திருக்குறள் தொடர்கிறது…
122. கனவுநிலை
உரைத்தல்
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.
மு.வ உரை:
( யான்
பிரிவால்
வருந்தி
உறங்கியபோது)
காதலர்
அனுப்பிய
தூதோடு
வந்த
கனவுக்கு
உரிய
விருந்தாக
என்ன
செய்து
உதவுவேன்?
சாலமன் பாப்பையா உரை:
என்
மன
வேதனையை
அறிந்து
அதைப்
போக்க,
என்னவர்
அனுப்பிய
தூதை
என்னிடம்
கொண்டு
வந்த
கனவிற்கு
நான்
எதை
விருந்தாகப்
படைப்பேன்?
கலைஞர் உரை:
வந்த
கனவு
காதலர்
அனுப்பிய
தூதுடன்
வந்ததே;
அந்தக்
கனவுக்குக்
கைம்மாறாக
என்ன
விருந்து
படைத்துப்
பாராட்டுவது?
English Explanation:
Where with shall I feast the dream which has brought me my
dear one's messenger?
குறள் 1212:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்குயலுண்மை சாற்றுவேன் மன்.
மு.வ உரை:
கண்கள்
யான்
வேண்டுவதுபோல்
தூங்குமானால்,
( அப்போது
வரும்
கனவில்
காணும்)
காதலர்க்கு
யான்
தப்பிப்
பிழைத்திருக்கும்
தன்மையைச்
சொல்வேன்.
சாலமன் பாப்பையா உரை:
கண்கள்
யான்
வேண்டுவதுபோல்
தூங்குமானால்,
( அப்போது
வரும்
கனவில்
காணும்)
காதலர்க்கு
யான்
தப்பிப்
பிழைத்திருக்கும்
தன்மையைச்
சொல்வேன்.
கலைஞர் உரை:
நான்
வேண்டுவதற்கு
இணங்கி
என்
மை
எழுதிய
கயல்
விழிகள்
உறங்கிடுமானால்,
அப்போது
என்
கனவில்
வரும்
காதலர்க்கு
நான்
இன்னமும்
உயிரோடு
இருப்பதைச்
சொல்லுவேன்.
English Explanation:
If my fish-like painted eyes should,
at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
குறள் 1213:
நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
மு.வ உரை:
நனவில்
வந்து
அன்பு
செய்யாத
காதலரைக்
கனவில்
காண்பதால்தான்
என்னுடைய
உயிர்
இன்னும்
நீங்காமல்
உள்ளதாகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நனவில்
வந்து
அன்பு
செய்யாத
காதலரைக்
கனவில்
காண்பதால்தான்
என்னுடைய
உயிர்
இன்னும்
நீங்காமல்
உள்ளதாகின்றது.
கலைஞர் உரை:
நனவில்
வந்து
அன்பு
காட்டாதவரைக்
கனவிலாவது
காண்பதால்தான்
இன்னும்
என்னுயிர்
நிலைத்திருக்கிறது.
English Explanation:
My life lasts because in my dream I
behold him who does not favour me in my waking hours.
குறள் 1214:
கனவினான்
உண்டாகும்
காமம்
நனவினான்
நல்காரை
நாடித்
தரற்கு.
மு.வ உரை:
நனவில்
வந்து
அன்பு
செய்யாத
காதலரைத்
தேடி
அழைத்துக்
கொண்டு
வருவதற்காகக்
கனவில்
அவரைப்
பற்றிய
காதல்
நிகழ்ச்சிகள்
உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நேரில்
வந்து
அன்பு
செய்யாதவரை
அவர்
இருக்கும்
இடம்
போய்
அவரைத்
தேடிக்கொண்டு
வந்து
தருவதால்
கனவில்
எனக்கு
இன்பம்
உண்டாகிறது.
கலைஞர் உரை:
நேரில்
என்னிடம்
வந்து
அன்பு
காட்டாத
காதலரைத்
தேடிக்
கொண்டு
வந்து
காட்டுகிற
கனவால்
எனக்குக்
காதல்
இன்பம்
கிடைக்கிறது.
English Explanation:
There is pleasure in my dream,
because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
குறள் 1215:
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
மு.வ உரை:
முன்பு
நனவில்
கண்ட
இன்பமும்
அப்பொழுது
மட்டும்
இனிதாயிற்று;
இப்பொழுது
காணும்
கனவும்
கண்ட
பொழுது
மட்டுமே
இன்பமாக
உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு
அவரை
நேரில்
கண்டு
அனுபவித்ததும்
சரி,
இப்போது
கனவில்
அவரைக்
கண்டு
அனுபவிப்பதும்
இரண்டுமே
எனக்கு
இன்பந்தான்.
கலைஞர் உரை:
காதலரை
நேரில்
கண்ட
இன்பம்
அப்போது
இனிமை
வழங்கியது
போலவே,
இப்போது
அவரைக்
கனவில்
காணும்
இன்பமும்
இனிமை
வழங்குகிறது!
English Explanation:
I saw him in my waking hours, and then it was pleasant; I
see him just now in my dream, and it is (equally) pleasant.
குறள் 1216:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்.
மு.வ உரை:
நனவு
என்று
சொல்லப்படுகின்ற
ஒன்று
இல்லாதிருக்குமானால்,
கனவில்
வந்த
காதலர்
என்னை
விட்டுப்
பிரியாமலே
இருப்பர்.
சாலமன் பாப்பையா உரை:
கண்ணால்
காண்பது
என்றொரு
கொடிய
பாவி
இல்லை
என்றால்
கனவிலே
வந்து
கூடிய
என்னவர்
என்னைப்
பிரிய
மாட்டார்.
கலைஞர் உரை:
நனவு
மட்டும்
திடிரென
வந்து
கெடுக்காமல்
இருந்தால்,
கனவில்
சந்தித்த
காதலர்
பிரியாமலே
இருக்க
முடியுமே.
English Explanation:
Were there no such thing as
wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
குறள் 1217:
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.
மு.வ உரை:
நனவில்
வந்து
எமக்கு
அன்பு
செய்யாத
கொடுமை
உடைய
அவர்,
கனவில்
வந்து
எம்மை
வருத்துவது
என்ன
காரணத்தால்?
சாலமன் பாப்பையா உரை:
நேரில்
வந்து
அன்பு
செய்யாத
இந்தக்
கொடிய
மனிதர்
கனவில்
மட்டும்
நாளும்
வந்து
என்னை
வருத்துவது
ஏன்?
கலைஞர் உரை:
நேரில்
வந்து
அன்பு
காட்டாத
கொடிய
நெஞ்சமுடையவர்,
கனவில்
வந்து
பிரிவுத்
துயரைப்
பெரிதாக்குவது
என்ன
காரணத்தால்?
English Explanation:
The cruel one who would not favour me in my wakefulness,
what right has he to torture me in my dreams?
குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.
மு.வ உரை:
தூங்கும்போது
கனவில்
வந்து
என்
தோள்மேல்
உள்ளவராகி,
விழி்த்தெழும்போது
விரைந்து
என்
நெஞ்சில்
உள்ளவராகிறார்.
சாலமன் பாப்பையா உரை:
என்
நெஞ்சில்
எப்போதும்
வாழும்
என்னவர்
நான்
உறங்கும்
போது
என்
தோளின்
மேல்
கிடக்கிறார்.
விழித்துக்
கொள்ளும்
போதோ
வேகமாக
என்
நெஞ்சிற்குள்
நுழைந்து
கொள்கிறார்.
கலைஞர் உரை:
தூக்கத்தில்
கனவில்
வந்து
என்
தோள்
மீது
சாய்ந்து
இன்பம்
தந்தவர்,
விழித்தபோது
எங்கும்
போய்
விடவில்லை;
என்
நெஞ்சில்
தாவி
அமர்ந்து
கொண்டார்.
English Explanation:
When I am asleep he rests on my
shoulders, (but) when I awake he hastens into my soul.
குறள் 1219:
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்.
மு.வ உரை:
கனவில்
காதலர்
வரக்
காணாத
மகளிர்,
நனவில்
வந்து
அன்பு
செய்யாத
காதலரை
( அவர்
வராத
காரணம்
பற்றி
) நொந்து
கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
இன்னும்
திருமணம்
ஆகாத,
ஆகிக்
கணவனைப்
பிரிந்து
அறியாத
இந்தப்
பெண்கள்,
கனவில்
காதலனைக்
கண்டு
அறியாதவர்,
ஆதலால்,
அவர்கள்
அறிய
நேரில்
வந்து
என்னிடம்
அன்பு
காட்டாத
என்னவரை
அன்பற்றவர்
என்று
ஏசுகின்றனர்.
கலைஞர் உரை:
கனவில்
காதலரைக்
காணாதவர்கள்தான்
அவர்
நேரில்
வந்து
காணவில்லையே
என்று
நொந்து
கொள்வர்.
English Explanation:
They who have no dear ones to behold
in their dreams blame him who visits me not in my waking hours.
குறள் 1220:
நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.
மு.வ உரை:
நனவில்
நம்மை
விட்டு
நீங்கினார்
என்று
காதலரைப்
பழித்து
பேசுகின்றனரே!
இந்த
ஊரார்
கனவில்
அவரைக்
காண்பதில்லையோ?
சாலமன் பாப்பையா உரை:
என்னை
விட்டுப்
பிரிந்து
போய்விட்டார்
என்று
என்னவரை
ஏசும்
இவ்வூர்ப்
பெண்கள்,
அவர்
நாளும்
என்
கனவில்
வருவதைக்
கண்டு
அறியாரோ?
கலைஞர் உரை:
என்
காதலர்
என்னைப்
பிரிந்திருப்பதாக
அவரைக்
குற்றம்
சாட்டுகிறார்களே,
இந்த
ஊரார்,
பிரிந்து
சென்ற
தமது
காதலனைக்
கனவில்
காண்பது
கிடையாதோ?
English Explanation:
The women of this place say he has forsaken me in my
wakefulness I think they have not seen him visit me in my dreams.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment