திருக்குறள் தொடர்கிறது…
127. அவர்வயின்
விதும்பல்
👉குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
மு.வ உரை:
என்
கண்களும்
அவர்
வரும்
வழியைப்
பார்த்துப்
பார்த்து
ஒளி
இழந்து
அழகு
கெட்டன;
விரல்களும்
அவர்
சென்ற
நாட்களைக்
குறித்துத்
தொட்டுத்
தொட்டுத்
தேய்ந்தன.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
என்னைப்
பிரிந்து
போன
நாள்களைச்
சுவரில்
குறித்துத்
தொட்டு
எண்ணுவதால்
என்
விரல்கள்
தேய்ந்து
விட்டன;
அவர்
வரும்
வழியைப்
பார்த்து
என்
கண்களும்
ஒளி
இழந்து,
நுண்ணியவற்றைக்
காணும்
திறனில்
குறைந்து
விட்டன.
கலைஞர் உரை:
வருவார்
வருவார்
என
வழி
பார்த்துப்
பார்த்து
விழிகளும்
ஒளியிழந்தன;
பிரிந்து
சென்றுள்ள
நாட்களைச்
சுவரில்
குறியிட்டு
அவற்றைத்
தொட்டுத்
தொட்டு
எண்ணிப்
பார்த்து
விரல்களும்
தேய்ந்தன.
English Explanation:
My finger has worn away by marking
(on the wall) the days he has been absent while my eyes have lost their lustre
and begin to fail.
👉குறள் 1262:
இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
மு.வ உரை:
தோழி!
காதலரின்
பிரிவால்துன்புற்று
வருந்துகின்ற
இன்றும்
அவரை
மறந்து
விட்டால்,
அழகு
கெட்டு
என்
தோள்
மேல்
அணிந்துள்ள
அணிகள்
கழலுமாறு
நேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிரும்
நகை
அணிந்தவனே!
என்
காதலரை
நான்
இன்று
மறந்தால்
என்னைவிட்டு
அழகு
மிகுதியும்
நீங்க,
என்
தோளும்
வளையல்களை
இழக்கும்.
கலைஞர் உரை:
காதலரைப்
பிரிந்திருக்கும்
நான்,
பிரிவுத்
துன்பம்
வாராதிருக்க
அவரை
மறந்திருக்க
முனைந்தால்,
என்
தோள்கள்
அழகு
நீங்கி
மெலிந்து
போய்
வளையல்களும்
கழன்று
விழுவது
உறுதியடி
என்
தோழி.
English Explanation:
O you bright-jewelled maid, if I
forget (him) today, my shoulders will lose their beauty even in the other life
and make my bracelets loose.
👉குறள் 1263:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
மு.வ உரை:
வெற்றியை
விரும்பி
ஊக்கமே
துணையாகக்
கொண்டு
வெளிநாட்டுக்குச்
சென்ற
காதலர்,
திரும்பி
வருதலைக்
காண
விரும்பியே
இன்னும்
யான்
உயிரோடு
இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா உரை:
என்னுடன்
இன்பம்
நுகர்வதை
விரும்பாமல்,
நான்
துணையாவதையும்
வெறுத்துத்
தன்
ஊக்கத்தையே
துணையாக
எண்ணி,
வெற்றி
பெறுவதையே
விரும்பி
என்னைப்
பிரிந்தவர்,
அவற்றை
இகழ்ந்து
என்னிடம்
திரும்ப
வருவதை
நான்
விரும்புவதால்
இவ்வளவு
காலமும்
இருக்கிறேன்.
கலைஞர் உரை:
ஊக்கத்தையே
உறுதுணையாகக்
கொண்டு
வெற்றியை
விரும்பிச்
சென்றுள்ள
காதலன்,
திரும்பி
வருவான்
என்பதற்காகவே
நான்
உயிரோடு
இருக்கிறேன்.
English Explanation:
I still live by longing for the
arrival of him who has gone out of love for victory and with valour as his
guide.
👉குறள் 1264:
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
மு.வ உரை:
முன்பு
கூடியிருந்த
காதலைக்
கைவிட்டுப்
பிரிந்த
அவருடைய
வருகையைநினைத்து
என்
நெஞ்சம்
மரத்தின்
கிளைகளின்
மேலும்
ஏறிப்
பார்க்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப்
பிரிந்து
போனவர்
மிகுந்த
காதலுடன்
என்னிடம்
வருவதை
எண்ணி,
என்
நெஞ்சு
வருத்தத்தை
விட்டுவிட்டு
மகிழ்ச்சியில்
கிளை
பரப்பி
மேலே
வளர்கிறது.
கலைஞர் உரை:
காதல்
வயப்பட்டுக்
கூடியிருந்து
பிரிந்து
சென்றவர்
எப்போது
வருவார்
என்று
என்
நெஞ்சம்,
மரத்தின்
உச்சிக்
கொம்பில்
ஏறிப்
பார்க்கின்றது.
English Explanation:
My heart is rid of its sorrow and swells
with rapture to think of my absent lover returning with his love.
👉குறள் 1265:
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்பு.
மு.வ உரை:
என்
காதலரைக்
கண்ணாரக்
காண்பேனாக;
கண்ட
பிறகு
என்னுடைய
மெல்லிய
தோளில்
உண்டாகிய
பசலை
நிறம்
தானே
நீங்கி
விடும்.
சாலமன் பாப்பையா உரை:
என்
கண்கள்
முழுக்க
என்
கணவரை
நான்
காண்பேனாகுக;
அவரைக்
கண்டபின்
என்
மெல்லிய
தோளின்
வாடிய
நிறம்
தானாக
நீங்கும்.
கலைஞர் உரை:
கண்ணார
என்
கணவனைக்
காண்பேனாக;
கண்டபிறகே
என்
மெல்லிய
தோளில்
படர்ந்துள்ள
பசலை
நிறம்
நீங்கும்.
English Explanation:
May I look on my lover till I am
satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.
👉குறள் 1266:
வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
மு.வ உரை:
என்
காதலன்
ஒருநாள்
என்னிடம்
வருவானாக;
வந்த
பிறகு,
என்னுடைய
துன்பநோய்
எல்லொம்
தீருமாறு
நான்
நன்றாக
நுகர்வேன்.
சாலமன் பாப்பையா உரை:
என்
காதலன்
ஒருநாள்
என்னிடம்
வருவானாக;
வந்த
பிறகு,
என்னுடைய
துன்ப
நோய்
எல்லொம்
தீருமாறு
நான்
நன்றாக
நுகர்வேன்.
கலைஞர் உரை:
என்னை
வாடவிட்டுப்
பிரிந்துள்ள
காதலன்,
ஒருநாள்
வந்துதான்
ஆகவேண்டும்
வந்தால்
என்
துன்பம்
முழுவதும்
தீர்ந்திட
அவனிடம்
இன்பம்
துய்ப்பேன்.
English Explanation:
May my husband return some day; and
then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.
👉குறள் 1267:
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்ணன்ன கேளிர் வரின்.
மு.வ உரை:
என்னுடைய
கண்போன்ற
காதலர்
வருவாரானால்,
யான்
அவரோடு
ஊடுவேனோ?
அல்லது
அவரைத்
தழுவுவேனோ?
அவரோடு
கூடுவேனோ?
சாலமன் பாப்பையா உரை:
கண்போல்
சிறந்த
என்
துணைவர்
வந்தால்
அவர்
நெடுநாள்
பிரிந்திருந்ததற்காக
ஊடுவேனா?
அவர்
பிரிவைத்
தாங்க
முடியாமல்
அவரைத்
தழுவுவேனா?
அல்லது
இரண்டு
செயல்களையும்
கலந்து
செய்வேனா?
கலைஞர் உரை:
கண்ணின்
மணியாம்
என்
காதலர்
வந்தவுடன்,
பிரிந்திருந்த
துயரின்
காரணமாக
அவருடன்
ஊடல்,
கொள்வேனோ?
அல்லது
கட்டித்
தழுவிக்
கொள்வேனோ?
அல்லது
ஊடுதல்
கூடுதல்
ஆகிய
இரண்டையும்
இணைத்துச்
செய்வேனோ?
ஒன்றுமே
புரியவில்லையே
எனக்கு;
அந்த
இன்பத்தை
நினைக்கும்போது.
English Explanation:
On the return of him who is as dear
as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?
👉குறள் 1268:
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்து.
மு.வ உரை:
அரசன்
இச்
செயலில்
முனைந்து
நின்று
வெற்றி
பெறுவானாக;
அதன்பின்
யாம்
மனைவியோடு
கூடியிருந்து
அனறு
வரும்
மாலைப்
பொழுதிற்கு
விருந்து
செய்வோம்.
சாலமன் பாப்பையா உரை:
அரசு
போர்
செய்து
வெற்றி
பெறட்டும்;
நானும்
மனைவியோடு
கூடி
மாலைப்பொழுதில்
விருந்து
உண்பேனாகுக.
கலைஞர் உரை:
தலைவன்,
தான்
மேற்கொண்டுள்ள
செயலில்
வெற்றி
பெறுவானாக;
அவன்
வெண்றால்
என்
மனைவியுடன்
எனக்கு
மாலைப்பொழுதில்
இன்ப
விருந்துதான்.
English Explanation:
Let the king fight and gain
(victories); (but) let me be united to my wife and feast the evening.
👉குறள் 1269:
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.
மு.வ உரை:
தொலைவில்
உள்ள
வெளிநாட்டிற்குச்
சென்ற
காதலர்
திரும்பி
வரும்
நாளை
நினைத்து
ஏங்கும்
மகளிர்க்கு
ஒருநாள்
ஏழுநாள்
போல
( நெடிதாக)
கழியும்.
சாலமன் பாப்பையா உரை:
தொலைதூரம்
சென்று
தன்
கணவன்
வரும்
நாளை
எண்ணி
வருந்தும்
பெண்களுக்கு
ஒருநாள்
பலநாள்
போல
நெடிதாகத்
தோன்றும்.
கலைஞர் உரை:
நெடுந்தொலைவு
சென்ற
காதலர்
திரும்பி
வரும்
நாளை
எதிர்பார்த்து
ஏங்குபவர்க்கு
ஒவ்வொரு
நாளும்
ஒவ்வொரு
யுகமாகத்
தோன்றும்.
English Explanation:
To those who suffer waiting for the
day of return of their distant lovers one day is as long as seven days.
👉குறள் 1270:
பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால்.
மு.வ உரை:
துன்பத்தைத்
தாங்காமல்
மனம்
உடைந்து
அழிந்து
விட்டால்,
நம்மைத்
திரும்பப்
பெறுவதனால்
என்ன?
பெற்றக்கால்
என்ன?
பெற்றுப்
பொருந்தினாலும்
என்ன?
சாலமன் பாப்பையா உரை:
என்
பிரிவைத்
தாங்காமல்
உள்ளம்
உடைய,
அவளுக்கு
ஒன்று
ஆகிவிட்டால்
அதன்
பிறகு
அவள்
என்னைப்
பெறுவதால்
ஆவது
என்ன?
பெற்றால்தான்
என்ன?
உடம்போடு
கலந்தால்தான்
என்ன?
ஒரு
பயனும்
இல்லை.
கலைஞர் உரை:
துன்பத்தைத்
தாங்கிக்
கொள்ள
முடியாமல்
மனம்
நிலையிழந்து
போயிவிடுமானால்,
பிறகு
ஒருவரையொருவர்
திரும்பச்
சந்திப்பதனாலோ,
சந்தித்துக்
கூடவதினாலோ,
என்ன
பயன்?
English Explanation:
After (my wife) has died of a broken heart, what good will
there be if she is to receive me, has received me, or has even embraced me?
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment