திருக்குறள் தொடர்கிறது…
119. பசப்புறு
பருவரல்
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க் குரைக்கோ பிற.
மு.வ உரை:
விரும்பிய
காதலர்க்கு
அன்று
பிரிவை
உடன்பட்டேன்;
பிரிந்தபின்
பசலை
உற்ற
என்
தன்மையை
வேறு
யார்க்குச்
சென்று
சொல்வேன்?
சாலமன் பாப்பையா உரை:
என்னை
விரும்பிய
என்னவர்
பிரியச்
சம்மதித்த
நான்,
அவர்
பிரிவைத்
தாங்காமல்
பசலை
கொண்ட
என்
மேனியின்
இயல்பை
யாரிடம்
போய்ச்
சொல்வேன்?
கலைஞர் உரை:
என்னைப்
பிரிந்து
செல்வதற்கு
என்
காதலர்க்கு
ஒப்புதல்
அளித்துவிட்டேன்;
ஆனால்,
இப்போது
பிரிவுத்
துன்பத்தால்
என்னுடலில்
பசலை
படர்வதை,
யாரிடம்
போய்ச்
சொல்வேன்?
English Explanation:
I who (then) consented to the absence of my loving lord, to
whom can I (now) relate the fact of my having turned sallow.
குறள் 1182:
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு.
மு.வ உரை:
அந்தக்
காதலர்
உண்டாக்கினார்
என்னும்
பெருமிதத்தோடு
இந்தப்
பசலை
நிறம்
என்னுடைய
மேனிமேல்
ஏறி
ஊர்ந்து
பரவி
வருகிறது.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப்
பசலை
அவர்
எனக்குத்
தந்தது
என்னும்
பெருமையினால்
என்
மேனி
எங்கும்
படருகின்றன.
கலைஞர் உரை:
பிரிவு
காரணமாகக்
காதலர்
உண்டாக்கினார்
எனும்
பெருமிதம்
பொங்கிடப்
பசலை
நிறம்
என்
உடலில்
ஏறி
ஊர்ந்து
பரவுகின்றது!
English Explanation:
Sallowness, as if proud of having been caused by him, would
now ride on my person.
குறள் 1183:
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து.
மு.வ உரை:
காம
நோயையும்
பசலை
நிறத்தையும்
எனக்குக்
கைம்மாறாக
கொடுத்து
விட்டு,
என்
சாயலையும்
நாணத்தையும்
அவர்
என்னிடமிருந்து
பெற்றுக்
கொண்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
என்னைப்
பிரிகிறபோதே
உள்ளத்
துன்பத்தையும்
பசலையையும்
எனக்குக்
கொடுத்துவிட்டு
அவற்றுக்கு
ஈடாக
என்
அழகையும்
வெட்கத்தையம்
கொண்டு
போய்விட்டார்.
கலைஞர் உரை:
காதல்
நோயையும்,
பசலை
நிறத்தையும்
கைம்மாறாகக்
கொடுத்து
விட்டு
அவர்
என்
அழகையும்,
நாணத்தையும்
எடுத்துக்
கொண்டு
பிரிந்து
சென்று
விட்டார்.
English Explanation:
He has taken (away) my beauty and
modesty, and given me instead disease and sallowness.
குறள் 1184:
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
மு.வ உரை:
யான்
அவருடைய
நல்லியல்புகளை
நினைக்கின்றேன்;
யான்
உரைப்பதும்
அவற்றையே;
அவ்வாறிருந்தும்
பசலை
வந்தது
வஞ்சனையோ?
வேறு
வகையோ?
சாலமன் பாப்பையா உரை:
நான்
நினைப்பதெல்லாம்
அவரைத்தான்.
சொல்வது
எல்லாம்
அவர்
குணங்களைத்தாம்;
இருந்தும்
இந்தப்
பசலை
வந்துவிட்டதே;
இது
வஞ்சகம்
அல்லவா?
கலைஞர் உரை:
யான்
நினைப்பதும்,
உரைப்பதும்
அவரது
நேர்மைத்
திறன்
பற்றியதாகவே
இருக்கும்போது,
என்னையறியாமலோ
வேறு
வழியிலோ
இப்பசலை
நிறம்
வந்தது
எப்படி?
English Explanation:
I think (of him); and what I speak about is but his
excellence; still is there sallowness; and this is deceitful.
குறள் 1185:
உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்மேனி பசப்பூர் வது.
மு.வ உரை:
அதோ
பார்!
எம்முடைய
காதலர்
பிரிந்து
செல்கின்றார்;
இதோ
பார்!
என்னுடைய
மேனியில்
பசலை
நிறம்
வந்து
படர்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பும்கூட,
அந்தப்
பக்கம்
என்
அன்பர்
போயிருப்பார்;
இந்தப்
பக்கம்
என்
மேனி
பசலை
கொண்டு
விடும்.
முன்பே
அப்படி
என்றால்
இப்போது
எப்படி
இருக்கும்?
கலைஞர் உரை:
என்னைப்
பிரிந்து
காதலர்
சிறிது
தொலைவுகூடச்
செல்லவில்லை;
அதற்குள்ளாக
என்
மேனியில்
படர்ந்து
விட்டதே
பசலை
நிறம்.
English Explanation:
Just as my lover departed then, did
not sallowness spread here on my person?
குறள் 1186:
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
மு.வ உரை:
விளக்கினுடைய
மறைவைப்
பார்த்துக்
காத்திருக்கின்ற
இருளைப்
போலவே,
தலைவனுடைய
தழுவுதலின்
சோர்வைப்
பார்த்துக்
காத்திருக்கினறது.
சாலமன் பாப்பையா உரை:
விளக்கு
மெலிவதைப்
பார்த்து
நெருங்கும்
இருட்டைப்
போல
என்னவரின்
தழுவல்
நெகிழ்வதைப்
பார்த்துக்
காத்திருந்த
பசலை
வரும்.
கலைஞர் உரை:
விளக்கின்
ஒளிகுறையும்
சமயம்
பார்த்துப்
பரவிடும்
இருளைப்போல,
இறுகத்
தழுவிய
காதலன்பிடி,
சற்றுத்
தளரும்போது
காதலியின்
உடலில்
பசலைநிறம்
படர்ந்து
விடுகிறது.
English Explanation:
Just as darkness waits for the
failing light; so does sallowness wait for the laxity of my husband's
intercourse.
குறள் 1187:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
மு.வ உரை:
தலைவனைத்
தழுவிக்
கிடந்தேன்;
பக்கத்தே
சிறிது
அகன்றேன்;
அவ்வளவிலேயே
பசலை
நிறம்
அள்ளிக்
கொள்வதுபோல்
வந்து
பரவி
விட்டதே!
சாலமன் பாப்பையா உரை:
முன்னொரு
சமயம்
நான்
அவரைத்
தழுவிக்
கிடந்தேன்;
கொஞ்சம்
விலகினேன்;
அவ்வளவுதான்;
இந்தப்
பசலை
என்னை
அப்படியே
அள்ளிக்
கொள்வது
போல்
வந்துவிட்டது.
கலைஞர் உரை:
தழுவிக்
கிடந்தேன்;
சற்றுத்
தள்ளிப்
படுத்தேன்;
அவ்வளவுதான்;
என்னை
அள்ளிக்
கொண்டு
விட்டதே
பசலை
நிறம்!
English Explanation:
I who was in close embrace just turned aside and the moment
I did so, sallowness came on me like something to be seized on.
குறள் 1188:
பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்.
மு.வ உரை:
இவள்
பிரிவால்
வருத்திப்
பசலை
நிறம்
அடைந்தாள்
என்ற
பழி
சொல்வதே
அல்லாமல்,
இவளைக்
காதலர்
விட்டுப்
பிரிந்தார்
என்று
சொல்பவர்
இல்லையே!
சாலமன் பாப்பையா உரை:
இங்கோ
இவள்
பசலை
உற்றாள்
என்று
சொல்கிறார்களே
தவிர,
இந்தப்
பெண்ணை
விட்டுவிட்டு
அவர்
போய்விட்டாரே
என்று
சொல்பவர்
ஒருவரும்
இல்லை.
கலைஞர் உரை:
இவள்
உடலில்
பசலை
நிறம்
படர்ந்தது
எனப்
பழித்துக்
கூறுகிறார்களே
அல்லாமல்,
இதற்குக்
காரணம்,
காதலன்
பிரிந்து
சென்றிருப்பது
தான்
என்று
சொல்பவர்
இல்லையே.
English Explanation:
Besides those who say "she has
turned sallow" there are none who say "he has forsaken her".
குறள் 1189:
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
மு.வ உரை:
பிரிவுக்கு
உடன்படச்
செய்த
காதலர்
நல்ல
நிலையுடையவர்
ஆவார்
என்றால்,
என்னுடைய
மேனி
உள்ளபடி
பசலை
நிறம்
அடைவதாக.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப்
பிரிவிற்கு
நான்
சம்மதிக்கும்படி
செய்து
பிரிந்தவர்தாம்
நல்லவர்
என்றால்,
என்
மேனி
மேலும்
பசலை
அடைந்து
விட்டுப்
போகட்டும்!
கலைஞர் உரை:
பிரிந்து
சென்றிட
என்னை
ஒப்புக்
கொள்ளுமாறு
செய்த
காதலர்
நலமாக
இருப்பார்
என்றால்
என்னுடல்
பசலை
படர்ந்தே
விளங்கிடுமாக!
English Explanation:
If he is clear of guilt who has conciliated me (to his
departure) let my body suffer its due and turn sallow.
குறள் 1190:
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்.
மு.வ உரை:
பிரிவுக்கு
உடன்படச்
செய்த
காதலர்
பிரிந்து
வருத்துதலைப்
பிறர்
தூற்றாமல்
இருப்பாரானால்,
யான்
பசலை
உற்றதாக
பெயர்
எடுத்தல்
நல்லதே.
சாலமன் பாப்பையா உரை:
என்னைச்
சம்மதிக்கச்
செய்து
பிரிந்தவர்
இன்னும்
வராமல்
இருப்பதை
எண்ணி
அவரை
ஏசாமல்,
இவளே
பசலை
ஆயினாள்
என்று
இம்மக்கள்
சொல்லுவர்
என்றால்
அப்படி
ஓரு
பெயரைப்
பெறுவதும்
நல்லதே.
கலைஞர் உரை:
என்னைப்
பிரிவுக்கு
உடன்படுமாறு
செய்த
காதலரை
அன்பில்லாதவர்
என்று
யாரும்
தூற்றமாட்டார்கள்
எனில்,
பசலை
படர்ந்தவள்
என
நான்
பெயரெடுப்பது
நல்லது
தான்!
English Explanation:
It would be good to be
said of me that I have turned sallow, if friends do not reproach with
unkindness him who pleased me (then).
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து:
No comments:
Post a Comment