திருக்குறள் தொடர்கிறது…
121. நினைந்தவர் புலம்பல்
👉குறள் 1201:
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
மு.வ உரை:
நினைத்தாலும்
தீராத
பெரிய
மகிழ்ச்சியைச்
செய்தலால்
( உண்டபோது
மட்டும்
மகிழ்ச்சி
தரும்
) கள்ளை
விட
காமம்
இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு
என்
மனைவியுடன்
கூடி
அனுபவித்த
இன்பத்தைப்
பிரிந்திருக்கும்
போது
நினைத்தாலும்
அது
நீங்காத
பெரு
மகிழ்ச்சியைத்
தருவதால்
குடித்தால்
மட்டுமே
மகிழ்ச்சி
தரும்
கள்ளைக்
காட்டிலும்
காதல்
இன்பமானது.
கலைஞர் உரை:
உண்டபோது
மட்டும்
மகிழ்ச்சி
தரும்
கள்ளைவிட
நினைத்தாலே
நெஞ்சினிக்கச்
செய்யும்
காதல்
இன்பமானதாகும்.
English Explanation:
Sexuality is sweeter than liquor,
because when remembered, it creates a most rapturous delight.
👉குறள் 1202:
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்.
மு.வ உரை:
தாம்
விரும்புகின்ற
காதலர்
தம்மை
நினைத்தலும்
பிரிவால்
வரக்கூடிய
துன்பம்
இல்லாமல்
போகின்றது.
அதனால்
காமம்
எவ்வளவாயினும்
இன்பம்
தருவதே
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம்
விரும்புபவரைப்
பிரிவிலும்
நினைத்தால்
பிரிவுத்
துன்பம்
வராது.
அதனால்
என்ன
ஆனாலும்
சரி,
காதல்
இனியதுதான்.
கலைஞர் உரை:
விரும்பி
இணைந்த
காதலரை
நினைத்தலால்,
பிரிவின்
போது
வரக்கூடிய
துன்பம்
வருவதில்லை
எனவே
எந்த
வகையிலும்
காதல்
இனிதேயாகும்.
English Explanation:
Even to think of one's beloved gives
one no pain Sexuality, in any degree, is always delightful.
👉குறள் 1203:
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.
மு.வ உரை:
தும்மல்
வருவது
போலிருந்து
வாராமல்
அடங்குகின்றதே!
என்
காதலர்
என்னை
நினைப்பவர்
போலிருந்து
நினையாமல்
விடுகின்றாரோ?
சாலமன் பாப்பையா உரை:
எனக்குத்
தும்மல்
வருவது
போல்
வந்து
அடங்கி
விடுகிறது.
அவர்
என்னை
நினைக்கத்
தொடங்கி,
நினைக்காமல்
விடுவாரோ?
கலைஞர் உரை:
வருவது
போலிருந்து
வராமல்
நின்று
விடுகிறதே
தும்மல்;
அதுபோலவே
என்
காதலரும்
என்னை
நினைப்பது
போலிருந்து,
நினைக்காது
விடுகின்றாரோ?
English Explanation:
I feel as if I am going to sneeze but do not, and
(therefore) my beloved is about to think (of me) but does not.
👉குறள் 1204:
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்தோஒ உளரே அவர்.
மு.வ உரை:
எம்முடைய
நெஞ்சில்
காதலராகிய
அவர்
இருக்கின்றாரே!
( அது
போலவே)
யாமும்
அவருடைய
நெஞ்சத்தில்
நீங்காமல்
இருக்கின்றோமோ?
சாலமன் பாப்பையா உரை:
என்
நெஞ்சத்தில்
அவர்
எப்போதும்
இருக்கிறார்.
அவர்
நெஞ்சத்தில்
நானும்
இருப்பேனா?
கலைஞர் உரை:
என்
நெஞ்சைவிட்டு
நீங்காமல்
என்
காதலர்
இருப்பது
போல,
அவர்
நெஞ்சை
விட்டு
நீங்காமல்
நான்
இருக்கின்றேனா?
English Explanation:
He continues to abide in my soul, do I likewise abide in his?
👉குறள் 1205:
தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்.
மு.வ உரை:
தம்முடைய
நெஞ்சில்
எம்மை
வரவிடாது
காவல்
கொண்ட
காதலர்,
எம்முடைய
நெஞ்சில்
தாம்
ஓயாமல்
வரவதைப்
பற்றி
நாணமாட்டாரோ?
சாலமன் பாப்பையா உரை:
தம்
நெஞ்சத்தில்
என்னை
விலக்கிவிட்ட
அவர்,
என்
நெஞ்சத்தில்
மட்டும்
ஓயாமல்
வருவதற்கு
வெட்கப்
படமாட்டாரோ?
கலைஞர் உரை:
அவருடைய
நெஞ்சில்
எமக்கு
இடம்
தராமல்
இருப்பவர்;
எம்
நெஞ்சில்
மட்டும்
இடைவிடாமல்
வந்து
புகுந்து
கொள்வதற்காக
வெட்கப்படமாட்டார்
போலும்.
English Explanation:
He who has imprisoned me in his
soul, is he ashamed to enter incessantly into mine.
👉குறள் 1206:
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்உற்றநாள் உள்ள உளேன்.
மு.வ உரை:
காதலராகிய
அவரோடு
யான்
பொருந்தியிருந்த
நாட்களை
நினைத்துக்
கொள்வதால்தான்
உயிரோடு
இருக்கின்றேன்;
வேறு
எதனால்
உயிர்
வாழ்கின்றேன்?
சாலமன் பாப்பையா உரை:
அவரோடு
கூடி
வாழ்ந்த
நாள்களின்
நினைவுகளை
நினைப்பதால்தான்
நான்
இன்னும்
உயிர்
வாழ்கிறேன்.
இல்லை
என்றால்,
வேறு
எதனால்
வாழ்வேன்?
கலைஞர் உரை:
நான்
அவரோடு
சேர்ந்திருந்த
நாட்களை
நினைத்துத்
தான்
உயிரோடு
இருக்கிறேன்;
வேறு
எதை
நினைத்து
நான்
உயிர்வாழ
முடியும்?
English Explanation:
I live by remembering my (former) intercourse with him; if it
were not so, how could I live?
👉குறள் 1207:
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்.
மு.வ உரை:
( காதலரை
) மறந்தறியாமல்
நினைத்தாலும்
உள்ளத்தைப்
பிரிவுத்
துன்பம்
சுடுகின்றதே!
நினைக்காமல்
மறந்து
விட்டால்
என்ன
ஆவேனோ?
சாலமன் பாப்பையா உரை:
அந்த
நாள்களின்
நினைவுகளை
மறவாமல்
நினைத்தாலும்
என்
நெஞ்சு
சுடும்;
அப்படி
இருக்க
மறந்தால்
வாழ்வது
எப்படி?
கலைஞர் உரை:
மறதி
என்பதே
இல்லாமல்
நினைத்துக்
கொண்டிருக்கும்
பொழுதே
பிரிவுத்துன்பம்
சுட்டுப்
பொசுக்குகிறதே!
பினைக்காமல்
மறந்துவிட்டால்
என்ன
ஆகுமோ?
English Explanation:
I have never forgotten (the pleasure); even to think of it
burns my soul; could I live, if I should ever forget it?
👉குறள் 1208:
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.
மு.வ உரை:
காதலரை
எவ்வளவு
மிகுதியாக
நினைத்தாலும்
அவர்
என்மேல்
சினங்கொள்ளார்;
காதலர்
செய்யும்
சிறந்த
உதவி
அத்தன்மையானது
அன்றோ!
சாலமன் பாப்பையா உரை:
அவரை
நான்
எப்படி
எண்ணினாலும்
கோபப்படமாட்டார்;
அன்புள்ள
அவர்
எனக்குத்
தரும்
இன்பம்
அத்தகையது
அன்றோ!
கலைஞர் உரை:
எவ்வளவு
அதிகமாக
நினைத்தாலும்,
அதற்காகக்
காதலர்
என்
மீது
சினம்
கொள்ளமாட்டார்.
அவர்
எனக்குச்
செய்யும்
பெரும்
உதவி
அதுவல்லவா?
English Explanation:
146 He will not be angry however much I may think of him; is
it not so much the delight my beloved.
👉குறள் 1209:
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
மு.வ உரை:
நாம்
இருவரும்
வேறு
அல்லேம்
என்று
அடிக்கடி
சொல்லும்
அவர்
இப்போது
அன்பு
இல்லாதிருத்தலை
மிக
நினைத்து
என்
இனிய
உயிர்
அழிகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நம்
உயிர்
வேறு
அல்ல;
ஒன்றே
என்று
முன்பு
சொன்ன
அவரின்
இப்போதைய
கருணையற்ற
தன்மையை
அதிகம்
எண்ணி,
என்
உயிர்
போய்க்கொண்டே
இருக்கிறது.
கலைஞர் உரை:
``நாம்
ஒருவரே;
வேறு
வேறு
அல்லர்''
எனக்கூறிய
காதலர்
இரக்கமில்லாதவராக
என்னைப்
பிரிந்து
சென்றுள்ளதை
நினைத்து
வருந்துவதால்
என்னுயிர்
கொஞ்சம்
கொஞ்சமாகப்
போய்க்
கொண்டிருக்கிறது.
English Explanation:
My precious life is wasting away by
thinking too much on the cruelty of him who said we were not different.
👉குறள் 1210:
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
மு.வ உரை:
தி்ங்களே!
பிரியாமல்
இருந்து
இறுதியில்
பிரிந்து
சென்ற
காதலரை
என்
கண்ணால்
தேடிக்
காணும்படியாக
நீ
மறைந்து
விடாமல்
இருப்பாயாக!
சாலமன் பாப்பையா உரை:
திங்களே!
பிரியாமலிருந்து
இறுதியில்
பிரிந்து
சென்ற
காதலரை
என்
கண்ணால்
தேடிக்
காணும்படியாக
நீ
மறைந்து
விடாமல்
இருப்பாயாக!
கலைஞர் உரை:
நிலவே!
நீ
வாழ்க;
இணைபிரியாமலிருந்து,
பிரிந்து
சென்றுள்ள
காதலரை
நான்
என்
கண்களால்
தேடிக்
கண்டுபிடித்திடத்
துணையாக
நீ
மறையாமல்
இருப்பாயாக.
English Explanation:
May you live, O Moon! Do not set, that I mine see him who
has departed without quitting my soul.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment