[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) என்ற கோயிலின் மூல புனித இடத்தின் மேல்கூரையில் பல்லியின் சிற்பவேலை காணப்படுகிறது.பல்லி தமிழர்களின் நாளாந்த வாழ்க்கை உடன் இணைந்த ஒன்று.இது வரும் காலத்தைப் பற்றிய சகுனம் அறியும் முக்கிய சாதனம் ஆகும்.பல்லி தலையில் விழுந்தால் கலகம் (சண்டை) என்பது போன்று, உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்னென்ன பலன் என சொல்வதே, பல்லி சொல்லும் பலன் ஆகும்.பல்லிசத்தமிடுவதை “கௌளி” என்பர். பல்லி “கௌளி” சொன்னால்
தரையில் மூன்று முறை விரல்களால் தட்டுவது, இன்றும் பலரிடம் உள்ள பழக்கம். இதனை மூத்த குடியாகிய தமிழர்கள் நம்பிவந்தனர் 2700-2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்களிலும் இந்த நிமித்தம் காணலாம்.
![]() |
[கோபெக்லி தேபே/Göbekli Tepe] |
"மையல் கொண்ட மதனழி யிருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி
நல்ல கூறென நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே".(அகநானூறு289.)
மயக்கம் கொண்டமையின் வலியற்ற இருக்கையளாகி; பிளந்த வாயையுடைய பல்லி சொல்லும்போதெல்லாம் வணங்கினாள் நல்லது சொல் என்று நடுங்கி வேண்டி, மனம் நடுங்கி,பொலிவற்ற மாலைக் காலத்தொடு மாறுபடுவளோ? என்கிறது
![]() |
göbeklitepe temple |
பல்லி பண்பாடு ஒரு தமிழ் ,வேத பண்பாடாகும். இது இந்தியாவில் 10000 வருடங்களுக்கு முன் ஆரம்பமாகி இருந்தால்,இது இந்த பல்லி பண்பாடு,இந்தியாவில் இருந்து சுமேரிய போய் இருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு. இல்லாவிட்டால் அது அங்கு இருந்து இந்தியா வந்திருக்கலாம்?ஏனென்றால் கோபெக்லி தேபே கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகள் பழமையானது.
சுமேரு மொழியை பழைய தமிழ் என்ற கண்டுபிடிப்புடன் இலக்கியம் சார்ந்த சுமேரு வாசகம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் நிலையில்,ஆகமத்தை அடிப்படையாக கொண்ட சமயம் 4000 வருடங்களுக்கு முன்பு,அங்கு முதிர்ச்சி அடைந்த சுமேரியாவில்,இன்றைய ஈராக்கில் இருந்தது தெரிய வருகிறது. இதுவும் கோயிலை மையமாக கொண்ட பண்பாடு ஆகும்.ஆகமம் என்னும் வடசொல் 'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்' என்னும் பொருளைத் தருவது. இதற்குத் "தொன்று தொட்டு வரும் அறிவு" என்றும் "இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்" என்றும் அறிஞர்கள் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது.ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம்[சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம்] ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு , கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும்.இவை பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன.இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை.ஆகவே ஆகம இந்து சமயம் ,அதாவது சைவ சமயம், நாகரிகத்தின் தொடக்கத்திலேயே இருந்தது என்பது இதனால் புலன் படுகிறது.
பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்ல தோர் வளர்ந்த நிலையை சுமேரிய இலக்கியமான ஈனன்னை சீர்பியத்தில் காணக்கூடியதாக இருந்ததை முன்பு நாம் சுட்டிக்காட்டினோம்.
![]() |
[சூல்கி மன்னன்/king Shulgi] |
இனி சூல்கி எனும் ஓர் அரசனின் Hymn B எனும் அகவலிலிருந்து சில வரிகளை அதாவது சூல்கியின் முதரீபியத்தில் வரும் வரிகள் எழுபத்தி மூன்றை,எழுபத்தி நான்கை[73-74] முனைவர் கி. லோகநாதன் துணையுடன் பார்ப்போம்.இங்கு சிவா குறிக்கப்பட்டிருப்பது மட்டும் அல்ல,தமிழ் பண்பாடான உண்மையில் மட்டும் வாழு என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.சூல்கி, ஊர் நம்மு அரசனின் மகன் ஆவான் .இவன் 48 வருடம் கி மு 2029 –1982 ஆண்டுவரை ஊர் நகரத்தை ஆண்ட மன்னன்.
வரலாற்று சிறப்புமிக்க அந்த இரண்டு வரிகள் கிழே தரப்பட்டுள்ளன.
73.
sipa ildum-ma-bi su-bi hu-mu-dug
(and)
for the shepherds and pack dogs it was a pleasant (time)
Tamil:
Sipa ezuttummabi suubi thuukkummu
சிப எழு(ந்)தும்ம சூ-பி தூக்கும்மு
74.
u-me-da u-ul-li-a-se
(though)
always and always
uNmaiyodu
uu uuziyasee
உண்மையொடு ஊ ஊழியசே
இங்கு நிச்சயமாக முதல் வரியின் மொழி பெயர்ப்பு தவறானது, இரண்டாவது வரி ஓரளவுப் பொருந்துவது: "உண்மையோடு ஊழி காலம் வரை" என்பதாகக் கொள்ளலாம் என வாதாடுகிறார் முனைவர் கி. லோகநாதன். இங்கு நிச்சயமாக தமிழ் 'ஊழி' கருத்து இருக்கின்றது. அண்டசராசரம் அனைத்தும் ஊழித்தீயில் அழிந்து முற்றிலும் இல்லாமற் போவதே இங்கு குறிக்கப்படும் காலக் குறிப்பு ஆகும். இது மிக ஆழமான பிரபஞ்சக் கோட்பாட்டினை சூல்கி கொண்டிருந்தான் என்பதைக் காட்டுகின்றது. சைவ சமயத்தில் இதைத் தான் சாதாரண பிரளயங்களுக்கு வேறாக 'மகாப்பிரளயம்" என்பார்கள். ":உண்மையொடு" என்பதை " மெய்யாக" , "அகச் சுத்தத்தோடு மெய் பக்தியின்" என்றெல்லாம் கூறலாம். அடுத்து "su-bi hu-mu-dug" "சூர்பி தூக்கும்மு" என்பது. இங்கு "கரம்குவித்து கும்பிடல்” (su=sur>சூர்> கரம்) சுட்டப்படுகின்றது என்பது தெளிவு. இன்று இந்து மக்களிடையே விளங்கும் பழக்கம் அன்றும் மக்களிடையேயும் விளங்கிற்று என்பது தெளிவாகின்றது. இப்படி அவன் கையெடுத்து ஊழிகாலம் வரை கும்பிட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறுவது யாரை? என்று கேள்வி எழ "sipa" என்னும் சிவனைத்தான் என்று தெளிவாகின்றது. ஆனால் யார் இந்த "sipa"? இங்குதான் "sipa ildumm-ma" என்பதை இன்னும் ஆழமாகக் கருத வேண்டும். சுமேருவில் 'il' என்பது ' இயல்' என்றோ 'எழு' என்றோ ஆகும். எவ்வாறு கொண்டாலும் "இயல்தும்ம" அல்லது "எழு(ந்)த்தும்ம" என்றாகிறது. இயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்று அவற்றின் சத்தியாக, அந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பது இந்த சிவன் ஆகின்றான். பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் "நாத தத்துவம் " அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறு விளம்பப்படுகின்றது. எனவே இதனை "நாதசிவன்" என்று பிரித்தறிவோம்.[சுமேரு மொழி தமிழா? அல்லையா? முதல் தொகுதி முனைவர் கி. லோகநாதன் 13-3-13]
அதாவது எல்லா உலகமும் முடியும் வரை,நான் உண்மையில் வாழ,நான் சிவாவை நோக்கி எனது கையை உயர்த்தி வணங்குகிறேன் என்கிறது இந்த வாசகம் என்கிறார் முனைவர் கி. லோகநாதன்.
இவ்வாறாக,உண்மையில் வாழ்வதற்கும் சிவா வழிபாட்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதை காண்கிறோம். இதைத்தான் திருஞானசம்பந்தர் கூட தனது தேவாரத்தில் கிழ்கண்டவாறு நினைவு கூறுகிறார்.
"அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே".
[திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு/முன்றாம் திருமுறை/054/11]
சிவபெருமான், முன்னர் உரைத்த அத்துணைப் புகழுக்கும் உரியவராகியவர். அதுவும் அன்றி, அவர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஆக்கித் தமிழ் வளர்த்து அருளிச் செய்தவர். ஈசனே முழு முதற் பொருள் எனத் தெளிவு பெறாதவர்களுக்குத் தெளிவு பெற, இந்த அரிய ஓலையானது, வைகை ஆற்றில் எதிர் நோக்கிச் செல்லும் மாண்பினை நோக்கில், இடப வாகனத்தில் மீது இவர்ந்து மேவும் பெருமானே, இறைவன் எனத் தக்கவர், என்பதுதானே மெய்ம்மை !
தமிழ் மொழியும் அதன் பண்பாடும் இன்றுவரை தொடர்ந்து வாழ்கிறது என்றால் அதற்கு காரணம் சைவத்தை தனது அடித்தளமாக அமைத்தது தான்.சைவம் ஒரு இயற்கையான தத்துவ ஆகமம் ஆகும்.அங்கு மூல கோட்பாடாக 'உண்மையை தேடல்' போற்றிவைத்துப் பேணப்படுகிறது. இதன் மூலம் அது உண்மையை கண்ட தனிப்பட்டவர்களை/மெய் கண்டான்களை தோற்றுவிக்கிறது.பொதுவாக ஆகமம் மெய்யை விளக்கும் மெய் நூல்களாம். இவை மெய்யாகிய இறையிடம் இருந்து வந்தவை. மெய்யாகிய இறையின் மெய் வாக்குகள். இவை மெய்யிடம் இருந்து வந்து, மெய்யை விளக்கும் மெய் நூல்களாக இருப்பதால் இவற்றை மெய் என்றே கொள்வர்.
எமக்கு எல்லோருக்கும் தெரிந்தவாறு,நந்தி சிவனின் முதன்மை வாகனமாக உள்ளது.அது மட்டும் அல்ல சிவாவின் வேலையாளராகவும் அல்லது உடன் செல்பவராகவும் உள்ளது.சுமேரிய இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் கில்கமெஷும் என்கிடுவும் வணக்கத்திற்கு உரிய பரலோக காளையை கொல்வதை விவரமாக விளக்குகிறது.அது மட்டும் அல்ல சுமேரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த சிந்து சம வெளி நாகரிகத்திலும் நந்தியை,காளையை காணலாம்.
மேலே நாம் சுட்டிக்காட்டியவாறு,சுமேரியனின் பண்பாடு தமிழர்/இந்தியருடன் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது.இவை வெறும் எதிர்பாராத ஒருங்கொத்த நிகழ்வு என எவரும் தள்ளுபடி செய்ய முடியாது.கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ரா என்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக் கண்டுபிடித்தனர்.உகாரித்தின் பெருந்தெய்வம் 'இல்'. இல் என்றால் “சர்வ வல்லமையுள்ள ஆண்டவன்” என்று பொருள். “மனிதர்களின் தந்தை”, “படைத்தவன்” என்று பல பொருளும் 'இல்' லைக் குறிக்கும். அங்கு மண்ணுக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட கி மு 1300 ஆண்டை சேர்ந்த களிமண் வில்லையில் [முத்திரையில்/ஏடுகளில்] மேலும் ஒரு அரசனைப்பற்றிய ஆர்வமிக்க [சுவாரசியமான] செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.இவனது பெயர் கேரத் [Keret].இவன் தனது சகோதரர்களையும் தனது எழு மனைவிமார்களையும் இழந்து வாரிசு ஒன்றும் இல்லாமல் இருந்தான்.ஒரு மகனை வேண்டி மன்றாடுகையில்,கேரத்தின் கனவில் ‘முதன்மை கடவுள் இல்’ வந்து[தோன்றி] பால் தெய்வத்திற்கு பலியிட்டு, அதன் பின் ‘உடும்’[Udumu] என்ற ஊருக்கு தனது படையுடன் சென்று,அந்த நகர அரசனிடம் இளவரசியும் பபிலின் புத்திரியுமான ஹுரையாவை[Hurriya] தனது மனைவியாக அடைய கேட்குமாறு அறிவுறுத்தியது.அப்படி செல்லும் வேளையில் அவன் அவளது நிறையின் இரண்டு மடங்கை வெள்ளியிலும் மூன்று மடங்கை தங்கத்திலும் டயர்[Tyre] நகரத்தின் தாய் தெய்வம் அதிரத்திற்கு [ATHIRAT ]
தனது பயணம் வெற்றி பெறுமாயின் கொடுப்பேன் என சத்தியம் செய்தான்.ஆனால் அவளை மனைவியாக அடைந்த பொழுது,தனது வாக்கை அவன் நிறைவேற்றவில்லை.அதனால் தாய் தெய்வம் அவனை கடும் நோய் கொடுத்து தாக்கியது என செய்தி பதியப்பட்டுள்ளது.மேலும் உகாரித் இலக்கியத்தில் பால்[Baa] என்றால் நிஜமான தெய்வம்.லிங்க வழிபாடு போல ஒரு உயிர் பிறப்பிக்கும் சக்தி கொண்ட தெய்வம்.இந்தக் கருத்து W.ராபர்ட்சன் ஸ்மித் எழுதியிருக்கும் Religion of the Ancient Semites நூலின் மூலம் மேலும் உறுதியாகிறது. பால் கடவுள் பற்றி, “இந்துக்களின் லிங்க வடிவத்தைப் போன்றே, கூம்பு வடிவமான, செங்குத்தாக நிற்கும் உருண்டைக் கற்கள் அந்த தெய்வத்தின் சின்னமாக இருந்தன” என்றும் “இனப்பெருக்கத்திற்கான ஆண் தத்துவத்தைக் குறித்தன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
![]() |
[துலாபாரம்/Tulabharam] |
இந்த துலாபாரத்திற்கு ஒத்த குறிப்பு ஒன்று சங்க பாடல்,குறுந்தொகை 292 இலும் காணப்படுகிறது.துலாபாரம் என்பது இரு சொற்களின் கூட்டு ஆகும்.அதாவது துலா+பாரம் ஆகும் இது காணிக்கை வழங்கும்பொருட்டு ஒருவர் ஒரு தட்டில் மதிப்புடைய பொருட்களையும் ஒரு தட்டில் தாமுமாக இருந்து நிறுக்கும் ஒரு சடங்கு ஆகும்.கேரளத்தில் உள்ள பூழி நாட்டின்[Poozi Nadu] ஒரு பகுதியை நன்னன் என்ற அரசன் ஆண்டுவந்தான். நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்று வெள்ளம் ஆடித்துக்கொண்டுவந்தது.அதை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த ஒரு கோசர்குடி சிறுமி தன்னுடன் எடுத்து சென்றுவிட்டாள். மன்னனின் வேலையாட்கள் இந்த "களவை" மன்னனுக்கு தெரிவித்தார்கள். உடனடியாக நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர்.அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது தந்தை 81 யானைகளை தண்டமாக கொடுக்க முன்வந்தார். நன்னன் அதற்கும் அசையவில்லை. இறுதியாக அவளது எடைக்கு எடை பொன்னு தருவதாக மன்றாடினான். ஆனால் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான்.இந்த கதையை பரணர் குறுந்தொகையில் அழகாக தருகிறார்.இதோ அந்த பாடல் கிழே தரப்படுகிறது.
"மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே."
சுமேரு இலக்கியத் தொகுப்பு கிறிஸ்துக்கு முன் 4000 தில் இருந்து கிறிஸ்துக்கு முன் 1000 ஆண்டு வரை,அதாவது 3000 ஆண்டு நீட்சி/கால அளவு உடையது.இதில் மரபு இலக்கிய[முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த] காலம் கி மு3000 தில் இருந்து கி மு2000 ஆண்டுகள் ஆகும்.இங்கு தான் கில்கமெஷ் காப்பியம்[கி மு 2000-1400 ],கேரத் காப்பியம்[கி மு போன்றவை படைக்கப்பட்டது.
பகுதி:22 அடுத்தவாரம் தொடரும்
0 comments:
Post a Comment