்கு இடம் ஒதுக்கு!
நான் பல்லின் இரத்தத்தை உறிஞ்சுவேன்
அதன் வேரை முரசில் கொறிப்பேன்
ஒ புழுவே,நீ இப்படி சொன்னதால்,
உன்னை "ஈஅ" பலமாக தனது வலிமைமிக்க கையால் அடிக்கட்டும்!"
தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:14 அடுத்த வாரம் தொடரும்
0 comments:
Post a Comment