நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
மனைவி: இன்றைக்கு நீங்க என்னை 'அழகே'ன்னு கூப்பிடலையே?
கணவன்: ஆமா,அப்படி உன்னை கூப்பிடும்போது அயலவங்களுக்கு ரொம்ப தலையிடியாம். அதுதான் நிறுத்தி விட்டேன்.
-02-
மனைவி: உங்களுக்கு என்ன சாப்பிடக் கொண்டுவரணும்?
கணவன்: எது இருந்தாலும் நீ சமைக்காதது இருந்தா கொண்டுவா!!
-03-
மனைவி: நான் சமைத்த சாம்பார் எப்படி?
கணவன்: ரொம்ப நல்லா இருக்கு… யாராவது விருந்தாளி வந்தா அவனை கெதியாய் கலைக்கணும் எண்டால் அவனுக்குக் கொடுக்கலாம்.
-04-
மனைவி: நான் சமைத்த காபி குடிச்சுக்கொண்டு என்னோட முகத்தை கண்ணாடியில பார்த்துட்டே இருந்தேனுங்க!
கணவன்: கடைசியாக ஒருமுறை உன்ர முகத்தை நீ பார்க்க்கணுமேன்னு ஒரு ஆசை வந்திருக்கலாம்.!!
-05-
மனைவி: உங்களுக்கு இன்றைக்கு என்ன surprise இருக்கு என்று சொல்லுங்கோ பார்ப்போம்?
கணவன்: இன்று எனக்கு, நீ சமைக்காத சாப்பாடு தரப்போகின்றாய்.
-06-
காதலி: எப்பவும் late ஆ வர்றே?
காதலன்: நிமிசத்துக்கு நிமிஷம் ரீல்ஸ் இலை உன் மூஞ்சிய பார்த்துப் பார்த்து time waste ஆயிடுது..
-07-
மருமகள்: மாமி, நாம் உண்ட மிச்சங்களை உண்ண நமக்கு ஒரு நாய் வாங்கலாமா?
மாமி: அதுக்குத்தான் உன் மாமனாரே இருக்காரே!.
-08-
வாணி: உன் கணவர் உன் பிறந்தநாளுக்கு என்ன gift தந்தார்டி?
கோமதி: வாட்ஸப்பிலை ஒரு தங்க செயின் அனுப்பினாரடி.
-09-
போலீஸ்: பணம் திருடாத நீ ஏன் பொருட்களை மட்டும் திருடுறாய்?
கைதி:பணத்திற்கு இன்கம் ரக்ஸ் கட்டிடவேண்டி வரும் சார்!
-10-
நீதிபதி: உன் பக்கத்து வீடு எரியும்போது நீ அங்கே என்ன பண்ணிட்டிருந்தே?
சாட்சி: Selfie எடுத்து Instagram upload பண்ணிக்கிட்டிருந்தேன் சார்!.
-11-
நீதிபதி: உன் பெயர் என்ன?
சாட்சி: அப்பா சொல்வது தண்டச்சோறு , அம்மா சொல்வது ஊர்சுற்றி … எது officialன்னு தெரியல சார்!
-12-
நீதிபதி: நீ உன்னுடைய story சொல்லு.
சாட்சி: சரி சார்… ஆனா என்னுடைய facebook இல போனா என்னுடைய story நிறைய இருக்கு சார்!
-13-
நீதிபதி: நீ அந்த மனிதரை அடித்தாயா?
குற்றவாளி: இல்லை சார்.
சாட்சி: அடிச்சாரு சார்… ஆனா நான் video எடுக்கும்போது pose கொடுத்தார்.
-14-
நீதிபதி: நீ அந்த மனிதரை துரத்தினியா?
குற்றவாளி: jogging சார்.
சாட்சி: Joggingனா அவங்க பாக்கெட்டுல எதுக்கு கை போட்டே?
குற்றவாளி: அது யோகா சார்!
நீதிபதி:!!!
-15-
வாடகை: என் roomக்கு fan இருக்கென்று வாடகைக்கு தந்தீர்கள், ஆனால் fan க்கு சுவிட்சை காணவில்லையே?
வீட்டுக்காரன்: ஆமா… ஆனா switch இருக்கு எண்டு நீங்க கேட்கவுமில்லை, நான் சொல்லவுமில்லையே!!
-16-
மனிதன்: “கடவுளே, என் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா?”
கடவுள்: “பிரச்சனையே நீதானே! தீர்த்துவிடுகிறேன்!
-17-
மனிதன்: “கடவுளே, நான் அதிகமாக நோய்வாய்ப்பட்டுள்ளேன்., சுகம் வர செய்துவிடு”
கடவுள்: “அதுக்கு நீ போகவேண்டிய இடம் இதுவல்ல, மருத்துவமனை!”
-18-
மனிதன்: “கடவுளே, நான் என் கடினமான இந்த வாழ்க்கையை மாற்ற வரம் கொடு”
கடவுள்: 'முதல்ல இந்த இடத்தைவிட்டு மாறு'
-19-
அரசன்: “நாடு முழுக்க கல்வி முக்கியம்.”
மந்திரி: “அரசே , முதலில் பள்ளிகளை திறக்கலாமா?”
அரசன்: “சரி, ஆனால் மாணவர்கள் வர மறுக்கிறார்களே!”
மந்திரி: “அப்போ நாமே படிப்போமே!”
-20-
காதலன்: “நான் உன் பேச்சில் lost ஆகிறேன்.”
காதலி: “அப்போ திரும்பிவர GPS தேவை என்கிறாய்?”
ஆக்கம்::செ . மனுவேந்தன்
No comments:
Post a Comment