tag:blogger.com,1999:blog-3559326856048819077.post7635885242922886982..comments2024-03-08T18:46:02.643-05:00Comments on Theebam.com: கனவுகள் சொல்லும் செய்திகள்!Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-18869252845329779352019-03-01T19:47:18.981-05:002019-03-01T19:47:18.981-05:00நீங்கள் உங்களில் நம்பிக்கை இன்மையே காரணம். அதுவே உ...நீங்கள் உங்களில் நம்பிக்கை இன்மையே காரணம். அதுவே உங்களுக்கு கனவாக வெளிப்படுகிறது. முதலில் பயத்தினை ஒதுக்கி நம்பிக்கையுடன் உற்சாகமாகப் படியுங்கள்.வெற்றி நிச்சயம்Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-85115434530449331962019-03-01T19:08:02.278-05:002019-03-01T19:08:02.278-05:00எனக்கு கடந்த 5 வருடங்களாக அடிக்கடி தேர்வு எழுத்துவ...எனக்கு கடந்த 5 வருடங்களாக அடிக்கடி தேர்வு எழுத்துவதற்கு செல்லும் போது இடையில் தடை ஏற்பட்டு தேர்வு எழுத முடியாமல் நான் கவலை படுவது போல கனவு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுவே பல விதங்களில் வருகிறது.. என்ன காரணமாக இருக்க கூடும்.??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-44909785843623286202018-12-10T19:52:24.815-05:002018-12-10T19:52:24.815-05:00நண்பர் மேல் இருந்த பற்று இக்காலத்தில் நடப்பவை உங்க...நண்பர் மேல் இருந்த பற்று இக்காலத்தில் நடப்பவை உங்களுக்கு பயத்தினை உருவாக்கியிருக்கலாம்.அதன் எதிரொலியாக இக்கனவு வந்திருக்கலாம்.Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-10508413553739789772018-12-10T02:22:58.296-05:002018-12-10T02:22:58.296-05:00எண் நன்பருக்கு நிச்சயித்த திருமணம் நிற்பது போல் கன...எண் நன்பருக்கு நிச்சயித்த திருமணம் நிற்பது போல் கனவு கன்டேன் என்ன பலனாக இறுக்க முடியும் ?Anonymoushttps://www.blogger.com/profile/03254848913416600652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-40960956924292033972016-09-18T11:16:15.736-04:002016-09-18T11:16:15.736-04:00கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும் என்...கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.Adminhttps://www.blogger.com/profile/00779325665016276936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-5419484446532747182016-09-17T21:57:33.580-04:002016-09-17T21:57:33.580-04:00பசு கன்று ஈன்றுவது போல் கனவு கன்டால் அதன் பலன் என்...பசு கன்று ஈன்றுவது போல் கனவு கன்டால் அதன் பலன் என்ன? கனவு கன்ட நேரம் காலை 6 மணி.Anonymoushttps://www.blogger.com/profile/04911014962652587508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-60639632053929604732013-05-26T18:46:59.905-04:002013-05-26T18:46:59.905-04:00கனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உண...கனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உணர்த்த கடவுள் அனுப்பும் முன்னெச்சரிக்கை யாகவே (Prenomination) நம் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் முதல் காப்பியம் படைத்த இளங்கோவடிகள் இதே நம்பிக்கையில், சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் கனவை[5 புகார்க்காண்டம்/9 கனாத்திறம் உரைத்த கதை] விரிவாக தந்திருப்பதுடன், பாண்டிய அரசன் நெடுஞ் செழியனிடம் அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட கனவின் சகுனத்தைப் பற்றி கூறும் போது ,அது உண்மை ஆவது போல அப்பொழுது அங்கு ஒரு கால் சலங்கையுடன் கண்ணகி முறையிட வந்தாள் என்கிறார்.<br /><br />நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர்.<br /><br />உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்:<br /><br />"மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!"<br />இதற்கு மாமி கூறுகிறாள்:<br />"அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் சடங்காகி அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!"<br /><br />மேலும் ஒரு உதாரணமாக பெயரன் தன் பாட்டனிடம் சொல்லுகிறான்:<br /><br />"தாத்தா எனக்குப் புதையல் கிடைத்தது, நான் பணத்தில் புரள்வதைப் போல் கனவு கண்டேன்; விழித்துப் பார்த்தால் நான் பழைய கிழிந்து போன பாயில்தான் புரண்டு கொண்டிருந்தேன்."<br />தாத்தா சொல்லுகிறார்:<br />"உனக்கு நோய் வரும் என தெரிகிறது."<br /><br />மேலும் சில கனவு பற்றிய நம்பிக்கையை பார்ப்போம்: <br /><br />கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடாகும்.<br /><br />வேடிக்கை என்னவென்றால் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மையாகும்.<br /> <br />உதாரணமாக மரணம் வருவது போன்று கனவு கண்டால் வீட்டில் நல்லகாரியம் நடக்கும் என்றும் திருமணம் நிகழ்வது போன்று கனவு கண்டால் அவ்வீட்டில் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர்.<br /><br />1] ஏர் உழுவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாகும்.<br /> 2]திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்.<br /> 3]கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும்.<br /> 4]மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும்.<br /> 5]இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்.<br /> 6]கனவில் கோயிலைக் கண்டால் குடும்பத்தில் சண்டை வரும்.<br /> 7]வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் செல்வம் பெருகும்.<br /> 8]பெண்கள் கனவில் தண்ணீரைக் கண்டால் குழந்தை பிறக்கும்.<br />[அதிகாலையில் காணும் கனவு பலிக்கும். நல்ல கனவு கண்டு விழித்தால் பின் தூங்கக் கூடாது.]<br />உங்கள் கனவுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். காரண காரியங்களை நீங்களே அறிய முயலுங்கள்.கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-79343533728687778312013-05-26T16:40:00.382-04:002013-05-26T16:40:00.382-04:00சங்க கால உரையாடல் ஒன்று:
தோழி[தலைவியை.பார்த்து:
&...சங்க கால உரையாடல் ஒன்று:<br /><br />தோழி[தலைவியை.பார்த்து:<br />"அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? "<br /><br />தலைமகள் [தோழியிடம்]:<br />"தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து/ சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்". .<br /><br />"கேட்டிசின் வாழி தோழி யல்கற்<br />பொய்வ லாளன் மெய்யுற மரீஇ<br />வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்<br />தமளி தைவந் தனனே குவளை<br />வண்டுபடு மலரிற் சாஅய்த்<br />தமியேன் மன்ற வளியேன் யானே"-குறுந்தொகை 30<br /><br />வாய்த்தகை =.மெய்போலும் தன்மையை உடைய<br />பொய்கனா - பொய்யாகிய கனவு<br />மருட்ட - மயக்கத்தை உண்டாக்க<br />ஏற்று எழுந்து - துயிலுணர்ந்து எழுந்து<br />அமளி தைவந்தனன் - தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்<br />வண்டுபடு குவளை மலரின் - வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல<br />சாஅய் - மெலிந்து/சாம்பி/உணர்ச்சி இழந்து/ சாய்ந்து<br />மன்ற - நிச்சயமாக<br />தமியேன் - தனித்தவளாயினேன்<br /><br />"மெய்போலும் தன்மையை உடைய பொய்யாகிய கனவு மயக்கத்தை உண்டாக்க துயிலுணர்ந்து எழுந்து தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்" .<br /><br />ஆமாம் ..கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன.[தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்]கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக[அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான்] இருப்போம். நமக்குஅல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவுகாண்கிறோம். அவை நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான். அந்த கனவில் வரும் உருவங்கள்[தலைவன்], சிந்தனைகள்[தழுவுதல்] நமக்கு எப்போதாவது பழக்க மானதாகவே அமைந்திருக்கும்.அருகிலிருப்பவர்கள், ‘என்னாயிற்று உனக்கு?’என்று கேட்குமளவுக்கு[நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? ] உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்<br /> -----------------<br />"மிருகங்களும் கனவுகள்காண்பதாக கூறப்படுகிறது."<br /><br />தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் விருப்பம் மிக்க பெடையுடன் வருத்தமுடன் அமர்ந்திருக்கும் சிறிய கடற்காக்கை, சுறாமீன் வேட்டையாடிய இடத்தில் எஞ்சி கிடக்கும் வெள்ளிய இறாமீனைப் பற்றி உண்ப தாகக் கனவு காணும் என ஒரு சங்க பாடல் கூறுகிறது. <br /><br />"கடற்சிறு காக்கை காமர் பெடையொடு 10 <br />கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் <br />வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து "-அகநானுறு 170<br /><br />ஆமாம்... கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள்[வெள்ளிய இறாமீனை உண்ப தாக] ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை.கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகளும்[கடற்காக்கை] எம்போல் கனவுகாண்கின்றன. <br /> ......................................<br /><br />"பல அமானுஷ்ய நம்பமுடியாதநிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன."<br />உதாரணமாக தமிழ் நாட்டு கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் தனது உத்வேகத்தையும் கணித தீர்வையும் கனவில் காண்பதாக கூறியுள்ளார். அதை நாமக்கல் அம்மனுக்கு உடைமையாகக் கருதுகிறார் .அவர் இப்படி சொல்கிறார் :<br />“While asleep I had an unusual experience. There was a red screen formed by flowing blood as it were. I was observing it. Suddenly a hand began to write on the screen. I became all attention. That hand wrote a number of results in elliptic integrals. They stuck to my mind. As soon as I woke up, I committed them to writing”கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-83328922491889812942011-09-18T21:50:03.013-04:002011-09-18T21:50:03.013-04:00கனவுகள் மீதான சமய நம்பிக்கைகளையும் சேர்த்திருந்தால...கனவுகள் மீதான சமய நம்பிக்கைகளையும் சேர்த்திருந்தால் மிகவும் நன்று. சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.இதயநிலாhttp://www.ithayanila.comnoreply@blogger.com