tag:blogger.com,1999:blog-3559326856048819077.post571219187321856375..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: "பால் கடல் கடைதல்"Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-10881588022259024052012-11-09T22:56:47.882-05:002012-11-09T22:56:47.882-05:00வேதமந்திரங்கள் மூலம் ஆரியர்கள் திராவிடரை மேலும் மு...வேதமந்திரங்கள் மூலம் ஆரியர்கள் திராவிடரை மேலும் முட்டாளாக்கி விட்டார்கள் MANUnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-16831985187763046142012-11-09T22:01:38.509-05:002012-11-09T22:01:38.509-05:00இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச்...இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச்சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள்[ரிக் வேதம்,யசுர் வேதம்,சாம வேதம்,அதர்வண வேதம்] ஆகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது.<br />.<br />வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது' கடவுள்களில் பெண்களும் உள்ளனர். முன்பு அது செவி வழியாகக் கேட்ட, வாய்வழியாகச் சொல்லி வரப்பட்ட "எழுதாக்கிளவி"யாகவே இருந்தது. <br /><br />வேத காலத்தில் அறிவு வளர்ச்சி இல்லாத - ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களாக இருந்த ஆரியர்கள் தாம் எவற்றை கண்டு பயந்தார்களோ, அவற்றை யெல்லாம் வணங்கியிருக் கின்றனர். அவற்றுக்கெல்லாம் தங்கள் உருவத்தைக் கற்பித்து குணங்களையும் கொடுத்துவிட்டனர். <br /><br />உதாரணமாக உஷஸ்: விடியற்காலைப் பொழுது எனப் பொருள் படும் வேதங்கள் வியந்து பாடும் பெண் கடவுள் . இதற்காக 22 சூக்தங்கள் எழுதப்பட்டுள்ளன. இது மிக அழகுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே அக்னி, சூரியன், பூஷன், அஸ்வினி தேவர்கள் முதலியோர் இதன்மீது மையலுற்றுக் காமுற்று அலைந்தார்கள் என்று கூட எழுதி வைத்துள்ளனர். <br /><br />சோமரசம் அல்லது சோமபானம் எனும் மது போதைத் தரக்கூடியதையும் கடவுளாக்கிவிட்டனர்.அதாவது "கள்ளேதான் கடவுளடா" என்றே வேதம் கூறுகிறது. <br /><br />மந்திரங்களால் கடவுளை மகிழ்ச்சி கொள்ள செய்து தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் நினைத்தனர்.<br /><br />மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன. <br /><br />அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்! ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. <br /><br />இப்போது புரிகிறதா, புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது என்பதும்? அதனால் தான் இப்படி. <br /><br />எதிரிகளும் தங்களுக்கு அடிமையாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற ‘அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு ‘உன்னத’ குணாம்சம்: சுயநலம். நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேதமந்திரங்கள் முழுக்கவும் இத்தகைய சுயநலத்தையும், துவேஷத்தையும்தான் முழங்குகின்றன.<br /><br /><br />ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. <br /><br />இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான்.தமிழில் நான்மறை என்பன வேறானவை .இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும்<br /><br />எனவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது.அதன் வழியே புராணங்களும்.அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-75150502655891228762012-11-02T07:12:12.799-04:002012-11-02T07:12:12.799-04:00உண்மையில் நமது சமயத்துப் புராணகதைகள் பெரும்பாலனவைக...உண்மையில் நமது சமயத்துப் புராணகதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும்போது கடவுள்மார்கள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், மிகவும் சக்தி குறைந்தவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனுஷரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருக்கும். இக்கதைகளை பக்தர்கள் கேள்வியே கேட்காது கேட்டு ரசிக்கவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இவைகள் வெறுமனே எழுதப்பட்ட கதைகள்தான் என்றாலும் ஏன்தான் கடவுள்மாரைக் நல்ல கடவுள்தனம் உள்ளவராகச் சித்தரித்து மக்களுக்கு ஒரு இறைபக்தி வரும்படியான சிந்தனைகளை ஏற்படுத்தும் கதைகளை எழுதாமல் விட்டார்கள் என்று கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது.Selvahttps://www.blogger.com/profile/08154348865986212127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-79665990198367112352012-10-20T17:42:22.738-04:002012-10-20T17:42:22.738-04:00நீங்கள் சொல்வதில் முற்றிலும் நியாயம் உண்டு.
........நீங்கள் சொல்வதில் முற்றிலும் நியாயம் உண்டு.<br /><br />.......காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை[லவ, குச ] சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது!<br /> <br />சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. "தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன?"................<br /> <br />................. சீதை "லட்சுமணா! நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல்" என்று கோபத்தோடு சொன்னாள்.<br /> <br />...... லட்சுமனன் தேர் மறைந்தது கண்டு,சீதை கதறினாள்.மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்.................<br /> <br />...........லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர்.சீதாதேவியை அன்புத்தாயை வரச்சொல்வீர்களா? என்றனர். உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர்............................<br /> <br />.......................சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர். <br /> <br />இப்ப ராமர் பரதனுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள் <br /> <br />Ayodhya kandam, Chapter 100/verse 49<br /> <br /> "Women should not be trusted" and that "Secrets should not be confided to the wife" <br /> <br />.kaccit striyaH saantvayasi kaccit taaH ca surakShitaaH |<br />kaccin na shraddadhaasya aasaam kaccid guhyam na bhaaShase || 2-100-49<br /> <br /> "I hope you are pacifying the women well. Are they protected by you? I hope you are not believing the words of these women and not telling them the secrets."<br /><br />கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-56618449095581312742012-10-20T17:38:35.011-04:002012-10-20T17:38:35.011-04:00நீங்கள் சொல்வதில் முற்றிலும் நியாயம் உண்டு.
........நீங்கள் சொல்வதில் முற்றிலும் நியாயம் உண்டு.<br /><br />.......காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை[லவ, குச ] சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது!<br /> <br />சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. "தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன?"................<br /> <br />................. சீதை "லட்சுமணா! நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல்" என்று கோபத்தோடு சொன்னாள்.<br /> <br />...... லட்சுமனன் தேர் மறைந்தது கண்டு,சீதை கதறினாள்.மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்.................<br /> <br />...........லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர்.சீதாதேவியை அன்புத்தாயை வரச்சொல்வீர்களா? என்றனர். உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர்............................<br /> <br />.......................சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர். <br /> <br />இப்ப ராமர் பரதனுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள் <br /> <br />Ayodhya kandam, Chapter 100/verse 49<br /> <br /> "Women should not be trusted" and that "Secrets should not be confided to the wife" <br /> <br />.kaccit striyaH saantvayasi kaccit taaH ca surakShitaaH |<br />kaccin na shraddadhaasya aasaam kaccid guhyam na bhaaShase || 2-100-49<br /> <br /> "I hope you are pacifying the women well. Are they protected by you? I hope you are not believing the words of these women and not telling them the secrets."<br /><br /><br />கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-44076135937361516632012-10-19T23:01:50.716-04:002012-10-19T23:01:50.716-04:00அண்மையில் லவகுசா திரைப்படம் பார்த்தேன்.அக்கதையில் ...அண்மையில் லவகுசா திரைப்படம் பார்த்தேன்.அக்கதையில் இராமனே வில்லனாக உணரமுடிந்தது.அத்துடன் இராம பாத்திரத்தில் வெறுப்பும் வந்தது.sivanoreply@blogger.com