திருக்குறள் தொடர்கிறது…
124. உறுப்புநலன்
அழிதல்
👉குறள் 1231:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
மு.வ உரை:
இத்துன்பத்தை
நமக்கு
விட்டு
விட்டுத்
தொலைவில்
உள்ள
நாட்டுக்குச்
சென்ற
காதலரை
நினைந்து
அழுதமையால்
கண்கள்
அழகு
இழந்து
நறுமலர்களுக்கு
நாணி
விட்டன.
சாலமன் பாப்பையா உரை:
பிரிவைப்
பொறுக்காத
சிறுமை
என்னோடு
இருக்கப்
பிரிவைப்
பொறுத்துக்
கொண்டு
தொலைவில்
சென்று
அவரை
எண்ணி
அழுவதால்,
கண்கள்
ஒளி
இழந்துவிட்டன.
முன்பு
கண்களைக்
கண்டு
வெட்கப்பட்ட
மண
மலர்களுக்கு
இப்போது
கண்கள்
வெட்கப்பட்டுவிட்டன.
கலைஞர் உரை:
பிரிவுத்
துன்பத்தை
நமக்களித்துவிட்டு
நெடுந்தொலைவு
சென்று
விட்டாரேயென்று
வருந்திடும்
காதலியின்
கண்கள்
அழகிழந்துபோய்,
மலர்களுக்கு
முன்னால்
நாணிக்
கிடக்கின்றன.
English Explanation:
While we endure the unbearable
sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of)
fragrant flowers.
👉குறள் 1232:
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
மு.வ உரை:
பசலை
நிறம்
அடைந்து
நீர்
சொரியும்
கண்கள்,
நாம்
விரும்பிய
காதலர்
நமக்கு
அன்பு
செய்யாத
தன்மையைப்
( பிறர்க்குச்)
சொல்வன
போல்
உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
பசந்து,
நீர்
சிந்தும்
கண்கள்,
நான்
விரும்பியவர்
என்னை
விரும்பவில்லை
என்பதைப்
பிறர்க்குச்
சொல்லும்
போலும்!
கலைஞர் உரை:
பசலை
நிறம்
கொண்டு
நீர்
பொழியும்
கண்கள்,
விரும்பிய
காதலர்
அன்பு
காட்டவில்லை
யென்பதை
சொல்லி
காட்டுகின்றன.
English Explanation:
The discoloured eyes that shed tears
profusely seem to betray the unkindness of our beloved.
👉குறள் 1233:
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
மு.வ உரை:
கூடியிருந்த
காலத்தில்
மகிழ்ந்து
பூரித்திருந்த
தோள்கள்,
( இப்போது
மெலிந்தும்)
காதலருடைய
பிரிவை
நன்றாக
அறிவிப்பவை
போல்
உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
என்னை
மணந்தபோது
இன்பத்தால்
பருத்த
என்
தோள்கள்,
இன்று
மெலிந்து
அவர்
என்னைப்
பிரிந்திருப்பதை
மற்றவர்க்குத்
தெரிவிக்கும்.
கலைஞர் உரை:
தழுவிக்
கிடந்த
போது
பூரித்திருந்த
தோள்,
இப்போது
மெலிந்து
காணப்படுவது;
காதலன்
பிரிவை
அறிவிப்பதற்காகத்தான்
போலும்.
English Explanation:
The shoulders that swelled on the
day of our union (now) seem to announce our separation clearly (to the public).
👉குறள் 1234:
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.
மு.வ உரை:
துணைவர்
விட்டு
நீங்கியதால்
பழைய
அழகு
கெட்டு
வாடிய
தோள்கள்,
பருத்த
தன்மை
கெட்டு
மெலிந்து
வளையல்களும்
கழலச்
செய்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
அவர்
என்னைப்
பிரிந்ததால்
பழைய
இயற்கை
அழகை
இழந்த
என்
தோள்கள்,
இப்போது
வளையல்களும்
கழலும்படி
மெலிந்திருக்கின்றன.
கலைஞர் உரை:
பருத்திருந்த
பருவத்
தோள்கள்
பழைய
எழில்
குலைந்து,
பசும்பொன்
வளையல்களும்
கழன்று
விழுகின்றன
காதலனைப்
பிரிந்து
வாடுவதன்
காரணமாக.
English Explanation:
In the absence of your consort, your
shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure
gold have become loose.
👉குறள் 1235:
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்.
மு.வ உரை:
வளையல்களும்
கழன்று
பழைய
அழகும்
கெட்டு,
வாடிய
தோள்கள்
(என்
துன்பம்
உணராத)
கொடியவரி்ன
கொடுமையைப்
பிறர்
அறியச்
சொல்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:
வளையல்கள்
கழல,
முன்னைய
இயற்கை
அழகையும்
இழந்த
என்
தோள்கள்
கொடிய
அவரின்
கொடுமையைப்
பேசுகின்றன.
கலைஞர் உரை:
வளையல்களும்
கழன்று
விழ,
இருந்த
அழகையும்
இழந்த
தோள்கள்
என்னைப்
பிரிந்திருக்கும்
காதலரின்
கொடுமையை
ஊருக்கு
உரைக்கின்றன.
English Explanation:
The (loosened) bracelets, and the
shoulders from which the old beauty has faded, relate the cruelty of the
pitiless one.
👉குறள் 1236:
தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து.
மு.வ உரை:
வளையல்கள்
கழன்று
தோள்களும்
மெலிவடைவதால்
(அவற்றைக்
காண்போர்)
காதலரைக்
கொடியவர்
என்று
கூறுவதைக்
கேட்டு
வருந்துகின்றேன்.
சாலமன் பாப்பையா உரை:
வளையல்கள்
கழன்று
தோள்கள்
மெலிய,
அவரைக்
கொடுமையானவர்
என்று
அவை
நொந்து
பேசுவதைக்
கேட்டு
நான்
வருந்துகிறேன்.
கலைஞர் உரை:
என்
தோள்கள்
மெலிவதையும்,
வளையல்கள்
கழன்று
விழுவதையும்
காண்போர்
என்னுடையவர்
இரக்கமற்றவர்
என
இயம்புவது
கேட்டு
இதயம்
நொந்து
போகிறேன்.
English Explanation:
I am greatly pained to hear you call
him a cruel man, just because your shoulders are reduced and your bracelets
loosened.
👉குறள் 1237:
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
மு.வ உரை:
நெஞ்சே!
கொடியவர்
என்று
சொல்லப்படுகின்ற
காதலர்க்கு
என்
மெலிந்த
தோள்களின்
ஆரவாரத்தை
உரைத்து,
அந்த
உதவியால்
பெருமை
அடைவாயோ?
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே!
கொடுமையானவராகிய
அவரிடம்
சென்று
என்
மெலியும்
தோள்களினால்
ஏற்பட்டுள்ள
வெற்றுரைகளைச்
சொல்லி
நீ
பெருமை
பெறுவாயோ?
கலைஞர் உரை:
நெஞ்சே!
இரக்கமற்று
என்னைப்
பிரிந்திருக்கும்
அவருக்கும்
வாடி
வதங்கும்
என்
தோள்களின்
துன்பத்தை
உரைத்துப்
பெருமை
அடைய
மாட்டாயோ?
English Explanation:
Can you O my soul! gain glory by relating to the (so-called)
cruel one the clamour of my fading shoulders?
👉குறள் 1238:
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
மு.வ உரை:
தழுவிய
கைகளைத்
தளர்த்தியவுடனே,
பைந்தொடி
அணிந்த
காதலியின்
நெற்றி,
( அவ்வளவு
சிறியதாகிய
பிரிவையும்
பொறுக்காமல்)
பசலை
நிறம்
அடைந்தது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு
அவளை
நான்
இறுகத்
தழுவி,
அது
அவளுக்கு
வருத்தம்
தருமோ
என்று
மெல்லக்
கையை
விட
அதற்கே
பொன்
வளையங்களை
அணிந்த
அப்பேதையின்
நெற்றியின்
நிறம்
ஒளி
குறைந்ததே!
கலைஞர் உரை:
இறுகத்
தழுவியிருந்த
கைகளைக்
கொஞ்சம்
தளர்த்தவே
அந்தச்
சிறு
இடைவெளியையும்
பொறுத்துக்
கொள்ள
முடியாமல்
காதலியின்
நெற்றி,
பசலைநிறம்
கொண்டு
விட்டது.
English Explanation:
When I once loosened the arms that
were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow
👉குறள் 1239:
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
மு.வ உரை:
தழுவுதலுக்கு
இடையே
குளி்ந்த
காற்று
நுழைய,
காதலியின்
பெரிய
மழை
போன்ற
கண்கள்
பசலை
நிறம்
அடைந்தன.
சாலமன் பாப்பையா உரை:
(அப்படி)
நான்
கையை
மெல்ல
எடுத்ததால்
எங்கள்
தழுவலுக்கு
இடையே
குளிர்ந்த
சிறுகாற்று
நுழைந்தது.
இந்த
இடைவெளியைக்கூடப்
பொறுக்காமல்
அவளுடைய
பெரிய
குளிர்ந்த
கண்கள்
நிறம்
இழந்தன.
இப்போது
அவை
எப்படி
இருக்கின்றனவோ?
கலைஞர் உரை:
இறுகத்
தழுவியிருந்த
போது,
இடையே
குளிர்ந்த
காற்று
நுழைந்ததால்
அதையே
ஒரு
பிரிவு
எனக்
கருதிக்
காதலியின்
அகன்று
நீண்ட
கண்கள்
பசலை
நிறம்
கொண்டன.
English Explanation:
When but a breath of breeze
penetrated our embrace, her large cool eyes became sallow.
👉குறள் 1240:
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
மு.வ உரை:
காதலியின்
ஒளி
பொருந்திய
நெற்றி,
பசலை
நிறம்
உற்றதைக்
கண்டு,
அவளுடைய
க்ண்களில்
பசலையும்
துன்பம்
அடைந்து
விட்டது.
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த
சிறுகாற்று
இடையே
நுழைந்ததைக்
கண்டு
நெற்றி,
நிற
வேறுபாடு
அடைந்தது.
அதன்
மென்மையைப்
பார்த்து
வெட்கப்பட்ட
கண்ணும்
துன்பம்
உற்றதே!
கலைஞர் உரை:
பிரிவுத்
துயரால்
பிறைநுதல்
பசலை
நிறமடைந்ததைக்
கண்டு
அவளது
கண்களின்
பசலையும்
பெருந்துன்பம்
அடைந்துவிட்டது.
English Explanation:
Was it at the sight of what the bright forehead had done
that the sallowness of her eyes became sad?
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment