திருக்குறள் தொடர்கிறது…
132. புலவி
நுணுக்கம்
👉குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.
மு.வ உரை:
பரத்தமை
உடையாய்!
பெண்
தன்மை
உடையவர்
எல்லாரும்
தம்தம்
கண்களால்
பொதுப்
பொருளாகக்
கொண்டு
நுகர்கின்றார்கள்;
ஆகையால்
உன்
மார்பைப்
பொருந்தேன்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்
விரும்பியே!
நீ
வீதி
வழி
வரும்
குணங்கெட்ட
பெண்கள்
எல்லாரும்
உன்
மார்பைத்
தம்
கண்ணால்
பொதுவாக
உண்பர்;
அதனால்
அவர்களின்
எச்சிலாகிய
உன்
மார்பை
நான்
இனிச்
சேரேன்.
கலைஞர் உரை:
பெண்ணாக
இருப்போர்
எல்லோருமே,
பொதுவாக
நினைத்துக்
கண்களால்
உண்பதால்
கற்பு
நெறிகெட்ட
உன்
பரந்த
மார்பைப்
பாவை
நான்
தழுவ
மாட்டேன்.
English Explanation:
You are given to prostitution; all
those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I
will not embrace you.
👉குறள் 1312:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
மு.வ உரை:
காதலரோடு
ஊடல்
கொண்டிருந்தோமாக,
யாம்
தம்மை
நெடுங்காலம்
வாழ்க
என்று
வாய்
திறந்து
சொல்லுவோம்
என
நினைத்து
அவர்
தும்மினார்.
சாலமன் பாப்பையா உரை:
நான்
அவரோடு
ஊடிப்
பேசாமல்
இருந்தேன்;
நீடு
வாழ்க,
என்று
சொல்லி
அவரோடு
பேசுவேன்.
என்று
எண்ணி,
வேண்டும்
என்றே
தும்மினார்!
நானா
பேசுவேன்?
(ஆனாலும்
வாழ்த்தினாள்)
கலைஞர் உரை:
ஊடல்
கொண்டிருந்தபோது
அவர்
தும்மினார்;
ஊடலை
விடுத்து
அவரை
``நீடுவாழ்க''
என
வாழ்த்துவேன்
என்று
நினைத்து.
English Explanation:
When I continued to be sulky he
sneezed and thought I would (then) wish him a long life.
👉குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
மு.வ உரை:
கிளைகளில்
மலர்ந்த
மலர்களைச்
சூடினாலும்,
நீர்
இந்த
அழகை
யாரோ
ஒருத்திக்கு
காட்டுவதற்காகச்
சூடினீர்
என்று
சினம்
கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு
மாற்றம்
கருதி,
ஒருமுறை,
மரத்திலே
மலர்ந்த
பூவை
மாலையாக்கிச்
சூடினேன்.
அதற்கு
அவள்,
நீர்
விரும்பும்
எவளுக்கோ
அடையாளம்
காட்டிச்
சூடினீர்
என்று
சினந்து
நின்றாள்.
கலைஞர் உரை:
கிளையில்
மலர்ந்த
பூக்களைக்
கட்டி
நான்
அணிந்து
கொண்டிருந்தாலும்,
வேறொருத்திக்குக்
காட்டுவதற்காகவே
அணிந்திருக்கிறீர்
எனக்கூறி
சினம்
கொள்வாள்.
English Explanation:
Even if I were adorned with a
garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
👉குறள் 1314:
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
மு.வ உரை:
யாரையும்
விட
நாம்
மிக்க
காதல்
கொண்டிருக்கிறோம்
என்று
சொன்னேனாக;
யாரை
விட...?
யாரை
விட..?
என்று
கேட்டு
ஊடல்
கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
காதலர்
எவரைக்
காட்டிலும்
நாம்
மிகுந்த
காதல்
உடையவர்கள்
என்றேன்;
அதற்கு
அவள்
நான்
பலரையும்
காதலிப்பதாகவும்,
அவர்களுள்
இவள்மீது
அதிகக்
காதல்
உடையவன்
என்று
சொன்னதாகவும்
எண்ணி,
எவளைக்
காட்டிலும்
எவளைக்
காட்டிலும்
என்
மீது
காதல்
உடையீர்
என்று
ஊடினாள்.
கலைஞர் உரை:
``யாரைக்
காட்டிலும்
உன்னிடம்
நான்
காதல்
மிகுதியாகக்
கொண்டுள்ளேன்''
என்று
இயல்பாகச்
சொன்னதைக்
கூடக்
காதலி
தவறாக
எடுத்துக்
கொண்டு
``யாரைக்காட்டிலும்
யாரைக்
காட்டிலும்''
எனக்
கேட்டு
ஊடல்
புரியத்
தொடங்கி
விட்டாள்.
English Explanation:
When I said I loved her more than
any other woman, she said "more than others, yes, more than others,"
and remained sulky.
👉குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
மு.வ உரை:
இப்பிறப்பில்
யாம்
பிரிய
மாட்டோம்
என்று
காதலியிடம்
சொன்னேனாக,
இனி
வரும்
பிறப்பில்
பிரிவதாக
உணர்ந்து
கண்
நிறையக்
கண்ணீர்
கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
மிகுதியில்
இந்தப்
பிறவியில்
நான்
உன்னைப்
பிரியேன்
என்று
சொன்னேன்;
அப்படி
என்றால்
அடுத்த
பிறவியில்
பிரியப்போவதாக
எண்ணிக்
கண்
நிறைய
நீரினைக்
கொண்டாள்.
கலைஞர் உரை:
``இப்பிறப்பில்
யாம்
பிரியமாட்டோம்''
என்று
நான்
சொன்னவுடன்
``அப்படியானால்
மறு
பிறப்பு
என
ஒன்று
உண்டோ?
அப்போது
நம்மிடையே
பிரிவு
ஏற்படுமெனக்
கூறுகிறாயா?''
எனக்
கேட்டு
கண்கலங்கினாள்
காதலி.
English Explanation:
When I said I would never part from
her in this life her eyes were filled with tears.
👉குறள் 1316:
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.
மு.வ உரை:
நினைத்தேன்
என்று
கூறினேன்;
நினைப்புக்கு
முன்
மறப்பு
உண்டு
அன்றோ?
ஏன்
மறந்தீர்
என்று
என்னைத்
தழுவாமல்
ஊடினாள்.
சாலமன் பாப்பையா உரை:
எப்போதும்
உன்னைத்தான்
எண்ணினேன்
என்றேன்.
சில
சமயம்
மறந்து
ஒரு
சமயம்
நினைத்ததாக
எண்ணி
அப்படியானால்
என்னை
இடையில்
மறந்திருக்கிறீர்
என்று
சொல்லித்
தழுவத்
தொடங்கியவள்,
விட்டுவிட்டு
ஊடத்
தொடங்கினாள்.
கலைஞர் உரை:
``உன்னை
நினைத்தேன்''
என்று
காதலியிடம்
சொன்னதுதான்
தாமதம்;''
அப்படியானால்
நீர்
என்னை
மறந்திருந்தால்தானே
நினைத்திருக்க
முடியும்?''
எனக்கேட்டு
``ஏன்
மறந்தீர்?''
என்று
அவள்
ஊடல்
கொண்டாள்.
English Explanation:
When I said I had remembered her,
she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
குறள் 1317:
👉வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
மு.வ உரை:
யான்
தும்மினேனாக;
அவள்
நூறாண்டு
என
வாழ்த்தினாள்;
உடனே
அதை
விட்டு
யார்
நினைத்ததால்
தும்மினீர்?
என்று
கேட்டு
அழுதாள்?
சாலமன் பாப்பையா உரை:
நான்
தும்ம,
அவள்
இயல்பாகவே
வாழ்த்தினாள்;
அப்படி
வாழ்த்தியவளே
மறுபடியும்
நீர்
இப்போது
எவள்
உம்மை
நினைத்ததால்
தும்மினீர்,
என்று
கேட்டு
ஊடி
அழுதாள்.
கலைஞர் உரை:
தும்மினேன்;
வழக்கப்படி
அவள்
என்னை
வாழ்த்தினாள்
உடனே
என்ன
சந்தேகமோ
``யார்
உம்மை
நினைத்ததால்
தும்மினீர்''
என்று
கேட்டு,
முதலில்
அளித்த
வாழ்த்துக்கு
மாறாக
அழத்
தொடங்கிவிட்டாள்.
English Explanation:
When I sneezed she blessed me, but
at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did
you sneeze?"
👉குறள் 1318:
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
மு.வ உரை:
அவளுடைய
ஊடலுக்கு
அஞ்சி
யான்
தும்மலை
அடக்கிக்
கொள்ள
உம்மவர்
உம்மை
நினைப்பதை
எமக்குத்
தெரியாமல்
மறைக்கின்றீரோ
என்று
அழுதாள்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தமுறை
தும்மல்
வர
அதனை
வெளிப்படுத்தாமல்
நான்
அடக்கினேன்;
அதைப்
பார்த்து
யாரோ
உமக்கு
வேண்டியவர்கள்
உம்மை
நினைப்பதை
நான்
அறிந்துவிடக்கூடாது
என்று
எனக்கு
மறைக்கிறீரோ,
என்று
ஊடி
அழுதாள்.
கலைஞர் உரை:
ஊடல்
கொள்வாளோ
எனப்
பயந்து
நான்
தும்மலை
அடக்கிக்
கொள்வதைப்
பார்த்த
அவள்
``ஓ''
உமக்கு
நெருங்கியவர்
உம்மை
நினைப்பதை
நான்
அறியாதபடி
மறைக்கிறீரோ?''
எனக்
கேட்டு
அழுதாள்.
English Explanation:
When I suppressed my sneezing, she
wept saying, "I suppose you (did so) to hide from me your own people's
remembrance of you"
👉குறள் 1319:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
மு.வ உரை:
ஊடியிருந்தபோது
அவளை
ஊடல்
உணர்த்தி
மகிழ்வித்தாலும்,
நீர்
மற்ற
மகளிர்க்கும்
இத்தன்மையானவராக
ஆவீர்
என்று
சொல்லிச்
சினம்
கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடியிருந்தபோது
அவளை
ஊடல்
உணர்த்தி
மகிழ்வித்தாலும்.
நீர்
மற்ற
மகளிர்க்கும்
இத்தன்மையானவராக
ஆவீர்
என்று
சொல்லி
சினம்
கொள்வாள்.
கலைஞர் உரை:
நான்
பணிந்து
போய்
அவள்
ஊடலை
நீக்கி
மகிழ்வித்தாலும்,
உடனே
அவள்
``ஓ!
நீர்
இப்படித்தான்
மற்ற
பெண்களிடமும்
நடந்து
கொள்வீரோ?''
என்று
சினந்தெழுவாள்.
English Explanation:
'I see', quoth she, 'to other folks
How you are wondrous kind' Even when I try to remove her dislike, she is
displeased and says, "This is the way you behave.
👉குறள் 1320:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்யாருள்ளி நோக்கினீர் என்று.
மு.வ உரை:
அவளுடைய
அழகை
நினைத்து
அமைதியாக
இருந்து
நோக்கினாலும்,
நீர்
யாரை
நினைத்து
ஒப்புமையாக
எல்லாம்
பார்க்கின்றீர்?
என்று
சினம்
கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
என்
பேச்சிலும்,
செயலிலும்
அவள்
கோபம்
கொள்வதால்,
பேசாமல்,
அவள்
உறுப்புகளின்
அழகை
எண்ணி
அவற்றையே
பார்த்திருப்பேன்.
அதற்கு
எவள்
உறுப்புப்
போல்
இருக்கிறதென்று
என்
மேனியைப்
பார்க்கிறீர்.
என்று
சொல்லிச்
சினப்பாள்.
கலைஞர் உரை:
ஒப்பற்ற
அவளுடைய
அழகை
நினைத்து
அவளையே
இமை
கொட்டாமல்
பார்த்துக்
கொண்டிருந்தாலும்,
யாருடன்
என்னை
ஒப்பிட்டு
உற்றுப்
பார்க்கிறீர்
என்று
கோபம்
கொள்வாள்.
English Explanation:
Even when I look on her contemplating (her beauty), she is
displeased and says, "With whose thought have you (thus) looked on my
person?"
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
No comments:
Post a Comment