திருக்குறள்... -/117/-படர்மெலிந் திரங்கல்

திருக்குறள் தொடர்கிறது… 117. படர்மெலிந் திரங்கல் 👉குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும். மு.வ உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது. சாலமன் பாப்பையா உரை: என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது. கலைஞர் உரை: இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும். English...