திருக்குறள் தொடர்கிறது…
120. தனிப்படர் மிகுதி
குறள் 1191:
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
மு.வ உரை:
தாம்
விரும்பும்
காதலர்
தம்மை
விரும்புகின்ற
பேறு
பெற்றவர்,
காதல்
வாழ்க்கையின்
பயனாகிய
விதை
இல்லாத
பழத்தைப்
பெற்றவரே
ஆவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம்
விரும்புபவராலேயே
விரும்பப்பட்ட
பெண்கள்தாம்
காதல்
இன்பம்
என்னும்
விதை
இல்லாத
கனியைப்
பெற்றவர்
ஆவர்.
கலைஞர் உரை:
தம்மால்
விரும்பப்படும்
காதலர்,
தம்மை
விரும்புகிற
பேறு
பெற்றவர்
விதையில்லாத
பழத்தைப்
போன்ற
காதல்
வாழ்க்கையின்
பயனைப்
பெற்றவராவார்.
English Explanation:
The women who are beloved by those
whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
குறள் 1192:
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.
மு.வ உரை:
தம்மை
விரும்புகின்றவர்க்குக்
காதலர்
அளிக்கும்
அன்பு,
உயிர்
வாழ்கினறவர்க்கு
மேகம்
மழை
பெய்து
காப்பாற்றுதலைப்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
இன்றி
வாழ
முடியாத
மனைவிக்கு,
அவள்
இன்றி
அமையாத
கணவர்
காட்டும்
அன்பு,
தன்னை
நோக்கி
உயிர்வாழும்
உலகத்தவர்க்கு
வானம்
உரிய
நேரம்
மழை
தந்தது
போலாம்.
கலைஞர் உரை:
காதலர்கள்
ஒருவரையொருவர்
உரிய
நேரத்தில்
சந்தித்து
அன்பு
பொழிவது,
வாழ்வதற்குத்
தேவையான
பருவமழை
பொழிவது
போன்றதாகும்.
English Explanation:
The bestowal of love by the beloved
on those who love them is like the rain raining (at the proper season) on those
who live by it.
குறள் 1193:
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
மு.வ உரை:
காதலரால்
விரும்பப்படுகின்றவர்க்கும்
( பிரிவுத்
துன்பம்
இருந்தாலும்)
மீண்டும்
வந்தபின்
வாழ்வோம்
என்று
இருக்கும்
செருக்குத்
தகும்.
சாலமன் பாப்பையா உரை:
தாம்
விரும்பும்
கணவனால்
விரும்பப்பட்ட
பெண்ணுக்கே
(எப்படியும்
விரைவில்
அவர்
வருவார்
என்ற
உறுதியினால்)
வாழ்வோம்
என்னும்
செருக்கு,
பொருத்தமாக
இருக்கும்.
கலைஞர் உரை:
காதலன்பில்
கட்டுண்டு
பிரியாமல்
இணைந்திருப்பவர்களுக்குத்தான்
இன்புற்று
வாழ்கிறோம்
எனும்
பெருமிதம்
ஏற்படும்.
English Explanation:
The pride that says "we shall
live" suits only those who are loved by their beloved (husbands).
குறள் 1194:
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
மு.வ உரை:
தாம்
விரும்பும்
காதலரால்
விரும்பப்படாவிட்டால்
உலகத்தாரால்
விரும்பப்படும்
நிலையில்
உள்ளவரும்
நல்வினை
பொருந்தியவர்
அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
தாம்
விரும்பும்
கணவனால்
விரும்பப்படாதவளாக
மனைவி
இருந்துவிடுவாளானால்,
அவள்
தீவினை
வசப்பட்டவளே.
கலைஞர் உரை:
விரும்பப்படாத
நிலை
ஏற்படின்,
அந்தக்
காதலர்
நட்புணர்வு
இல்லாதவராகவே
கருதப்படுவார்.
English Explanation:
Even those who are esteemed (by
other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
குறள் 1195:
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.
மு.வ உரை:
நாம்
காதல்
கொண்ட
காதலர்
தாமும்
அவ்வாறே
நம்மிடம்
காதல்
கொள்ளாதபோது,
நமக்கு
அவர்
என்ன
நன்மை
செய்வார்?
சாலமன் பாப்பையா உரை:
நாம்
காதலித்தவர்
நம்மைக்
காதலிக்கவில்லை
என்றால்
நமக்கு
எத்தகைய
மகிழ்ச்சியைத்
தருவார்?
கலைஞர் உரை:
நான்
விரும்பிக்
காதல்
கொள்வது
போன்று
அவர்
என்னை
விரும்பிக்
காதல்
கொள்ளாத
நிலையில்
அவரால்
எனக்கு
என்ன
இன்பம்
கிடைக்கப்
போகிறது?
English Explanation:
He who is beloved by me, what will he do to me, if I am not
beloved by him ?
குறள் 1196:
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது.
மு.வ உரை:
காதல்
ஒரு
பக்கமாக
இருத்தல்
துன்பமானது;
காவடியின்
பாரம்
போல்
இருபக்கமாகவும்
ஒத்திருப்பது
இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆண்,
பெண்
என்னும்
இரு
பக்கத்தில்
ஒரு
பக்கம்
மட்டுமே
காதல்
இருந்தால்
அது
கொடுமை
காவடியின்
பாரத்தைப்
போல
இருபக்கமும்
இருந்தால்தான்
இனிது.
கலைஞர் உரை:
காவடித்
தண்டின்
இரண்டு
பக்கங்களும்
ஒரே
அளவு
கனமாக
இருப்பதுபோல்,
காதலும்
ஆண்,
பெண்
எனும்
இருவரிடத்திலும்
மலர
வேண்டும்;
ஒரு
பக்கம்
மட்டுமே
ஏற்படும்
காதலால்
பயனுமில்லை;
துயரமும்
உருவாகும்.
English Explanation:
Lust, like the weight of the KAVADI,
pains if it lies in one end only but pleases if it is in both.
குறள் 1197:
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
மு.வ உரை:
( காதலர்
இருவரிடத்திலும்
ஒத்திருக்காமல்)
ஒருவரிடத்தில்
மட்டும்
காமன்
நின்று
இயங்குவதால்,
என்னுடைய
துன்பத்தையும்
வருத்தத்தையும்
அறியானோ?
சாலமன் பாப்பையா உரை:
ஆண்,
பெண்
இருவரிடமும்
இருந்து
செயல்
ஆற்றாமல்
ஒருவரிடம்
மட்டுமே
போரிடும்
காமன்,
இன்னொருவரின்
மேனி
நிற
வேறுபாட்டால்
வரும்
துன்பத்தையும்
வருத்தத்தையும்
அறிய
மாட்டானோ?
கலைஞர் உரை:
காமன்,
ஒரு
பக்கமாக
மட்டும்
இருப்பதால்,
என்னைக்
காதல்
நோய்
வருத்துவதையும்,
என்
மேனியில்
பசலை
படர்வதையும்
கண்டு
கொ English Explanation:
Would not cupid who abides and
contends in one party (only) witness the pain and sorrow (in that party)?ள்ளமாட்டான்
போலும்!
குறள் 1198:
வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
மு.வ உரை:
தான்
விரும்பும்
காதலரின்
இனிய
சொல்லைப்
பெறாமல்
உலகத்தில்
( பிரிவுத்
துன்பத்தைப்
பொறுத்து)
வாழ்கின்றவரைப்
போல்
வன்கண்மை
உடையவர்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தம்மால்
விரும்பப்படும்
கணவனிடமிருந்து
ஓர்
இன்சொல்
கூடப்
பெறாமல்
உயிர்
வாழும்
மனைவியைப்
போன்ற
கொடியவர்
இவ்வுலகத்தில்
வேறு
இல்லை.
கலைஞர் உரை:
பிரிந்து
சென்ற
காதலரிடமிருந்து
ஓர்
இனிய
சொல்கூட
வராத
நிலையில்,
உலகில்
வாழ்கின்றவரைப்
போல்,
கல்
நெஞ்சம்
உடையவர்
யாரும்
இருக்க
முடியாது.
English Explanation:
There is no one in the world so
hard-hearted as those who can live without receiving (even) a kind word from
their beloved.
குறள் 1199:
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு.
மு.வ உரை:
யான்
விரும்பிய
காதலர்
மீண்டு
வந்து
அன்பு
செய்யமாட்டார்
என்றாலும்,
அவரைப்
பற்றிய
புகழைக்
கேட்பதும்
என்
செவிக்கு
இன்பமாக
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நான்
காதலிக்கும்
என்
கணவர்
என்மீது
அன்பற்றவர்தாம்
என்றாலும்,
அவரிடம்
இருந்து
வரும்
எந்தச்
சொல்லும்
என்
செவிக்கு
இனிமையானதே.
கலைஞர் உரை:
என்
அன்புக்குரியவர்
என்னிடம்
அன்பு
காட்டாதவராகப்
பிரிந்து
இருப்பினும்,
அவரைப்
பற்றிய
புகழ்
உரை
என்
செவிக்குச்
செந்தேனாகும்.
English Explanation:
145 Though my beloved bestows no
love on one, still are his words sweet to my ears.
குறள் 1200:
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
மு.வ உரை:
நெஞ்சமே!
நீ
வாழி!
அன்பு
இல்லாதவரிடம்
உன்
மிகுந்த
துன்பத்தைச்
சொல்கின்றாய்!
அதை
விட
எளிதாகக்
கடலைத்
தூர்ப்பாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே
நீ
வாழ்க!
பாவம்,
நீ
ஏன்
உன்னோடு
உறவில்லாதவர்க்கு
உன்
அளவற்ற
துன்பத்தைச்
சொல்லிக்
கொண்டிருக்கிறாய்?
(அதற்குப்
பதில்)
உன்னைத்
துன்புறுத்தும்
கடலைத்
தூர்க்க
முயற்சி
செய்;
அது
முடியும்.
கலைஞர் உரை:
நெஞ்சமே!
நீ
வாழ்க!
உன்னிடம்
அன்பு
இல்லாதவரிடம்
உனது
துன்பத்தைச்
சொல்லி
ஆறுதல்
பெறுவதைக்
காட்டிலும்
கடலைத்
தூர்ப்பது
எளிதான
வேலையாகும்.
English Explanation:
Live, O my soul, would you who relate your great sorrow to
strangers, try rather to fill up your own sea (of sorrow).
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment