திருக்குறள் தொடர்கிறது…
131. புலவி
👉குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
மு.வ உரை:
( ஊடும்போது
அவர்
அடைகின்ற)
துன்ப
நோயைச்
சிறிது
காண்போம்;
அதற்காக
அவரைத்
தழுவாமலிருந்து
பிணங்குவாயாக.
சாலமன் பாப்பையா உரை:
நாம்
ஊடும்போது
அவர்
அடையும்
காதல்
வேதனையை
நாமும்
கொஞ்சம்
பார்க்கலாம்;
அதனால்
அவரைத்
தழுவாதே;
ஊடல்
செய்.
கலைஞர் உரை:
ஊடல்
கொள்வதால்
அவர்
துன்ப
நோயினால்
துடிப்பதைச்
சிறிது
நேரம்
காண்பதற்கு
அவரைத்
தழுவிடத்
தயங்கிப்
பிணங்குவாயாக.
English Explanation:
Let us witness awhile his keen
suffering; just feign dislike and embrace him not.
👉குறள் 1302:
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
மு.வ உரை:
உப்பு,
உணவில்
அளவோடு
அமைந்திருப்பதைப்
போன்றது
ஊடல்;
ஊடலை
அளவு
கடந்து
நீட்டித்தல்,
அந்த
உப்பு
சிறிதளவு
மிகுதியாக
இருப்பதைப்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
உணவின்
அளவிற்கு
ஏற்ப
உப்பின்
அளவு
அமைவதை
போல்,
கலவி
இன்பத்திற்கு
வேண்டும்
அளவிற்கு
ஏற்ப
ஊடல்
அமையட்டும்;
அதை
அளவு
கடந்து
கொஞ்சம்
நீட்டினாலும்,
உப்பின்
அளவைக்
கூட்டுவது
போல்
ஆகும்.
கலைஞர் உரை:
ஊடலுக்கும்
கூடலுக்கும்
இடையில்
உள்ள
காலம்
உணவில்
இடும்
உப்பு
போல்
ஓரளவுடன்
இருக்க
வேண்டும்
அந்தக்
கால
அளவு
நீடித்தால்
உணவில்
உப்பு
மிகுதியானதற்கு
ஒப்பாக
ஆகிவிடும்.
English Explanation:
A little dislike is like salt in
proportion; to prolong it a little is like salt a little too much.
👉குறள் 1303:
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.
மு.வ உரை:
தம்மோடு
பிணங்கியவரை
ஊடலுணர்த்தித்
தழுவாமல்
விடுதல்,
துன்பத்தால்
வருந்தியவரை
மேலும்
துன்ப
நோய்
செய்து
வரத்தினாற்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன்
ஊடல்
கொண்ட
மனைவியின்
ஊடலை
நீக்கிக்
கூடாமல்
போவது,
ஏற்கனவே
துன்பப்பட்டவர்களுக்கு
மேலும்
அதிகத்
துன்பத்தைக்
கொடுத்தது
போலாம்.
கலைஞர் உரை:
ஊடல்
கொண்டவரின்
ஊடல்
நீக்கித்
தழுவாமல்
விடுதல்
என்பது,
ஏற்கனவே
துன்பத்தால்
வருந்துவோரை
மேலும்
துன்பநோய்க்கு
ஆளாக்கி
வருத்துவதாகும்.
English Explanation:
For men not to embrace those who
have feigned dislike is like torturing those already in agony.
👉குறள் 1304:
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
மு.வ உரை:
பிணங்கியவரை
ஊடலுணர்த்தி
அன்பு
செய்யாமல்
இருத்தல்,
முன்னமே
வாடியுள்ள
கொடியை
அதன்
அடியிலேயே
அறுத்தல்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னுடன்
ஊடல்
கொண்ட
மனைவிக்கு
அவள்
ஊடலைத்
தெளிவுபடுத்தி,
அவளுடன்
கூடாமல்
போவது,
முன்பே
நீர்
இல்லாமல்
வாடிய
கொடியை
அடியோடு
அறுத்தது
போலாம்.
கலைஞர் உரை:
ஊடல்
புரிந்து
பிணங்கியிருப்பவரிடம்
அன்பு
செலுத்திடாமல்
விலகியே
இருப்பின்,
அது
ஏற்கனவே
வாடியுள்ள
கொடியை
அதன்
அடிப்பாகத்தில்
அறுப்பது
போன்றதாகும்.
English Explanation:
Not to reconcile those who have
feigned dislike is like cutting a faded creeper at its root.
👉குறள் 1305:
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.
மு.வ உரை:
நல்ல
பண்புகள்
அமைந்த
நல்ல
ஆடவர்க்கு
அழகு,
மலர்
போன்ற
கண்களை
உடைய
மகளிரின்
நெஞ்சம்
விளையும்
ஊடலின்
சிறப்பே
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல
குணங்களால்
உயர்ந்தவருக்கு
அழகு
தருவது,
பூப்போன்ற
கண்ணை
உடைய
மனைவியின்
மனத்தே
நடக்கும்
ஊடலின்
மிகுதியே.
கலைஞர் உரை:
மலர்
விழி
மகளிர்
நெஞ்சில்
விளையும்
ஊடலே
பண்பார்ந்த
நல்ல
காதலர்க்கு
அழகு
சேர்க்கும்.
English Explanation:
An increased shyness in those whose
eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
👉குறள் 1306:
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
மு.வ உரை:
பெரும்
பிணக்கும்
சிறு
பிணக்கும்
இல்லாவிட்டால்,
காமம்
மிகப்
பழுத்த
பழமும்
முற்றாத
இளங்காயும்
போல்
பயன்படாததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வளர்ந்த
ஊடலாகிய
துனியும்,
இளம்
ஊடலாகிய
புலவியும்
இல்லாது
போய்விட்டால்,
காதல்
நிறைந்த
இல்லறம்,
முதிர்ந்த
பழமும்
இளங்காயும்
போல்
ஆகிவிடும்.
கலைஞர் உரை:
பெரும்பிணக்கும்,
சிறுபிணக்கும்
ஏற்பட்டு
இன்பம்
தரும்
காதல்
வாழ்க்கை
அமையாவிட்டால்
அது
முற்றிப்
பழுத்து
அழுகிய
பழம்
போலவும்,
முற்றாத
இளம்
பிஞ்சைப்
போலவும்
பயனற்றதாகவே
இருக்கும்.
English Explanation:
Sexual pleasure, without prolonged
and short-lived dislike, is like too ripe, and unripe fruit.
👉குறள் 1307:
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
மு.வ உரை:
கூடியிருக்கும்
இன்பம்
இனிமேல்
நீட்டிக்காதோ
என்று
ஏங்கி
எண்ணுவதால்
ஊடியிருத்தலினும்
காதலர்க்கு
ஒருவகைத்
துன்பம்
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
இனிக்
கலவி
நீளுமோ
நீளாதோ
என்று
எண்ணுவதால்,
இன்பத்திற்கு
இன்றியமையாத
ஊடலிலும்
ஒரு
துன்பம்
உண்டு.
கலைஞர் உரை:
கூடி
மயங்கிக்
களித்திருக்கும்
இன்பமான
காலத்தின்
அளவு
குறைந்து
விடுமோ
என
எண்ணுவதால்
ஊடலிலும்
ஒருவகைத்
துன்பம்
காதலர்க்கு
உண்டு.
English Explanation:
The doubt as to whether intercourse
would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
👉குறள் 1308:
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி.
மு.வ உரை:
நம்மால்
இவர்
வருந்தினார்
என்று
அந்த
வருத்தத்தை
அறிகின்ற
காதலர்
இல்லாதபோது,
வருந்துவதால்
பயன்
என்ன?
சாலமன் பாப்பையா உரை:
இவர்
நமக்காக
வருந்தினார்
என்று
அவ்
வருத்தத்தை
அறியும்
அன்பரைப்
பெறாதபோது,
ஒருவர்
வருந்துவதால்
என்ன
பயன்?
கலைஞர் உரை:
நம்மை
நினைத்தல்லவோ
வருந்துகிறார்
என்பதை
உணர்ந்திடும்
காதலர்
இல்லாத
போது
வருந்துவதால்
என்ன
பயன்?
English Explanation:
What avails sorrow when I am without a wife who can
understand the cause of my sorrow?
👉குறள் 1309:
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
மு.வ உரை:
நீரும்
நிழலை
அடுத்திருப்பதே
இனிமையானது;
அதுபோல்,
ஊடலும்
அன்பு
செலுத்துவோரிடத்தில்
கொள்வதே
இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட
வெயிலுக்குக்
கீழ்
இராமல்
நிழலுக்குக்
கீழ்
இருப்பது
இனிமை;
ஊடலும்
அன்புள்ளவரிடம்
மட்டுமே
இனிமை
ஆனது.
கலைஞர் உரை:
நிழலுக்கு
அருகில்
உள்ள
நீர்தான்
குளிர்ந்து
இனிமையாக
இருக்கும்;
அதுபோல
அன்புள்ளவர்களிடம்
கொள்ளும்
ஊடல்தான்
இன்பமானதாக
இருக்கும்.
English Explanation:
Like water in the shade, dislike is
delicious only in those who love.
👉குறள் 1310:
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.
மு.வ உரை:
ஊடல்
கொண்டபோது
உணர்த்தி
மகிழ்விக்காமல்
வாட
விடுகின்றவரோடு
என்
நெஞ்சம்
கூடியிருப்போம்
என்று
முயல்வதற்குக்
காரணம்
அதன்
ஆசையே.
சாலமன் பாப்பையா உரை:
ஊடி,
என்
நெஞ்சை
வாட
விட்டிருப்பவனோடும்
கூடுவோம்
என்று
என்
நெஞ்சம்
முயல்வதற்குக்
காரணம்
ஆசையே.
கலைஞர் உரை:
ஊடலைத்
தணிக்காமல்
வாடவிட்டு
வேடிக்கை
பார்ப்பவருடன்
கூடியிருப்போம்
என்று
என்
நெஞ்சம்
துடிப்பதற்கு
அதன்
அடங்காத
ஆசையே
காரணம்.
English Explanation:
It is nothing but strong desire that makes her mind unite with me
who can leave her to her own dislike.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment