தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:25‏

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]
  
ஆற்றில் நீர் மட்டம் இயல்பாக[சாதாரணமாக] இருக்கும் போது தான்  மதகு கதவு திறமையாக இயங்குகிறது.அந்த தருணத்தில்  நீர் மட்டம் கதவிற்கு கீழ் வரும்போது.கால்வாயிற்கான  நீர் ஓட்டம் நின்றுவிடுகிறது.அப்படியான வேளையில் இந்த  சிக்கலை தீர்க்க பெயர்தெரியாத சுமேரியனோ அல்லது அதற்கு முதல் அங்கு வாழ்ந்த உபைடியனோ[ancient Ubaidian] ஒரு கருவிக்கான[பொறிக்கான] யோசனையை பெற்றிருக்க வேண்டும். இதை பின் அரேபிய மக்கள் "shaduf" /துலா என அழைத்தனர்.இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும்.இதன் ஒரு முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும்.அதன் மறு முனையில் பாரமான கல் அல்லது  ஒரு பாரம் கட்டப்படும்.இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும்.இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம், அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும்.இதன் அளவை பொறுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் இதை மேலும் கீழும் இயக்குவர்.நீர்
எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டு வருவர்.பின் நீரை கால்வாயில் விடுவர்.இந்த முறை ஆற்றில் வெள்ளம் இல்லாத நேரத்திலும் நீர்பாசனம் செய்ய உதவியது.அதுமட்டும் அல்ல உயரமான இடத்திற்கும் நீர்பாசனம் செய்யக்கூடியதாக இருந்தது.இதனால் அப்படியான உயரமான இடங்களிலும் விவசாயம் செய்யக்கூடியதாகவும்  இருந்தது.மேலும் இந்த துலாவால் ஒரு கால்வாயில் இருந்து மற்ற கால்வாயிற்கு அல்லது  வாய்காலிற்கு நீரை மாற்றி விடக்கூடியதாகவும்  இருந்தது.இந்த துலா முறை கி மு 1700 ஆண்டு அளவில் பொதுவாக பாவனையில் இருந்துள்ளது.இந்த பொறியை பபிலோனியாவில் கி மு 500 ஆண்டளவில் கண்ட கிரேக்க வரலாற்றாசிரியரான  ஹெராடோடஸ்[The Greek historian Herodotus] "மழை பெய்கிறது....சிறிய அளவாக" [“The rainfall … is slight,”]என குறிப்பிடுகிறார்.

பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மனிதன் தோண்டிய கிணறுகள் இன்னும் ஒரு நன்னீர் வழங்கும் முக்கிய இடமாக, குறிப்பாக வட  சமவெளியில் இருந்தது. அங்கு டைக்ரிஸ் நதியை கட்டுப்படுத்துவது கடினமாகவும் மண்  அடர்ந்தும் இருந்தது.தொடக்கத்தில் மாதிரியான கிணறுகள் நிலத்தில் ஒரு செங்குத்தான குழியாக இருந்தது.இங்கு ஒருவர் கயிறு ஒன்றில் வாளியை நீருக்குள் குழியின் அடியில் இறக்குவார். பின் அது நீரை எடுத்ததும் மேலே இழுப்பார்.இந்த செய்முறை கி மு 1500 ஆண்டளவில் கப்பியின் அறிமுகத்தால் எளிதாக்கப்பட்டது.

மேலும் இன்றைய  பாகிஸ்தான்,வட இந்தியாவில் அமைந்த பண்டைய நாகரிகமான சிந்து சம வெளியும் அதிநவீன .நீர்பாசனத்தையும் சேமிப்பு முறையையும் மேம்படுத்தியது.உதாரணமாக கி மு 3000 ஆண்டளவில் கிர்னாரில்[Girnar] நீர்த்தேக்கங்களையும் கி மு 2600 ஆண்டளவில் கால்வாய் நீர்பாசனத்தையும் கொண்டிருந்தது.

மேலும் "Month for raising the Water Wheels" என்ற சுமேரியன் குறிப்பில் இருந்து அது ஒரு தொடக்க கால நீராலைச் சக்கரமாக[Water Wheels] இருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு.என்றாலும்  வேறு ஒரு சான்றும் நீராலைச் சக்கரம் பண்டைய மெசொப்பொத்தேமியாவில் இருந்ததை உறுதிப்படுத்தவில்லை.அதே போல சிந்து சம வெளி நகரங்களான  மொகெஞ்சதாரோ.ஹரப்பா போன்ற இடங்களில் செய்த அகழ்வு ஆராச்சியின் போது மண்ணுக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பழமைச் சின்னங்கள் பண்டைய இந்தியாவில் நீர் தூக்கும் சாதனங்களுக்கு சான்றாக உள்ளன.மொகெஞ்சதாரோ மட்பாண்டங்களை மேலும் ஆய்வு செய்த சார்  ஜான்  மார்ஷல்[Sir John Marshall], நீராலைச் சக்கரத்திற்கு இவை பாவித்திருக்கலாம் என தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.பிரமாண வேதத்திலும் கிணறு,கால்வாய்,அணை குறிக்கப்பட்டுள்ளன. ரிக் வேதம் "KULYA" என்ற சொல்லை குறிக்கிறது.இதன் நேரடி கருத்து மனிதனால் செய்யப்பட்ட ஆறு-அதாவது கால்வாய்.அதேபோல "AVAR"  என்ற சொல்லையும் அடிக்கடி குறிக்கிறது.இதன் கருத்து கிணறு ஆகும்.மேலும் அதே வேதத்தில்  ஒரு ஆழமான,நேர்த்தியான கிணற்றில் இருந்து ஒரு பொறி அமைவு மூலம் நீர் எடுப்பதையும் எடுத்து உரைக்கிறது.வேதங்கள் சிந்து சம வெளி மக்களை வென்ற பின் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் எமக்கு எடுத்து காட்டுவது என்னவென்றால் நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்தே நீர்பாசனம் நன்றாக அடையாளங் கண்டுகொள்ளப்பட்டுள்ளது என்பதே.இந்த  மெசொப்பொத்தேமியா சுமேரியர் மற்றும் ,சிந்து சம வெளி மக்கள் தமிழர்களின் மூதாதையார் என கருதப்படுகிறது.கி மு 1700-1500 ஆண்டு அளவில் சிந்து சம வெளி நாகரிகம் .முற்றாக நிலைகுலைந்த பின்,அங்கு இருந்து தென் இந்தியா குடியேறிய பொழுது அந்த மக்கள் தங்களுடன் நீர்பாசனம் பற்றிய அறிவையும் அதன் முக்கியத்தையும் எடுத்து சென்று இருக்கலாம் என நாம் கருதலாம்.என்றாலும் சங்க இலக்கியம்  நீராலைச் சக்கரம் போன்ற சாதனங்களின் பாவனைகளின் ஆரம்ப  இடத்தைப் பற்றி தெளிவாக ஒன்றும் கூறவில்லை.எப்படி ஆயினும் நீரை தூக்கும் கருவிகள், அது போன்ற மற்றும் எளிமையான கருவிகளை தெளிவாக அகநானுறு,மதுரை காஞ்சி,சிலப்பதிகாரம், மணிமேகலை,பெரியபுராணம் போன்றவற்றில்  குறிப்பிட்டு உள்ளது.இதைத் தவிர தமிழ் கல் வெட்டுகளிலும் துலாவை பற்றியும் பனை ஓலை கூடை/வாளி பற்றியும் குறிக்கப்பட்டு உள்ளது

இளங்கோவடிகள் புகார்க்காண்டத்தில் பத்தாம்[10] காதையில் காவேரியை  பற்றிய சிறப்புகளை விவரமாக தரும் போது,அங்கு ஒருவகை நீரிறைக்குங் கருவிவகை,நீர் இறைக்கும் கூடை[இறை கூடை],தண்ணீர் இறைக்கும் ஏற்றமரம்[துலா] போன்ற முறையையும்  அல்லது கருவியையும் கூறுகிறார்.சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.இனி அந்த குறிப்பிட்ட பாடல் வரிகளை பார்ப்போம்:

"சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியேயல்லது

ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக"
[சிலப்பதிகாரம்/நாடுகாண் காதை 105-111]

அதாவது,"கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கரு முற்றிய  மேகங்களின் கூட்டம் மழை பொழிதலால்,அக் குட மலையில் தோன்றிய ஆற்று வெள்ளம்,கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன் வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக் குத்தியிடிக்கும் கடுகி[விரைவாக] வருதலையுடைய காவிரியின் புதுநீர் வாய்க்காலின் தலைப்பில்[தொடங்குமிடத்தில்] உள்ள கதவின்[வாய்த்தலைக்கண் கதவின்] மீதெழுந்து விழும் ஒலியல்லாது,பன்றிப்பத்தரும்[ ஒருவகை நீர் இறைக்கும் கூடையும்/இறை கூடையும்பூட்டைப்பொறியும் [நீரிறைக்குங் கருவிவகையும்] ஒலி மிகுந்த ஏற்றமும்[கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஏற்றமரமும்] நீர்மிகும் இறைகூடையுமென இவை ஒலித்தல் இல்லாத;" என்கிறது.

மேலும் பல  பருவக்காற்று குறைபாடுகள், சரிசமமற்ற மழை வீழ்ச்சி,சிலவேளை நீரின்  பற்றாக்குறையும் சிலவேளை நீரின்  மிகுதியும் போன்ற தடங்கல்கள் பண்டைய தமிழக தமிழர்களை முன்னைய மெசொப்பொத்தேமியா  குடியிருப்பாளர்கள் போலவே, செயற்கை நீர்த்தேக்கம் அல்லது கால்வாய் மூலம் நீர்பாசனம் செய்ய தூண்டியது.அது மட்டும் அல்ல மன்னன்  ஹம்முராபி[Babylonian King Hammurabi] போலவே வரலாற்று ரீதியாக,சங்க கால மன்னன் கரிகாலன் இதில் முன்னோடியாக உள்ளான்.இவன்  மண்மேடு எழுப்புதல்[அணை கட்டுதல்],குளம் வெட்ட காடுகளை அகற்றுதல்,கால்வாய் தோண்டுதல் போன்ற  திட்டங்களை செயலில் வகுத்தான்.கரிகாலனின் இந்த வழிகாட்டலை பின் எல்லா மன்னர்களும் பின்பற்றி நீர்த்தேக்கம் மூலம் நீரை சேமித்து நீர்பாசனத்திற்கு பாவித்தார்கள்
PART :26 WILL FOLLOW in septemper 

1 comments:

  1. அருமையான தகவல்கள் அடங்கிய கட்டுரையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete