வாழ்க்கை த்தத்துவம் .

  • குறள் தீபஒளி  
  • 01:பிறந்தும்,இறந்தும்

    குறள்வகை :குறட்டாழிசை

    பிறந்தும் பயனிலார் புவிக்கே பாரமாய்

    இறந்தும் இன்னலே இடுவார்.

    விளக்கம்: பிறந்து யாருக்குமே பயனில்லாதவர்கள் , புவியில் இன்னல்கள் புரிந்து புவிக்குப் பாரமாக வாழ்ந்தவர்கள், செய்த அநீதியின் விளைவுகள்  , அவர்கள் இறந்த பின்னரும் அவர்களின் சுற்றத்திற்கு துன்பம் விளைவித்துக் கொண்டிருக்கும்.

     

    02:மனிதனா? விலங்கா?

    குறள்வகை: வெண்செந்துறை

    மனசுடையவனே மனிதன், மற்றோரெல்லாம்

    வனவிலங்குகள் வகைப்படும்.

    விளக்கம்: "மனசுடையவன்" என்றால் ஒருவர்  அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் கொண்ட மனிதனாக மதிக்கப்படுகிறான். அம் மனம் அற்றவர்கள்  விலங்குகள் வையினை சேர்ந்தவர்கள் என்பதேயாகும்.

     

    03:இன்னொருவனைத் தேடல்

    குறள்வகை :வெண்செந்துறை

    இல்லறத்தானை நீங்கி இன்னொருவனை நாடல் இல்லாத இழிவினை இடும் .

    விளக்கம்:ஒரு இல்லறமாக வாழ்பவரை  விடுத்து இன்னொருவரை நாடுதல் அது ஆணாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன அவர்களுக்கு அதனால் எழும் அபகீர்த்தியும் ,மன உளைச்சலும் பெரும் இழிவினைக் கொடுக்கும்.


    04: அரக்கரிலும்

    குறள்வகை :குறட்டாழிசை

    இரக்கமில்லாதவர், இன்சொல் இலாதவரென்றும்

    அரக்கரிலும் அவர் அஞ்சப்படுவார்.

      விளக்கம்:ஒரு மனிதனிடம் இரக்கம் (கருணை) இல்லாமல், இனிமையான வார்த்தைகள் பேசும் பண்பும் இல்லையெனில், அவர் அரக்கரைக் கூடவிட ஒரு பயங்கரமானவனாகவே தெரிகிறார்.


    05: மடையர்

    குறள்வகை :குறட்டாழிசை

    மதிப்பாரை மதியாது மிதிப்பார், புவியில்

    மதியிலார் எனும் மடையராம்

    விளக்கம்:மற்றவரை மதிப்பவர் என்று அறியப்பட்ட நபரை மதிக்காமல், அவமதித்து கீழே தள்ளி நடக்கிறவர்,

    இந்த உலகில் மதிக்கத் தகுந்த அறிவும் பண்பும் இல்லாதவர் என்று கூறப்படும் மடையர் (அறியாமை உள்ளவர், அறநெறி இல்லாதவர்) ஆகிறார்.


  • 06.துடிப்பு

    குறள்வகை :வெண்செந்துறை

    துடிக்கும் போது திரும்பியும் பாராமனிதர்கள்

    துடிப்பு ஓய்ந்தபின் துடிப்பதில் பயனிலை.

    விளக்கம்:ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவனை மதிக்காமல் விட்டுவிட்டு, அவன் இறந்த பிறகு வருத்தப்பட்டும், புகழ்ந்தும், மலர்வளையமும் நினைவஞ்சலியும் செலுத்தினால் அது பயனற்றது. உயிரோடிருக்கும் போதே அன்பும் மரியாதையும் காண்பிக்க வேண்டும் என்பதே இதன் முக்கியமான செய்தி.


[ஏனையவும் மேற்காட்டிய முறையில் செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.]

கொடியவன் 



உள்ளத்தில் நல்ல உள்ளம்..

பசுத்தோல் போர்த்த..





கண்ணும்,காதும் ! 


குறையிலா வாழ்க்கை 






பண்பிலா அழகு...

வீழ்ந்தவனை மாடேறி .....

இறந்தாலும் வாழ்... 

ஆழ்துயர் அறி...

துயர் கால...

தாய்மொழி மற ...


குடியினால்...

கடன்பட்டார்....


அன்பிலார்.....
- வரிகள்: செல்லத்துரை, மனுவேந்தன் 




தொழிலாளர் தினமாகிய -மே1
:திருக்குறள் thirukkural ,வெண்செந்துறை , குறட் டாழிசை ,விகற்பா ,கலித்தாழிசை ,t thaththuvam 

1 comments:

  1. மிகவும் நன்று

    ReplyDelete