திருக்குறள் தொடர்கிறது…
133. ஊடலுவகை
👉குறள் 1321:
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு.
மு.வ உரை:
அவரிடம்
தவறு
ஒன்றும்
இல்லையானலும்,
அவரோடு
ஊடுதல்,
அவர்
நம்மேல்
மிகுதியாக
அன்பு
செலுத்துமாறு
செய்ய
வல்லது.
சாலமன் பாப்பையா உரை:
அவரிடம்
தவறே
இல்லை
என்றாலும்,
அவர்
என்னிடம்
மிகுந்த
அன்பைச்
செலுத்தும்படி
செய்யவல்லது
ஊடல்.
கலைஞர் உரை:
எந்த
தவறும்
இல்லாத
நிலையிலும்கூட
காதலர்க்கிடையே
தோன்றும்
ஊடல்,
அவர்களின்
அன்பை
மிகுதியாக
வளர்க்கக்
கூடியது.
English Explanation:
Although my husband is free from
defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
👉குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
மு.வ உரை:
ஊடுதலால்
உண்டாகின்ற
சிறிய
துன்பம்,
காதலர்
செய்கின்ற
நல்ல
அன்பு
வாடிவிடக்
காரணமாக
இருந்தாலும்
பெருமை
பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடல்
காரணமாக
என்னிடம்
தோன்றும்
சிறு
துன்பத்தினால்
அவர்
என்மீது
காட்டும்
பேரன்பு
வாடினாலும்
பெருமை
பெறும்.
கலைஞர் உரை:
காதலரிடையே
மலர்நதுள்ள
நல்லன்பு
சற்று
வாடுவதற்கு,
ஊடுதல்
காரணமாக
இருந்தாலும்
அதனால்
விளைகிற
சிறிய
துன்பம்
பெருமையுடையதேயாகும்.
English Explanation:
His love will increase though it may
(at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
👉குறள் 1323:
புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
மு.வ உரை:
நிலத்தோடு
நீர்
பொருந்தி
கலந்தாற்
போன்ற
அன்புடைய
காதலரிடத்தில்
ஊடுவதை
விட
இன்பம்
தருகின்ற
தேவருலம்
இருக்கின்றதோ.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தோடு
நீர்
கலந்தாற்போன்ற
ஒற்றுமையை
உடைய
என்னவரோடு
ஊடிப்
பெறும்
இன்பத்தைப்
போலத்
தேவர்கள்
நாட்டு
இன்பம்
இருக்குமோ?
கலைஞர் உரை:
நிலத்தோடு
நீர்
கலந்தது
போல
அன்புடன்
கூடியிருக்கும்
காதலரிடத்தில்
ஊடல்
கொள்வதை
விடப்
புதிய
உலகம்
வேறொன்று
இருக்க
முடியுமா?
English Explanation:
Is there a celestial land that can please like the feigned
dislike of those whose union resembles that of earth and water?
👉குறள் 1324:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
மு.வ உரை:
காதலரைத்
தழுவிக்கொண்டு
விடாமலிருப்பதற்கு
காரணமான
ஊடலுள்,
என்னுடைய
உள்ளத்தை
உடைக்க
வல்ல
படை
தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
என்னவரைத்
தழுவிக்
கொண்டு,
விடாமல்
இருப்பதற்குக்
காரணமாகிய
ஊடலில்
அதற்குமேலே
சென்று
என்
உறுதியையும்
உடைக்கும்
ஆயுதம்
இருக்கிறது.
கலைஞர் உரை:
இறுகத்
தழுவி
இணை
பிரியாமல்
இருப்பதற்குக்
காரணமாக
ஊடல்
அமைகிறது
அந்த
ஊடலில்தான்
என்
உள்ளத்து
உறுதியைக்
குலைக்கும்
படைக்கலனும்
இருக்கிறது.
English Explanation:
In prolonged dislike after an
embrace there is a weapon that can break my heart.
👉குறள் 1325:
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
மு.வ உரை:
தவறு
இல்லாத
போதும்
ஊடலுக்கு
ஆளாகித்
தாம்
விரும்பும்
மகளிரின்
மெல்லிய
தோள்களை
நீங்கி
இருக்கும்
போது
ஓர்
இன்பம்
உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
ஆண்கள்
மீது
தவறு
இல்லை
என்றாலும்
தவறு
செய்தவராகவே
நின்று,
மனைவியால்
ஊடப்பட்டு
தாம்
விரும்பும்
மனைவியின்
மெல்லிய
தோள்களைக்
கூடப்
பெறாதபோது,
அந்த
ஊடலிலும்
ஓர்
இன்பம்
இருக்கிறது.
கலைஞர் உரை:
தவறே
செய்யாத
நிலையிலும்கூட
தன்னுள்ளம்
கொள்ளை
கொண்டவளின்
ஊடலுக்கு
ஆளாகி
அவளது
மெல்லிய
தோள்களைப்
பிரிந்திருப்பதில்
ஓர்
இன்பம்
இருக்கிறது.
English Explanation:
Though free from defects, men feel
pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
👉குறள் 1326:
உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
மு.வ உரை:
உண்பதை
விட
முன்
உண்ட
உணவுச்
செரிப்பது
இன்பமானது,
அதுபோல்
காமத்தில்
கூடுவதைவிட
ஊடுதல்
இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
உண்பதைவிட
உண்டது
செரிப்பது
இனியது;
அதுபோலக்,
கூடிக்
கலப்பதை
விட
ஊடுவது
காதலுக்கு
இனியது.
கலைஞர் உரை:
உணவு
அருந்துவதைவிட,
அருந்திய
உணவு
செரிப்பதிலே
ஒரு
சுகம்
அதைப்போல்
உடலுறவைவிட
ஊடல்
கொள்வதிலேயே
காதலர்க்கு
ஒரு
சுகம்.
English Explanation:
To digest what has been eaten is
more delightful than to eat more; likewise love is more delightful in dislike
than intercourse.
👉குறள் 1327:
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
மு.வ உரை:
ஊடலில்
தோற்றவரே
வெற்றி
பெற்றவர்
ஆவர்,
அந்த
உண்மை,ஊடல்
முடிந்த
பின்
கூடிமகிழும்
நிலையில்
காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடலில்
தோற்றவரே
வெற்றி
பெற்றவர்
ஆவார்;
அந்த
வெற்றியைக்
கூடிப்
பெறும்
இன்பத்தில்
அறியலாம்.
கலைஞர் உரை:
ஊடல்
என்கிற
இனிய
போரில்
தோற்றவர்தான்
வெற்றி
பெற்றவராவார்
இந்த
உண்மை
ஊடல்
முடிந்து
கூடிமகிழும்
போது
உணரப்படும்.
English Explanation:
160 Those are conquerors whose
dislike has been defeated and that is proved by the love (which)
👉குறள் 1328:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.
மு.வ உரை:
நெற்றி
வியர்க்கும்
படியாக
கூடுவதில்
உளதாகும்
இனிமையை
ஊடியிருந்து
உணர்வதன்
பயனாக
இனியும்
பெறுவோமோ.
சாலமன் பாப்பையா உரை:
நெற்றி
வியர்க்கும்படி
கலவியில்
தோன்றும்
சுகத்தை
இன்னுமொரு
முறை
இவளுடன்
ஊடிப்
பெறுவோமா?
கலைஞர் உரை:
நெற்றியில்
வியர்வை
அரும்பிடக்
கூடுவதால்
ஏற்படும்
இன்பத்தை,
மீண்டும்
ஒருமுறை
ஊடல்
தோன்றினால்,
அதன்
வாயிலாகப்
பெற
முடியுமல்லவா?
English Explanation:
Will I enjoy once more through her dislike, the pleasure of
that love that makes her forehead perspire?
👉குறள் 1329:
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
மு.வ உரை:
காதலி
இன்னும்
ஊடுவாளாக,
அந்த
ஊடலைத்
தணிக்கும்
பொருட்டு
யாம்
இரந்து
நிற்குமாறு
இராக்காலம்
இன்னும்
நீட்டிப்பதாக.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிமிகும்
அணிகளை
அணிந்த
இவள்
இன்னும்
என்னோடு
ஊடட்டும்,
அப்போது
அதிக
நேரம்
இருக்கும்படி
நான்
வேண்டிக்கொள்ள,
இந்த
இரவு
விடியாது
நீளட்டும்.
கலைஞர் உரை:
ஒளி
முகத்தழகி
ஊடல்
புரிவாளாக;
அந்த
ஊடலைத்
தீர்க்கும்
பொருட்டு
நான்
அவளிடம்
இரந்து
நிற்கும்
இன்பத்தைப்
பெறுவதற்கும்
இராப்பொழுது
இன்னும்
நீடிப்பதாக.
English Explanation:
May the bright-jewelled one feign
dislike, and may the night be prolonged for me to implore her!
👉குறள் 1330:
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
மு.வ
உரை:
காமத்திற்கு
இன்பம்
தருவது
ஊடுதல்
ஆகும்,
ஊடல்
முடிந்த
பின்
கூடித்
தழுவப்
பெற்றால்
அந்த
ஊடலுக்கு
இன்பமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
காதல்
நுகர்ச்சிக்கு
இன்பம்
ஊடுதலே
அவ்வூடலுக்கும்
இன்பம்,
அளவு
அறிந்து
ஊடலை
நீக்கிக்
கூடித்
தழுவுதலே.
கலைஞர் உரை:
ஒருவருக்கொருவர்
செல்லமாகச்
சினங்கொண்டு
பிரிந்திருப்பது
எனப்படும்
ஊடல்,
இருவரும்
சேர்ந்த
பிறகு
காதல்
இன்பத்தை
அதிகமாகப்
பருகிட
உதவும்
எனவே
ஊடல்
கொள்வதே
ஒரு
இன்பமான
செயல்தான்.
English Explanation:
Dislike adds delight to love; and a
hearty embrace (thereafter) will add delight to dislike.
திருக்குறள் நிறைவு பெற்றது.
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
0 comments:
Post a Comment