“முதுமையின் அரவணைப்பு” & "அடக்கம் தடுக்க ஆசை நடக்க"

 

முதுமையின் அரவணைப்பு

 

முதுமையின் அரவணைப்பு

 தனிமையைப் போக்கும்

பதுமையுடன் விளையாடும்

 மழலைப் போலவே!

பெதும்மை பருவத்தில் மகிழ்ச்சி காணும்

புதுமை செய்யும் குழந்தை போன்றே!"

 

"பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும்

காளையாம் செத்தும் இளமை செத்தும்

மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும்

தனித்து விட்ட கொடூரம் எனோ?"

 

"பொன்னேர் மேனி அழகு இழந்து

நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும்

மாறாத அன்பு நிலைத்து நிற்க

வயதான மக்களைத் தழுவ வேண்டும்!"

 

"இளமை நீங்கி உடலும் மெலிய

தளர்ச்சி பெற்று கோலிற் சாய

களைப்பு கொண்ட உள்ளம் ஆற

பாசம் கொடுக்கும் கைகள் தேவை!"

👴👴👴👴👴 


"அடக்கம் தடுக்க ஆசை நடக்க"


"அடக்கம் தடுக்க - ஆசை நடக்க

அச்சம் எச்சரிக்க - அழகு இழுக்க

அடங்கா நெஞ்சம் - பொங்கி வழிய

அணங்கு உன்னுடன் - நான் வரவா?"

 

"ஆடை கொஞ்சம் - காற்றில் ஆட

ஆபரணம் உடலில் - மின்னி ஒளிர

ஆழம் தெரியா - சுந்தரி கவர்ச்சி

ஆட்டிப் படைக்குது - என் உள்ளத்தை?"

  

"இமைகளில் சிக்கி - என்னையே இழந்து

இளையாள் இடையின் - வனப்பில் மயங்கி

இருண்ட மேகஞ்ச்சுற்றி - சுருண்டு கூந்தலிற்குள்

இமைப் பொழுதில் - ஏன் வஞ்சித்தாய்?"

 

"ஈரமான பூவே - இளமை பூவையே

ஈகை ஒன்று - எனக்குத் தருவாயா

ஈன இரக்கம் - கொண்ட விறலியே

ஈடிகை எடுத்து - உன்னை வரையவா?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]


தாய்மை - குறும்படம்


தாய்மை | Thaimai | Simply Empress


தாய்மையடையாத பெண்ணைத் தரம் கெட்டவளாய் பார்க்கும் உலகில் இது பரவாயில்லை.

📽பகிர்வு:தீபம் இணையத்தளம்/theebam / dheepam / www.ttamil.com

சிரிக்க.... சில நிமிடம்

                       நகைச்சுவை=ஜோக்ஸ்


-01-

ஆசிரியர்: "2 + 2 எத்தனை?"

மாணவன்: "சார்கூகிளிடம் கேளுங்க சார். தெளிவாய் சொல்லும்

 

-02-

மனைவி: "என்னங்க! தவிச்ச முயல்போல இருக்கிறீங்க?"

கணவன்: "போனைப் பார்த்தா போனின்ர charge குறையுது, உன்னைப் பார்த்தா என்ர charge குறையுதுஅதுதான்!

 

-03-

டீக்கடை வாடிக்கையாளர்: "டீ குடிக்க கப் சுத்தமா இருக்கு தானே?"

டீக்கடை: "கவலைப்படாதீங்க, டீயே கப்ப சுத்தம் பண்ணிடும்!"

 

-04-

டாக்டர்: "உங்க கழுத்து  எப்படித் முறிந்தது?"

நோயாளி: "வாட்ஸ்அப் status upload பண்ணியபின்  நிமிர முடியலை டாக்டர்!"

 

-05-

ஆசிரியர்: "உன் எதிர்காலத்தில என்னவாக வர விரும்பிறாய்?"

மாணவன்: "Google தான் அதைத்  தீர்மானிக்கணும்!"

 

-06-

போலீஸ்: "உன்ர  காரினை பிழையான இடத்தில ஏன் நிறுத்திவைத்தாய்?"

பையன்: "Google Map தான் சொன்னது இங்க நிறுத்துங்கன்னு!"

 

-07-

பாட்டி: "என் காலத்துல பையனுங்க தோட்டத்துல வேலை செய்தாங்க."

பேத்தி: "இப்போ பாட்டி, Facebook- தான் எல்லோரும் வேலை செய்றாங்க!"

 

-08-

பாட்டி: "நான் TikTok பண்ணலாமா?"

பேத்தி: "அட பாட்டி, உனக்கு யாரு பார்ப்பாங்க?"

பாட்டி: "என் பக்கத்து வீட்டுப் பாட்டிகள் எல்லாம் பார்ப்பாங்க!"

 

-09-

தாத்தா: "நா Love letter வாட்ஸாப் பிலை எழுதணும்னு ஆசை."

பேரன்: "அட தாத்தா, உங்களுக்கு இப்போதேன்?"

தாத்தா: "என் பக்கத்து பாட்டி ரொம்ப அழகா இருக்கே!"

 

-10-

மருமகள்: "தாத்தா, உங்க memory கம்மியா இருக்கு."

தாத்தா: "அதான் என் phone மாதிரி இருக்கே… daily charge பண்ணனும் போல!"

 

-11-

மருமகள்: "தாத்தா, நீங்கள் சைக்கிள்ல விழுந்துட்டீங்களாம்?"

தாத்தா: "அது விழுந்தது நான் இல்ல, சைக்கிள்தான்!"

 

-12-

மருமகள்: "தாத்தா, நீங்க online shopping பண்ணுவீங்களா?"

தாத்தா: "என் காலத்துல line- தான் shop பண்ணினோம். ஆனாலும் online தான்!"

 

-13-

காதலி: "என்னை இல்லாம நீ வாழ முடியுமா?"

காதலன்: "Battery இல்லாம phone இருந்த மாதிரி தான் ஆகிடும்!"

 

-14-

காதலி: "என்னை பார்க்காத நாள் உனக்கு எப்படி இருக்கும்?"

காதலன்: "Mobile data off பண்ணிய மாதிரி boring ஆக இருக்கும்!"

 

-15-

மனைவி: “என்னோட பேச்சு சலிக்குதா?”

கணவன்: “இல்லை, அது தினசரி வாசிக்கும்  background music மாதிரி இருக்கு!”

 

-16-

டாக்டர்: "சின்ன சின்ன விஷயங்களுக்கே கோபப்படுகிறீர்களா?"

நோயாளி: "ஆமாம்இப்போ நீங்க கேட்கற இந்தக் கேள்விக்கே கோபம் வருகிறது!"

 

-17-

டாக்டர்: "உங்கள் report நல்லா இருக்கு."

நோயாளி: "அடடாஅப்போ எனக்கு ஏன் காசு வாங்கினீங்க?"

 

-18-

டாக்டர்: " வயது 75 ஆகுது, நீங்க நல்லா நடை exercise பண்ணனும்."

நோயாளி: "பண்றேன் டாக்டர்அடிக்கொரு தடவைக்கு  remote தேடுறதுக்கு தினமும்  10000 அடிவரை ஆகுது டொக்டர்!"

 

-19-

டாக்டர்: "உங்க problem என்ன?"

நோயாளி: "என் பிரச்சனை  யாருக்குமே சொல்ல முடியல டாக்டர்உங்க fees அதிகம்னு சொல்லிட்டா வீட்டில கூட அடிச்சுடுவாங்க!!"

 

-20-

போலீஸ்: "குடிச்சுட்டு காரு ஓட்டினியா?"

ஆள்: "இல்ல சார்காரு தான் என்னவோ குடிச்சுட்டு ஓடுது போல இருக்கு!"

 

ஆக்கம்::செ . மனுவேந்தன்