சிரிக்க.... சில நிமிடம்

                                                  நகைச்சுவை=ஜோக்ஸ்



-01-

காதலி: நீ எப்போதும் late ஆகிறாய்!

காதலன்: உன் படத்தை பார்த்துக்கொண்டு என்னை மறந்திடுகிறேன். அதனால் !

 

-02-

டாக்டர்: "தினமும் ஒரு வேளை கஞ்சிதான் குடிக்க வேண்டும்."

நோயாளி: "எத்தனை நாளைக்கு டாக்டர்?"

டாக்டர்: "என்னிடம் செய்துகொள்ளும் வைத்தியத்திற்குப் பணம் கொடுக்கும் வரை. அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்?"

 

-03-

மனைவி தன் கணவனிடம் கேட்டாள்: "எனக்கு வயதாகி, வெயிட் போட்டாலும் இதே மாதிரி அன்பாக இருப்பீர்களா?"

கணவன் சொன்னான்: "இப்போவே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன்!"

 

-04-

"உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க?"

"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"

 

-05-

மனைவி :   எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும்,  வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்  வாங்கியிருக்கீங்களே ஏன் ?

கணவன்:   இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும் . ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்!

 

-06

கணவன் ஆபிஸிலிருந்து போனில் மனைவியிடம் தொடர்பு கொண்டு

பங்கஜம், இன்னைக்கு முதன் முறையா சமையல் பண்ற... ஒத்துக்கறேன். அதுக்காக ஆபிஸ் டைமில் போன் பண்ணி வத்தக்குழம்பு எப்படி வைக்கிறதுன்னு கேட்டா எப்படி சொல்றது?

 

-07-

மனைவி = என் பிறந்த நாளைக்கு பால் பாயாசம் மட்டும் போதும் என்று கூறுகிறீர்களே ஏன்?

கணவன் = அன்றைக்கு மட்டுமாவது அதை நீ செய்யமாட்டாயா என்றுதான்.

 

-08-

கணவன் = என்ன விமலா திடீர்னு நீயே சமையல் பண்றேங்கற?

மனைவி = உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதான்....

 

-09-

மனைவி கணவனிடம்

எத்தனை தடவை சொல்றது ... பையன் ஹோம் ஒர்க்கை ஆபிசில் தூங்கிக்கிட்டே செய்யாதீங்கன்னு... பாருங்க... டீச்சர் பையனோட டயரியில.. ''பார்த்து தூங்காம ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாடான்னு''' எழுதியிருக்காங்க..

 

-10-

கணவன் = எதுக்கு விமலா .... பத்து தேயிலைக் கரண்டியை கையில எடுக்கிறாய்?

மனைவி = சாம்பாருக்கு பத்துக் கரண்டி  மிளகாய்தூள் போடனும்னு போட்டிருக்கே அதான்...

 

-11-

இன்ஸ்பெக்டர் ஏன் கவலையா இருக்கார்?

நம்ம கேடி கபாலி அவர் வீட்டிலேயே திருடிட்டு அவர்கிட்டயே மாமூல் கொடுத்தானாம். இவரும் பழக்க தோஷத்துல வாங்கிட்டாராம். இப்ப ஃபீல் பண்றார்.

 

-12-

போலிஸ் 1. என்ன அண்ணே ஒருத்தனை வாய ஊதச்சொல்லி பார்த்திட்டு அழுதிட்டு வர்றீங்க

போலிஸ் 2. எவனுமே கள்ளச்சாராயம் குடிக்க மாட்டேங்கறானுங்க பின்ன எப்படிய்யா மாமூல் வரும்.

 

-13-

இன்ஸ்பெக்டர் : யோவ் கான்ஸ்டபிள் 502 ன்னா என்னய்யா ஜெயிலுக்குள்ளயிருக்கிற கேடி உனக்கு  சல்யூட் அடிக்கிறான்..

கான்ஸ்டபிள் : எனக்கும் அவனுக்கும் ஒரே நம்பர் சார்.. யூனிபார்ம் தான் வேற.... அதான் சார்.

 

-14-[ஊழல் தேசம்]

மேடையில் (தலைவர் தொண்டனை பார்த்து)

எத்தனை மாலைக்கு பணம்  கொடுத்தே

தொண்டன் : பதினைந்து மாலைக்கு தலைவரே

தலைவர் : பின்ன எப்படிய்யா பத்து மாலைதான் எண்டு பில்  வந்திருக்கு?

தொண்டன் :[புன்னகையுடன்]அது பில் ஐயா , ஆனால் வழமைபோல 5 மாலை தானே தேவையென்று 5 மாலை தான் வந்திருக்கு தலைவரே 

 

-15-

அரசியல்வாதி மேடையில்

நான் மழைக்காக பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியது கிடையாது. உண்மைதான்.. காரணம் எப்பொழுதும் நான் குடையுடன்தான் செல்வேன் என்பதை மாற்றுக்கட்சி தோழருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

-16-

ஒருவர்  : கோயில் கட்ட 500 ரூபா போதுமா? எப்படி?

மற்றவர் : முதல்ல ஒரு  உண்டியலும் , ஒரு சூலமும் வைத்தாலே போதுமுங்க. அப்புறம் உண்டியல் பணத்திலயே  கோபுரமும் சிலைகளும் வந்துடுங்க.

 

-17-

மனைவி:என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது?

கணவன்:அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?

மனைவி:உங்க அம்மாவைத்தான்.

 

-18-

பெண் 1    என்னது... உங்க மாமியார் கால்ல விழுந்ததுக்கு      கோவிச்சுக்கிட்டாங்களா?

பெண் 2    ஆமா.... அவங்க கால்ல விழுந்தது, என் கையில இருந்த     அம்மிக்குழவி!

 

-19-

பெண் 1. என் புருஷன் சாமியாராகப் போறார்ன்னு தோணுதுடி,

பெண்2. எப்படி சொல்றே?

பெண்1. சண்டைக்குப்பின்,' என் கால்ல உன்னை விழ வைக்கிறேன்டி' ன்னு கோவமா சொல்லிட்டு போயிட்டார்டீ.

 

-20-

பிச்சை  1 :

நேத்து ராத்திரி முழுக்க உன்னை காணாமே . . . எங்க போயிருந்த ?

 

பிச்சை  2 : அதுவா . .ராத்திரி நான் தாஜ்ஹோட்டலில டின்னர் சாப்பிட போயிருந்தேன். .

 

பிச்சை  1 : என்னது . . . . தாஜ்ஹோட்டல்ல டின்னரா! எப்புடி?

 

பிச்சை  2 : நேத்து ஒரு புண்ணியவான் 100 ரூபாய் கொடுத்தாரு. .நேரா ஹோட்டலுக்குப் போனேன் . 1000 ரூபாய்க்கு சாப்பாடு ஆர்டர் பண்ணினேன். சாப்பிட்டதும் பில் வந்துச்சா. . எங்கிட்ட பணம் இல்லேன்னு சொன்னேன் .

உடனே போலீசுக்கு போன் பண்ணி , போலீஸ்காரன்கிட்ட என்னை ஒப்படைச்சான் . ஹோட்டல விட்டு வெளிய வந்ததும் 50 ரூபாய அவன்கிட்ட கொடுத்தேன் . என்ன விட்டுட்டான் . எப்பூடீ ???

 

பிச்சை  1:………!!!!

 

தொகுப்பு::செ . மனுவேந்தன்

No comments:

Post a Comment