திருக்குறள் தொடர்கிறது…
126. நிறையழிதல்
குறள் 1251:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
மு.வ உரை:
நாணம்
என்னும்
தாழ்ப்பாள்
பொருந்திய
நிறை
என்று
சொல்லப்படும்
கதவை
காமம்
ஆகிய
கோடாலி
உடைத்து
விடுகிறதே.
சாலமன் பாப்பையா உரை:
நாணம்
என்னும்
தாழ்பாளைக்
கோத்திருக்கும்
நிறை
எனப்படும்
கதவைக்
காதல்
விருப்பமாகிய
கோடரி
பிளக்கின்றதே!
கலைஞர் உரை:
காதல்
வேட்கை
இருக்கிறதே,
அது
ஒரு
கோடரியாக
மாறி,
நாணம்
எனும்
தாழ்ப்பாள்
போடப்பட்ட
மன
அடக்கம்
என்கிற
கதவையே
உடைத்தெறிந்து
விடுகின்றது.
English Explanation:
The axe of lust can break the door
of chastity which is bolted with the bolt of modesty.
குறள் 1252:
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்.
மு.வ உரை:
காமம்
என்று
சொல்லப்படுகின்ற
ஒன்று
கண்ணோட்டம்
இல்லாதது.
அது
என்
நெஞ்சத்தை
நள்ளிரவில்
ஏவல்
கொண்டு
ஆள்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாரும்
வேலையின்றி
உறங்கும்
நடுச்சாமத்திலும்
என்
நெஞ்சத்தைத்
தண்டித்து
வேலை
வாங்குவதால்
காதல்
என்று
சொல்லப்படும்
ஒன்று
இரக்கமற்றதாக
இருக்கிறது.
கலைஞர் உரை:
காதல்
வேட்கை
எனப்படும்
ஒன்று
இரக்கமே
இல்லாதது;
ஏனெனில்
அது
என்
நெஞ்சில்
நள்ளிரவிலும்
ஆதிக்கம்
செலுத்தி
அலைக்கழிக்கிறது.
English Explanation:
Even at midnight is my mind worried
by lust, and this one thing, alas! is without mercy.
குறள் 1253:
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல்
தோன்றி விடும்.
மு.வ உரை:
யான்
காமத்தை
என்னுள்ளே
மறைக்க
முயல்வேன்;
ஆனால்
அதுவே
என்
குறிப்பின்படி
நிற்காமல்
தும்மல்
போல்
தானே
வெளிப்பட்டு
விடுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
என்
காதல்
ஆசையை
நான்
மறைக்கவே
எண்ணுவேன்;
ஆனால்,
அது
எனக்கும்
தெரியாமல்
தும்மலைப்
போல்
வெளிப்பட்டு
விடுகிறது.
கலைஞர் உரை:
எவ்வளவுதான்
அடக்க
முயன்றாலும்
கட்டுப்படாமல்
தும்மல்
நம்மையும்
மீறி
வெளிப்படுகிறதல்லவா;
அதைப்
போன்றதுதான்
காதல்
உணர்ச்சியும்;
என்னதான்
மறைத்தாலும்
காட்டிக்
கொடுத்துவிடும்.
English Explanation:
I would conceal my lust, but alas,
it yields not to my will but breaks out like a sneeze.
குறள் 1254:
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்மறையிறந்து மன்று படும்.
மு.வ உரை:
யான்
இதுவரையில்
நிறையோடிருப்பதாக
எண்ணிக
கொண்டிருந்தேன்.
ஆனால்
என்
காமம்
என்னுள்
மறைந்திருத்தலைக்
கடந்து
மன்றத்தில்
வெளிப்படுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இன்றுவரை
நான்
என்னை
மன
அடக்கம்
உடையவள்
என்றுதான்
எண்ணிக்
கொண்டிருந்தேன்.
ஆனால்
இன்றோ
என்
காதல்
ஆசை,
மறைத்தலைக்
கடந்து
ஊரவர்
அறிய
வெளிப்பட்டுவிட்டது.
கலைஞர் உரை:
மன
உறுதிகொண்டவள்
நான்
என்பதே
என்
நம்பிக்கை;
ஆனால்
என்
காதல்,
நான்
மறைப்பதையும்
மீறிக்கொண்டு
மன்றத்திலேயே
வெளிப்பட்டு
விடுகிறதே.
English Explanation:
I say I would be firm, but alas, my
malady breaks out from its concealment and appears in public.
குறள் 1255:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன் றன்று.
மு.வ உரை:
தம்மை
வெறுத்து
நீங்கியவரின்
பின்
செல்லாமல்
மானத்தோடு
நிற்கும்
பெருந்தகைமை,
காமநோய்
உற்றவர்
அறியும்
தன்மையது
அனறு.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைப்
பிரிந்து
சென்றவர்
பின்னே
செல்லாது,
தானும்
அவரை
விட்டுப்
பிரிந்து
நிற்கும்
மன
அடக்கத்தைக்
காதல்
நோயை
அறியாதவர்
பெற
முடியும்.
அறிந்தவரால்
பெற
முடியாது.
கலைஞர் உரை:
தம்மைப்
பிரிந்து
சென்ற
காதலரைப்
பகையாகக்
கருதி
அவரைத்
தொடர்ந்து
மன
அடக்கம்,
காதல்
நோயுற்றவர்க்கு
இருப்பதில்லை.
English Explanation:
The dignity that would not go after
an absent lover is not known to those who are sticken by love.
குறள் 1256:
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
மு.வ உரை:
வெறுத்து
நீங்கிய
காதலரின்
பின்
செல்ல
விரும்பிய
நிலையில்
இருப்பதால்
என்னை
அடைந்த
இந்த
காமநோய்
எத்தன்மையானது?
அந்தோ!
சாலமன் பாப்பையா உரை:
என்னைப்
பிரிந்து
சென்றவர்
பின்னே
நான்
போய்ச்
சேர
வேண்டும்
என்று
என்னைப்
பிடித்த
இந்தக்
காதல்
நோய்
தூண்டுவதால்
இது
மிகமிகக்
கொடியது.
கலைஞர் உரை:
வெறுத்துப்
பிரிந்ததையும்
பொறுத்துக்
கொண்டு
அவர்
பின்னே
செல்லும்
நிலையை
என்
நெஞ்சுக்கு
ஏற்படுத்திய
காதல்
நோயின்
தன்மைதான்
என்னே.
English Explanation:
The sorrow I have endured by
desiring to go after my absent lover, in what way is it excellent?
குறள் 1257:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
மு.வ உரை:
நாம்
விரும்பிய
காதலர்
காமத்தால்
நமக்கு
விருப்பமானவற்றைச்
செய்வாரானால்.
நாணம்
என்று
சொல்லப்படும்
ஒரு
பண்பையும்
அறியாமல்
இருப்போம்.
சாலமன் பாப்பையா உரை:
என்னால்
விரும்பப்பட்டவர்
காதல்
ஆசையில்
நான்
விரும்பியதையே
செய்தபோது,
நாணம்
என்று
சொல்லப்படும்
ஒன்றை
அறியாமலேயே
இருந்தேன்.
கலைஞர் உரை:
நமது
அன்புக்குரியவர்
நம்மீது
கொண்ட
காதலால்
நமக்கு
விருப்பமானவற்றைச்
செய்யும்போது,
நாணம்
எனும்
ஒரு
பண்பு
இருப்பதையே
நாம்
அறிவதில்லை.
English Explanation:
I know nothing like shame when my
beloved does from love (just) what is desired (by me).
குறள் 1258:
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
மு.வ உரை:
நம்முடைய
பெண்மையாகிய
அரணை
அழிக்கும்
படையாக
இருப்பது,
பல
மாயங்களில்
வல்ல,
கள்வனான
காதலரடைய
பணிவுடைய
மொழி
அன்றோ?
சாலமன் பாப்பையா உரை:
என்
மன
அடக்கமாகிய
கோட்டையை
அழிக்கும்
ஆயுதம்,
பல
பொய்த்
தொழிலும்
வல்ல
இந்த
மனத்திருடனின்
பணிவான
சொற்கள்
அன்றோ!
கலைஞர் உரை:
நம்முடைய
பெண்மை
எனும்
உறுதியை
உடைக்கும்
படைக்கலனாக
இருப்பது,
பல
மாயங்களில்
வல்ல
கள்வராம்
காதலரின்
பணிவான
பாகுமொழியன்றோ?
English Explanation:
Are not the enticing words of my trick-abounding roguish
lover the weapon that breaks away my feminine firmness?
குறள் 1259:
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டு.
மு.வ உரை:
ஊடுவேன்
என்று
எண்ணிக்
கொண்டு
சென்றேன்;
ஆனால்
என்
நெஞ்சம்
என்னை
விட்டு
அவரோடு
கூடுவதை
கண்டு
தழுவினேன்.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
வந்தபோது
ஊடல்
கொள்ளலாம்
என்று
எண்ணி,
அவர்முன்
நில்லாது
அப்பால்
போனேன்;
நான்
போன
போதும்,
என்
நெஞ்சம்
அடக்கம்
இல்லாமல்
அவரோடு
கலக்கத்
தொடங்குவதைக்
கண்டு
இனி
அது
முடியாது
என்று
அவரைத்
தழுவினேன்.
கலைஞர் உரை:
ஊடல்
கொண்டு
பிணங்குவோம்
என
நினைத்துதான்
சென்றேன்;
ஆனால்
என்
நெஞ்சம்
என்னை
விடுத்து
அவருடன்
கூடுவதைக்
கண்டு
என்
பிடிவாதத்தை
மறந்து
தழுவிக்
கொண்டேன்.
English Explanation:
I said I would feign dislike and so
went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with
him!
குறள் 1260:
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.
மு.வ உரை:
கொழுப்பைத்
தீயில்
இட்டால்
போன்ற
உருகும்
நெஞ்சுடைய
என்னைப்
போன்றவர்க்கு,
இசைந்து
ஊடி
நிற்போம்
என்று
ஊடும்
தன்மை
உண்டோ?
சாலமன் பாப்பையா உரை:
கொழுப்பைத்
தீயிலே
போட்டால்
அது
உருகுவது
போலத்
தம்
காதலரைக்
கண்டால்
மன
அடக்கம்
இன்றி
உருகும்
நெஞ்சினையுடைய
பெண்களுக்கு,
அவர்
கூடவும்,
நாம்
ஊடவும்
பின்பு
ஏதும்
தெரியாத
நிலையிலேயே
நிற்போம்
என்ற
நிலை
உண்டாகுமோ?
கலைஞர் உரை:
நெருப்பிலிட்ட
கொழுப்பைப்
போல்
உருகிடும்
நெஞ்சம்
உடையவர்கள்,
கூடிக்
களித்தபின்
ஊடல்
கொண்டு
அதில்
உறுதியாக
இருக்க
முடியுமா?
English Explanation:
Is it possible for those whose hearts melt like fat in the
fire to say they can feign a strong dislike and remain so?
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment