"அறிவியல் நோக்கில்....பெளத்தம் [பகுதி:11] ஒரு அலசல் . "

 


"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

 

 

பகுதி: 11 விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / பண்டுவாச[ன்] அல்லது 'பண்டுவாசுதேவ[ன்]'

 

முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயன், தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு பிள்ளையும் இல்லாமல் இறந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் தனது சகோதரரான சுமித்தாவிடம் தனது அரசை தொடர்ந்து ஆள இலங்கைக்கு வருமாறு செய்தி அனுப்பினார். என்றாலும் விஜயனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சருமான உபதீச[ன்], விஜயனின் இறப்பின் பின்பாக, தன் பெயரில் உபதிஸ்ஸ நுவர எனும் ஒரு நகரத்தைக் கட்டி, இளவரன் பண்டுவாச[ன்] வரும் வரை சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington / 11 November 1876 – 7 November 1942)) எழுதியுள்ள "இலங்கையின் சுருக்கமான வரலாறு [A Short History of Ceylon - 1926]" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புத்தமதம் அப்பொழுது இலங்கையில் இல்லை என்பதும் வெளிப்படையாகத் இதன் மூலம் தெரிகிறது. அப்படி என்றால் புத்தரின் இலங்கை வருகை, அதன் நோக்கம் மற்றும் புத்த சமயம் பரப்பவென புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயன் எல்லாம்   என்னவாயிற்று? 

 

மகாவம்சத்தின்படி சுமித்தாவின் இளைய மகன் பண்டுவாசுதேவா இலங்கைக்கு, அந்த பொறுப்பை ஏற்க வந்தான். எனவே, இவன் இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் விஜயனின் தாமிரபரணி இராச்சியத்திலிருந்து வடக்கே ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில், தற்கால மன்னார் மாவட்டத்தில், உபதீசனால் அமைக்கப்பட்டு இருந்த, உபதீச நுவாரா (Upatissa Nuwara) என்ற இடத்தில் இராச்சியம் அமைத்து, (இதனை விஜிதபுரம் என்றும் அழைப்பர்) அதன் மன்னரானார். ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை 'பண்டுவாச' என்று பெயரிடுகிறது. மேலும் விஜயனுடன் இவன், எவ்வாறு தொடர்பு கொண்டவன் என்று எந்த குறிப்பும் பதியாததால், இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் இன்று வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர்.

 

உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது 'வாசி' யின் திரிப்பாகும், எனவே 'பாண்டியவாசி' என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான். இவன் 'பாண்டியவாசி' என்பது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாகச் சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான். இராணி பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள் என்பதால், அவளின் பரிந்துரையும் அங்கு இருந்து இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம். மேலும் இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். இதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

 

இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான்.

 🥿🥿🥿🥿🥿

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

🥿🥿🥿🥿🥿

Part: 11 / The important narrative about the consequent kings and the related affairs / 'Panduvasudeva'

 

Vijaya ruled for thirty- eight years and died without any son to rule after him. He sent a message to his brother Sumitta prior to his death to come to take over his kingdom. Panduvasa came as per the Dipavamsa (Panduvasudeva as per the Mahavamsa). How Panduvasa is related to Vijaya is not given in the Dipavamsa. Panduvasudeva is the youngest son of Sumitta, the brother of Vijaya as per the Mahavamsa.

 

.

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

 

பகுதி / Part: 12 தொடரும் / Will Follow

 

No comments:

Post a Comment