tag:blogger.com,1999:blog-3559326856048819077.post4276068506196762346..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: "தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/"பகுதி:11Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-61925553956499103222016-08-07T04:01:12.255-04:002016-08-07T04:01:12.255-04:00கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான...கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான்,குப்தா காலத்தில்,பிள்ளையார்.ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார்.நாகை மாவட்டத்தில் இருக்கும் திருசெங்காட்டாங்குடி என்ற ஊரில் முன்பு வாழ்ந்த பல்லவ மன்னரின் படைத்தளபதியான பரஞ்சோதி[இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார் ],கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் ,வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகபடுத்தப்பட்டார் என வரலாறு கூறுகிறது. எனவே,முறையான கணபதி வழிபாடு பல்லவர் காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது.<br /><br />ஆகவே,சங்ககாலத்தில் பிள்ளையாரே இல்லாத போது பிள்ளையார் சுழி மட்டும் வந்தது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்?சங்க காலத்திலும் அதற்கு பின்பும் கூட பனை ஓலையில் தான் எழுதினார்கள்.அப்படி பனை ஓலையில் ஒழுங்காக எழுத எழுத்தாணி கூராக இருக்கவேண்டும்.எனினும் கூராக இருக்கும் எழுத்தாணியைக் கொண்டு அதிகம் உலராத ஓலையில் எழுத முடியாது.அதனால் எழுதுவதற்கு முன் ஓலை பதமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது.எனவே சும்மா வட்டமிட்டு சுழித்து பின் நீட்டி பார்த்து இருப்பார்கள் என நாம் இலகுவாக நம்பலாம்.அது சரியாக ஒழுங்காக அமையும் இடத்து ,அதன் பின் அதில் அதன் கீழ் எழுத தொடக்கி இருப்பார்கள்.நாளடைவில் அது ஒரு பழக்கமாக மாறியிருக்கலாம்.அந்த கிறுக்கலுக்கு,பின்னர் அறிமுகமாகிய பிள்ளையாரின் உருவத்தின் தாக்கத்தால்,பிள்ளையார் சுழி என்று பெயர் இட்டு இருக்கலாம் என்று நம்புகிறேன்.<br />கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-59935147972028542092016-08-04T19:03:52.086-04:002016-08-04T19:03:52.086-04:00உங்கள் தொடர் ஆக்கம் அருமையிலும் அருமை .தொடர்ந்து த...உங்கள் தொடர் ஆக்கம் அருமையிலும் அருமை .தொடர்ந்து தாருங்கள். இதேபோன்று பிள்ளையார் வணக்கமும் தமிழர் மத்தியில் எப்படி ஊடுருவியது என்பதனை அறிய தாருங்கள். தேவிnoreply@blogger.com