- குறள் தீபஒளி
01:பிறந்தும்,இறந்தும்
குறள்வகை :குறட்டாழிசை
பிறந்தும் பயனிலார் புவிக்கே பாரமாய்
இறந்தும் இன்னலே இடுவார்.
விளக்கம்: பிறந்து யாருக்குமே பயனில்லாதவர்கள் , புவியில் இன்னல்கள் புரிந்து புவிக்குப் பாரமாக வாழ்ந்தவர்கள், செய்த அநீதியின் விளைவுகள் , அவர்கள் இறந்த பின்னரும் அவர்களின் சுற்றத்திற்கு துன்பம் விளைவித்துக் கொண்டிருக்கும்.
02:மனிதனா? விலங்கா?
குறள்வகை: வெண்செந்துறை
மனசுடையவனே மனிதன், மற்றோரெல்லாம்
வனவிலங்குகள் வகைப்படும்.
விளக்கம்: "மனசுடையவன்" என்றால் ஒருவர் அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் கொண்ட மனிதனாக மதிக்கப்படுகிறான். அம் மனம் அற்றவர்கள் விலங்குகள் வையினை சேர்ந்தவர்கள் என்பதேயாகும்.
03:இன்னொருவனைத் தேடல்
குறள்வகை :வெண்செந்துறை
இல்லறத்தானை நீங்கி இன்னொருவனை நாடல் இல்லாத இழிவினை இடும் .
விளக்கம்:ஒரு இல்லறமாக வாழ்பவரை விடுத்து இன்னொருவரை நாடுதல் அது ஆணாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன அவர்களுக்கு அதனால் எழும் அபகீர்த்தியும் ,மன உளைச்சலும் பெரும் இழிவினைக் கொடுக்கும்.
04: அரக்கரிலும்
குறள்வகை :குறட்டாழிசை
இரக்கமில்லாதவர், இன்சொல் இலாதவரென்றும்
அரக்கரிலும் அவர் அஞ்சப்படுவார்.
விளக்கம்:ஒரு மனிதனிடம் இரக்கம் (கருணை) இல்லாமல், இனிமையான வார்த்தைகள் பேசும் பண்பும் இல்லையெனில், அவர் அரக்கரைக் கூடவிட ஒரு பயங்கரமானவனாகவே தெரிகிறார்.
05: மடையர்
குறள்வகை :குறட்டாழிசை
மதிப்பாரை மதியாது மிதிப்பார், புவியில்
மதியிலார் எனும் மடையராம்.
விளக்கம்:மற்றவரை மதிப்பவர் என்று அறியப்பட்ட நபரை மதிக்காமல், அவமதித்து கீழே தள்ளி நடக்கிறவர்,
இந்த உலகில் மதிக்கத் தகுந்த அறிவும் பண்பும் இல்லாதவர் என்று கூறப்படும் மடையர் (அறியாமை உள்ளவர், அறநெறி இல்லாதவர்) ஆகிறார்.
06.துடிப்பு
குறள்வகை :வெண்செந்துறை
துடிக்கும் போது திரும்பியும் பாராமனிதர்கள்
துடிப்பு ஓய்ந்தபின் துடிப்பதில் பயனிலை.
விளக்கம்:ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவனை மதிக்காமல் விட்டுவிட்டு, அவன் இறந்த பிறகு வருத்தப்பட்டும், புகழ்ந்தும், மலர்வளையமும் நினைவஞ்சலியும் செலுத்தினால் அது பயனற்றது. உயிரோடிருக்கும் போதே அன்பும் மரியாதையும் காண்பிக்க வேண்டும் என்பதே இதன் முக்கியமான செய்தி.
தொழிலாளர் தினமாகிய -மே1
:திருக்குறள் thirukkural ,வெண்செந்துறை , குறட் டாழிசை ,விகற்பா ,கலித்தாழிசை ,t thaththuvam
மிகவும் நன்று
ReplyDelete